Sri Mahavishnu Info: பெருமாள் திருநாமங்கள் எப்பப்போ எப்படிச் சொல்ல வேண்டும் ? பெருமாள் திருநாமங்கள் எப்பப்போ எப்படிச் சொல்ல வேண்டும் ?
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

பெருமாள் திருநாமங்கள் எப்பப்போ எப்படிச் சொல்ல வேண்டும் ?

Sri Mahavishnu Info
ஆபத்தான காலத்தில் எம்பெருமான் திருநாமங்களைச் சொல்வோம்! வாரீர்!

பொய்கை ஆழ்வார் அருளிச்செய்கிறார்!

“ அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டொழிய வேண்டில் ...நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரணழிய முன்னொருநாள்
தன் விலங்கை வைத்தான் சரண்!
......முதல் திருவந்தாதி!

மநோவ்யாதி,,,,சரீரத்தினால் வரும் வ்யாதி,,,நம்முடைய அஜ்ஞானம் ,பாவங்கள், வினைகள்,இவை எல்லாவற்றையும் துரத்தி,.. அவைகள் நம்மைவிட்டு தூர ஓடிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் சக்ரவர்த்தித் திருமகனான இராமபிரானைச் சரண் அடைய வேண்டும் என்கிறார் ஆழ்வார்!

இங்கு...“ அருவினை “...என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்!....
அதற்குப் பொருள் என்னவென்றால், .... இந்த வினைகளை நம்மால் அழிக்க முடியாத வினைகள் என்றதாயிற்று!
ஏன்?... இவைகள்...மூட்டை மூட்டையாக பாபக் குவியல் போன்று இருப்பது!
நம்மால் வெளியேற முடியாதபடி இருப்பது!
அதனால்தான் அழிக்க முடியாது..
சில பூச்சிகள் தம்மைச் சுற்றி தாமே கூடு கட்டிக் கொண்டுவிடும் !
பிறகு அந்தக் கூட்டில் இருந்து அந்த பூச்சியால் தானே வெளிவர முடியாததால், அப்படியே அழிந்துவிடுமாம்!
அதைப்போலத்தான் நம்போன்றவர்களும் .. இருக்கிறோம்...
பாபமூட்டையால் ஒரு கூடு கட்டிக் கொண்டு,அதிலிருந்து வெளியே வராமல் தவிக்கிறோம் !
அப்படிப்பட்ட கூட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்றால்.... ஶ்ரீராமனின் திருவடியைப் பற்றுங்கள்! அவன் நம்மை வெளியேற்றிவிடுவான் என்கிறார் ஆழ்வார்!!
பொதுவாகவே..... பேரிருளில் ந்ருஸிம்ஹப் பெருமாளை த்யானிக்க வேண்டும்!
தாபங்களால் பீடிக்கப்பட்டவ ர்கள் க்ஷீராப்தியில் சயனம் கொண்டுள்ள எம்பெருமானை த்யானிக்க வேண்டும்!
விஷ ஜந்துக்களால் பாதிக்கப் பட்டவர்கள் கருடத்வஜனான பகவானை த்யானிக்க வேண்டும்!...
...என்று விஷ்ணு தர்மம் சொல்கிறது!

“ அந்த காரேதி தீவ்ரே ச நரஸிம்ஹம் அநுஸ்மரேத்!
தர்த்யகிலது:காநி தாபார்தோ ஜலஶாயிநம்
கருடத்வஜா நுஸ்மரணாத் விஷ வீர்யம் ப்ரணஶ்யதி!!”

அவனை நினைப்போம்!
பலம் பெறுவோம்!!

📚 அர்த்தமுள்ள இந்து மதம் – 10 பாகங்கள் முழுத் தொகுப்பு!

🙏 இந்து மதம், சனாதன தர்மம் மற்றும் ஆன்மிக அறிவை வளர்க்கும் அரிய PDF நூல்கள் ஒரே இடத்தில்!

✨ இதில் இடம்பெறும் நூல்கள்:

  • அர்த்தமுள்ள இந்து மதம் (1-10 பாகங்கள்)
  • 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?
  • ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
  • ஆன்மிக வினா – விடை தொகுப்புகள்
  • மேலும் பல அரிய சனாதன தர்ம நூல்கள்...
💰 சிறப்புச் சலுகை விலை ₹199 ₹999
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚