Sri Mahavishnu Info: ராமாயணம் | 5 சுந்தர காண்டம் | பகுதி – 15 ராமாயணம் | 5 சுந்தர காண்டம் | பகுதி – 15
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

ராமாயணம் | 5 சுந்தர காண்டம் | பகுதி – 15

Sri Mahavishnu Info
ராமாயணம் | 5 சுந்தர காண்டம் | பகுதி – 15
அனுமன் அஷனை கொன்ற பிறகு வழக்கம் போல் அசோக வனத்தின் மதில் சுவற்றின் மீது அமர்ந்து கொண்டார். தேவர்களுக்கு நிகரான ராவணனின் புதல்வன் அஷன் கொல்லப்பட்ட செய்தி அறிந்த இந்திரன் அனுமனைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பல முனிவர்களும் தேவர்களும் ஆகய வழியாக வந்து அனுமனைப் பார்த்து வாழ்த்தி விட்டுச் சென்றார்கள். ராவணனால் அழைக்கப்பட்ட இந்திரஜித் தன் தம்பி அஷன் ஒரு வானரத்தால் கொல்லப்பட்டான் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தான். விரைவாக அரசவைக்குள் வந்து ராவணனின் முன் வந்து நின்று தனது வணக்கத்தை தெரிவித்தான். ராவணன் இந்திரஜித்திடம் பேச ஆரம்பித்தான். இந்திரனுக்கு சமமான வீரன் நீ. எல்லா அஸ்திரங்களையும் நன்றாக பயின்று அதனை அடைந்திருக்கிறாய். நம்மை எதிர்த்த தேவர்களையும் அசுரர்களையும் யுத்தத்தில் வென்று இருக்கின்றாய். பிரம்மாவை தவம் செய்து பூஜித்து அவரிடமிருந்து பிரம்மாஸ்திரம் பெற்று இருக்கின்றாய். உன்னை எதிர்த்து யுத்தம் செய்யக் கூடியவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. அறிவில் சிறந்த நீ காரியங்களை சரியாக யோசித்து செய்வதில் உனக்கு நிகர் யாருமில்லை. அசோக வனத்தில் ஒரு வானரம் நம்மை எதிர்த்துக் கொண்டு இருக்கிறது. தேவர்களின் சூழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் அனுப்பிய கிங்கரர்கள் ஜமாலி நம்முடைய சேனாதிபதிகள் 5 பேர் உனது அருமை தம்பி அஷன் அத்தனை பேரும் அந்த வானரத்தால் கொல்லப்பட்டார்கள். நீ தான் அந்த வானரத்தை வெல்லும் வல்லமை கொண்டவன். அந்த வானரத்தை நமது சேனைகளின் பலத்தால் வெல்ல முடியாது. அந்த வானரத்தின் அறிவாற்றலையும் வல்லமையையும் பராக்கிரமத்தையும் சிந்தித்து பார்த்து உன்னுடைய தவ பலத்தை உபயோகித்து சிறந்த அஸ்திரத்தை பயன்படுத்தி கைது செய்து இங்கே வெற்றியுடன் திரும்பி வா என்று சொல்லி இந்திரஜித்தை அனுப்பி வைத்தான் ராவணன். இந்திரஜித் தந்தையே வலம் வந்து ஆசி பெற்றுக்கொண்டு நான்கு சிங்கங்கள் பூட்டிய தேரில் நின்று வில்லின் நானை இழுத்து சப்தம் செய்து அசோக வனத்தை நோக்கிச் சென்றான். அவன் பின்னே ராட்சச சேனைகள் பெரும் கூட்டமாக வந்தார்கள்.

அனுமனுக்கு தூரத்தில் ஒரு கூட்டம் வருவது தெரிந்தது மீண்டும் யுத்தம் செய்வதற்கு தயாரானார். இந்திரஜித் தன்னுடைய வில்லில் அம்பு மழை பொழிந்தான். அனைத்து அம்புகளில் இருந்தும் அனுமன் லாவகமாக தப்பினார். சில அம்புகள் அனுமன் மீது பட்டாலும் அந்த அம்புகளால் அனுமனின் வஜ்ரம் போன்ற உடம்பை துளைக்க முடியவில்லை. இந்திரஜித் விட்ட அம்புகள் அனைத்தும் பயனற்றுப் போனது. ராட்சசர்கள் ஏற்படுத்திய பேரிகை நாணோசை சத்தங்களுக்கு எதிராக அனுமனின் கர்ஜனை சத்தம் பெரிதாக இருந்தது. இருவருக்கிடையிலும் நடந்த யுத்தம் இருவரின் சாமர்த்தியத்தையும் வலிமையையும் காட்டியது. யுத்தம் நீண்டு கொண்டே சென்றது. இந்திரஜித் சிந்திக்க தொடங்கினான். எத்தனை அம்புகள் விட்டாலும் இந்த வானரத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. தந்தை சொன்னது முற்றிலும் சரியே. நமது தவத்தினால் பெற்ற அஸ்திரத்தை உபயோகித்து இந்த வானரத்தை அடக்க வேண்டும் என்று முடிவு செயதான். பிரம்மாவிடம் இருந்து பெற்ற பிரம்மாஸ்திரத்தை அனுமன் மீது எய்தான் இந்திரஜித். பிரம்மாஸ்திரம் அனுமனை செயல் இழக்கச் செய்து கீழே தள்ளியது.

அனுமன் நம்மை கட்டியது பிரம்மாஸ்திரம் என்பதை தெரிந்து கொண்டார். பிரம்மா தனக்கு அளிந்த சிரஞ்சீவி பட்டத்தையும் அந்தநேரம் அவர் சொல்லிய செய்திகளையும் ஞாபகம் செய்து கொண்டார். ஒரு முகூர்த்த நேரம் மட்டுமே இந்த அஸ்திரம் நம்மை கட்டி வைக்கும் அதன் பிறகு செயலற்றுப் போகும் இதனால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த ஒரு முகூர்த்த நேரத்தில் இந்த ராட்சசர்களால் என்ன செய்ய முடியும் பார்க்கலாம் என்று பிரம்மாவின் பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு தரையில் விழுந்து அமைதியாக இருந்தார். அனுமன் கீழே விழுந்து செயலற்றுப் போய் விட்டார் என்று அறிந்த ராட்சசர்கள் அனுமனுக்கு அருகில் வந்து சூழ்ந்து கொண்டு இந்திரஜித்தை புகழ்ந்தும் அனுமனை தின்று விடுவோம் என்றும் கோசம் போட ஆரம்பித்தார்கள்.
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚