Sri Mahavishnu Info: அர்த்தம் அறிந்து சொல்வோம் ஓம் நமோ நாராயணா எனும் அட்டாட்சரம் அர்த்தம் அறிந்து சொல்வோம் ஓம் நமோ நாராயணா எனும் அட்டாட்சரம்
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

அர்த்தம் அறிந்து சொல்வோம் ஓம் நமோ நாராயணா எனும் அட்டாட்சரம்

Sri Mahavishnu Info

🔯ஓம் நமோ நாராயணா என்பது அட்டாட்சரம். இதில் ஓம் என்பது ப்ரணவம். நமோ என்பது பல்லாண்டு. நாராயணா என்பது நமது பகவானின் திருநாமம்.

🔯இந்த அட்டாட்சரம் வேண்டியன அனைத்தையும் தரவல்லது. வேண்டுதலின்றியும் அன்றாடம் நாம் இந்த மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.

🔯இந்த மூன்று சொற்களின் பொருளினை விளக்குவதற்கும் நினைவில் நிறுத்துவதற்கும் ஸ்ரீ இராமாயணத்தின் மூன்று கதாபாத்திரங்களை எடுகோலாக கூறலாம்.

🔷லக்ஷ்மணன்.
🔷பரதன்.
🔷சத்ருக்கனன்.

🔯லக்ஷ்மணனின் பிறப்பின் பயனாக அவன் என்ன செய்தான்?பரதனின் பிறப்பின் பயனாக என்ன நிகழ்த்தினான்?சத்ருக்கனன் என்ன நிகழ்த்தி காட்டினான்?

🔯அவர்களின் செயல்களை புரிந்து கொண்டாலே ஓம் நமோ நாராயணா என்பதை இலகுவாக புரிந்துக்கொள்ள இயலும்.

🔴சேஷத்வம்
🔴பாரதந்த்ரியம்
🔴கைங்கர்யருசி

சேஷத்வம் 

🔯பெருமானுக்கு அடிமைப்பட்டிருத்தல். நான் எம்பெருமானுக்கே அடிமை என்று இருத்தல். ஆதிசேஷன் என்று கூறுகிறோமே. நான் எல்லா வகையிலும் பெருமானுக்கு அடிமை என்று அவனை சேஷியாக அதாவது ஆண்டானாக நாம் சேஷனாக அதாவது அடிமையாக இருத்தல்.

பாரதந்த்ரியம்

🔯நான் பகவானையே சார்ந்திருப்பவன். அவராலேயே காப்பாற்றப்படுபவன். அவரே தஞ்சம்.எனக்கு நான் பிரதானமல்ல. எனக்கு பகவானே பிரதானம். நான் என்னை காப்பாற்றிக்கொள்ள எந்த முயற்சியும் செய்வதில்லை. அதை பகவானே செய்கிறார். பகவான் சுதந்த்ரர். நாம் பாரதந்த்ரர் என்று வாழுதல்.

கைங்கர்யருசி

🔯தொண்டு செய்வதில் பேரார்வம். பகவானுக்கும் பகவத் அடியார்க்கும் தொண்டு செய்வதே கடன் என்று வாழுதல்.

🔯இம்மூன்று தத்துவங்களையும் ஒருவர் புரிந்து கொண்டாலே பெரும் வேதாந்த இரகசியம் வெளிச்சமாகிவிடும். பின் நாமும் இறைவனுக்கு அருகே செல்லப்போகின்றோம். அதுதானே நம் அனைவரினதும் அவா.

🔯இங்கே ஓம் நமோ நாராயணா என்ற அட்டாட்சரத்தில் 

ஓம் : சேஷத்வம்
நமோ : பாரதந்த்ரியம்
நாராயணா : கைங்கர்யருசி

என்றவாறு கொள்ள வேண்டும்.

🔯இதில் இராமன் பகவான். லக்ஷ்மண, பரத, சத்ருக்கனர்கள் எவ்வாறு இத்தத்தவத்தை விளக்கினர் என காண்போம்.

🔯முதலில் லக்ஷ்மணன். இராமபிரானுக்கு அடிமையாகவே இருந்தார். வனவாசம் என்றதும் கூடவே சென்றார். பதினான்கு ஆண்டுகள் ஊன், உறக்கமில்லை. தன்னை இராமபிரானின் அடிமையாகவே எண்ணி பணி செய்தார். இது சேஷத்வம்.

🔯அடுத்தது பரதன். நாட்டில் இரு என்றால் இருந்தார். காட்டிற்கு வா என்றால் வந்தார். இராஜ்யத்தை கவனிப்பாயாக என்றால் கவனித்தார். அவர் இராமபிரானிடம் எந்த பிடிவாதமும் பிடிக்கவில்லை. நானும் உடன் காட்டுக்கு வருவேன் என அடம் பிடிக்கவில்லை. எல்லாம் அவன் சொல்வதே சரி.நான் ஒன்றும் செய்வதில்லை. அவன் சொல் என் கடமை என்று வாழ்ந்தார். இது பாரதந்ரியம்.

🔯இறுதியாக கைங்கர்யருசி. சத்ருக்கனன் பரதனுக்கு தொண்டன். கைங்கர்யம் செய்வதே கடன். பகவானுக்கோ அல்லது பகவானின் அடியவனுக்கா. அதனால் பரதனின் தொண்டனாக வாழ்ந்தான் சத்ருக்கனன். பரதனின் உடைவாளைப்போல நிழலைப்போல எப்போதும் தொண்டாற்றினான்.

🔯ஆக இப்போது கூறுங்கள் ஓம் என்பதற்கு லக்ஷ்மணன் வாழ்வே சாட்சி. நமோ என்பதற்கு பரதனே சாட்சி. நாராயணா என்பதற்கு சத்ருக்கனன் சாட்சி.

🔯இப்போது இம்மூன்றையும் சேர்த்து நாம் தினம் பாராயணிக்கையில் நாம் பகவானிடம் என்ன சொல்கிறோம்.

🔯நான் உன் அடிமை. நான் உன்னையே சார்ந்திருக்கிறேன். நான் உனக்கு அடிமையாவது போலவே உன் அடியாருக்கும் அடிமை என்று கூறுகின்றோம்.

இனி பொருள் தெரிந்து உள்ளார்ந்த மனதோடு உறுதியோடு சொல்வோம்.....

ஓம் நமோ நாராயணா.
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚