Sri Mahavishnu Info: Sandhyavandanam - சந்தியாவந்தனம் Sandhyavandanam - சந்தியாவந்தனம்
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

Sandhyavandanam - சந்தியாவந்தனம்

Sri Mahavishnu Info
1.உபநயனம் ஆன அனைவரும் நித்யம் செய்ய வேண்டிய க்ரமம்.

2.சந்தியாவந்தனம் என்பது தேகம், ஆத்மா ஆகிய இரண்டுக்கும் ஆரோக்கியத்தை தரக்கூடிய செயல்.

3.சந்தியாவந்தனம் செய்வதனால் புண்ணியமோ பலனோ கிடையாது, செய்யாவிட்டால் கண்டிப்பாக பாவம் கிட்டும்.

4.சந்தியாவந்தனம் ஒரு நாளைக்கு மூன்று வேளைகளில் செய்தல் வேண்டும்.

5.இரவும் பகலும் சந்திக்கும் விடியற்காலை பொழுதில் சூரியோதயத்துக்கு முன் ப்ராத சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் (காலை மணி 5.00 முதல் 5.45 வரை).

6.சூரியன் உச்சி வானில் இருக்கும் பொழுதில் மாத்யானிகம் செய்தல் வேண்டும் (மதியம் 12.00 முதல் 12.30 வரை).

7.பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் சூரியன் அஸ்தமிக்கும் முன்பு சாயம் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் (மாலை 5.00 மணி முதல் 6.00 மணிக்குள்).

8.நாம் செய்யும் சந்தியாவந்தனம் அர்க்யம், ஜபம் வலிமையில் தான் சூரியனின் தேர் தங்கு தடையின்றி ஓட வேண்டும் என நாராயணன் பணித்துள்ளான். ஆகையால் இயற்கையை உய்ய வைத்து நாமும் உய்வோமே.

9.தினமும் நீராடி தேகத்தை தூய்மை செய்து கொள்கிறோம் ஆனால் மனதிற்கு?அதற்கு தான் ஆசமனம். அச்சுத, அனந்த, கோவிந்த என்று துவாதச திருநாமங்களை கூறி தீர்த்தத்தை பருகும் போது மனதும் வாக்கும் தூய்மை அடைகிறது.

10.ஆத்ம சக்தி நன்றாக இயங்க வேண்டும் என்றால் பிராண வாயு அதிகரித்து இருக்க வேண்டும். அதற்கு தான் பிராணாயாமம் என்கிற மூச்சு பயிற்சி. நாம் அவசர கதியில் மூச்சை இழுத்து விடுகிறோம் (சராசரியாக 16 முறை ஒரு நிமிடத்திற்கு). இதுவே பிராணாயாமம் தினமும் செய்து வர இந்த எண்ணிக்கை குறையும். எண்ணிக்கை குறைய பிராண வாயு நம் உடலில் அதிகரிக்கும், ஆத்ம சக்தி பலம் பெரும்.

11.அநேகம் பேர் இந்த வாக்கியத்தை அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்திருப்போம். நம் தலையில் இவ்வளவு நாள் தான் என்று பிரம்மன் எழுதிருக்கார், அது முடிந்து போயிற்று என்றால் கிளம்ப வேண்டியது தான் என்று. இது தவறான புரிதல்.

12.பிரம்மன் நாள் கணக்கெல்லாம் குறிப்பதில்லை இன்னும் துல்லியமாக சுவாச கணக்கு வைத்துள்ளார். ஒரு ஆத்மா இந்த ஜென்மத்தில் இவ்வளவு முறை சுவாசித்த உடன் கதை முடியட்டும் என்பது எம தர்மராஜனுக்கு இடப்பட்ட ஆணை.

13.எவ்வளவு சீக்கிரம் மூச்சை இழுத்து விட்டு கணக்கை முடிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்ப வேண்டியது தான். சுவாசத்தை கட்டுக்குள் வைக்க தெரிந்த மகான்கள் மட்டுமே அதிக நாள் ஜீவித்துள்ளனர்.

14.ஓம் என்கிற பிரணவம் ஸ்ரீமன் நாராயணனை குறிக்கும் அதோட சேர்த்து பூ:பூவ:சுவ:மஹ:ஜன:தப:சத்யம் என்று ஏழு லோகங்களுக்கும் தலைவன் என அவரை தியானித்து பிராணாயாமம் செய்யும் பொழுது ஆத்ம ஆரோக்கியம்.

15.காயத்ரி மந்திரத்தின் அர்த்தம் மற்றும் சிறப்பை தனியாக இன்னோர் சமயம் பதிவிடுகிறேன். அவ்வுளவு விஷயம் உண்டு.

16.அலுவல், படிப்பு, சம்சார பலுவால் மூன்று வேளை செய்வது சாத்தியமா? ஒரு பொழுது செய்வதே கடினம் தான், ஆனால் சிரத்தை உள்ளவர்கள் எப்படியும் செய்து விடுவர். ஏன் நமது தகப்பனாரோ, பாட்டனாரோ செய்து நாம் பார்த்ததில்லை?

17.சாஸ்திரமும் நம்மிடம் அவ்வுளவு கண்டிப்புடன் இருப்பதாக தெரியவில்லை. மாத்யானிகம் மதியம் செய்ய முடியாதா? காலையில் சூரியன் உதித்ததும் செய்து விடலாம். சந்தியாவந்தனத்துக்கு நேரம் தவறி போயிற்றா பிராயசித்தமாக அர்க்யம், பிராணாயாமம் சேர்த்து செய்தால் போதும்.

18.காலையில் சந்தியாவந்தனம் பண்ணும் போது முதல் நாள் இரவில் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கோரி பிரார்த்திக்கிறோம், மாலையில் செய்யும் போது அன்றைய பகல் பொழுதில் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கோரி பிரார்த்திக்கிறோம்.

19.பாவத்துக்கு எப்போது மன்னிப்பு கோருகிறோம் என்று யோசிக்கிறீர்களா? 

காமோகார்ஷீத் ஜபம்.

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா

புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்

கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்பயாமி
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚