'இல்லையே.. அது ரொம்ப பெரிய யமுனை மாதிரி ஒரு ஆறு, இந்த யமுனையை விட பெரிசு என்று மட்டும் தான் தெரியும். கடல் னு வேறு பெயராம். நான் அதெல்லாம் பார்த்ததேயில்லைமா.''
''எங்களுக்கும் தெரியாது ஆண்டாள், ஆனால் நீ ரொம்ப விஷயம் தெரிந்தவள் . எப்படி உன்னாலே இவ்வளவு அழகாக ஒண்ணு ஒண்ணுக்கும் உதாரணம் எல்லாம் கொடுக்க முடிகிறது. மழை அந்த நாராயணனுடைய சார்ங்கம் என்கிற வில்லிலிருந்து புறப்படும் சரங்கள் மாதிரி விடாமல் தொடர்ந்து பெய்யணும் என்கிறது ரொம்ப பொருத்தமாக புரியும்படியாக சொல்கிறாய். இதெல்லாம் எங்கடி படிச்சே?''.
'''நான் எங்க போய் படிச்சேன். எல்லாம் மனசிலே தானாகவே தோணினது தான்.''
''ஆண்டாள், உன்னோடு நாங்க இந்த நோன்பு நோர்க்கும் போது நிறையவே தெரிந்து கொள்கிறோம்''
நதியில் நீராடி, ஈரத் தலையைத் துவட்டி முடிந்து கொண்டு பரிசுத்தமாக அந்த பெண் குழந்தைகள் அந்தரங்க சுத்தியோடு நாராயணனை வேண்டின. பாடிக்கொண்டே வீடு திரும்பின. பிரசாதங்கள் படைத்து நோன்பு செய்தார்கள்.
''ஆண்டாள், உனக்கு நன்றி. எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.'' மன நிறைவோடு ஆயர்பாடி சிறுமிகள் வீடு சென்றனர். நாளைக் காலையில் மீண்டும் அவர்களை ஆயர்பாடியில் சந்திப்போம்.அதற்குள் தெற்கே மீண்டும் நேரே வில்லிப்புத்தூர் திரும்புவோம்.
வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தர் மனத்திலும் கோதை உருவாக்கிய மேற்கண்ட காட்சி தத்ரூபமாக பிரதி பலித்தது.
அந்த சின்னஞ்சிறு ஆயர்பாடி பெண்கள் குதூகலமாக ஆண்டாளைச் சுற்றி ச் சுற்றி வந்து நூறு கேள்விக் கணைகளைத் தொடுத்து அவளும் ஓயாமல் அவர்களுக்கு பதில் சொல்லும் பாங்கு அவருக்கு ரொம்பவே பிடித்தது. எல்லாமே கோதையின் சொந்த கற்பனை. என்ன திறமை. இதை அடிப்படையாகக் கொண்டதல் லவோ மேற்கண்ட கோதை தீட்டிய சித்திரம்.
''எங்கே மீண்டும் ஒருமுறை அந்த பாசுரத்தைப் படியம்மா. இல்லை, இல்லை, அதைப் பாடு கொழந்தே!''
விஷ்ணுசித்தர் நீட்டியிருந்த காலை மடக்கி கையைக் கட்டிக்கொண்டு எதிரே இருந்த ரங்கனின் பதுமையைப் பார்த்துக் கொண்டே காதைத் தீட்டிக் கொண்டார். அப்பாவை மகிழ்விக்கவும், தானே மீண்டுமொரு தரம் அந்த நாராயணனை, அரங்கனை,. மனம் களிக்க பாடுவதற்கும் கோதை தயாரானாள். கண்கள் மூடி இருந்தன. அவள் வில்லிப்புத்தூரில் இல்லை. பிருந்தாவனத்தில் கண்ணனோடு அல்லவா இருந்தாள்! . ஆனால் குரல் மட்டும் அங்கேயிருந்து வில்லிப்புத்தூரில் கேட்கிறதே.
''ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்