Sri Mahavishnu Info: பக்த கானோபா பக்த கானோபா
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

பக்த கானோபா

Sri Mahavishnu Info
சியாமளாதேவி கண்ணனின் மேல் பக்தி கொண்டவளாக இருந்தாள்.

அவளின் மகள் கானோபா தனது தாயை விட அதீத பக்தி கண்ணனின் மேல் கொண்டவளாக இருந்தாள்.

நாட்டியத்திலும், பாடல்கள் பாடுவதிலும் அதீத ஆர்வமுடையவளாக இருந்தாள்.

அவளின் அழகும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே சென்றது.

சியாமளாதேவி தனது மகளிடம் “நீ போய் அரசவையில் ஆடி பாடினால்
அரசன் தரும் பொன் பொருள் கொண்டு நமது வறுமையும் ஒழியுமே” என்றாள்.

‘அம்மா… என் ஆடலும், பாடலும் ஆண்டவனுக்கு மட்டுமே அர்ப்பணம், மாறாக, வேறு எந்த ஆடவனுக்காகவும் அல்ல, பொருள் மற்றும் புகழ் மீது எனக்கு ஆர்வமில்லை , கண்ணனின் அருளைத் தவிர, வேறு எந்த மானிடனையும் மனதாலும் தீண்ட மாட்டேன்…’ என்றாள்.

ஒருநாள்,

பண்டரிபுரம் செல்லும் பக்தர்கள், கானோபா வசிக்கும் ஊருக்கு வந்தனர்.

அவர்களிடம் பாண்டுரங்கனின் மகிமையை தெரிந்து கொண்ட கானோபா, பாண்டுரங்கனையே தன் பதியாக அடைய முடிவு செய்தாள்.

தாயின் அனுமதியுடன், பக்தர்களுடன் சேர்ந்து பண்டரிபுரம் சென்ற கானோபா, பாண்டுரங்கனை தரிசனம் செய்து, பாடியும், ஆடியும் அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தினாள்.

இந்நிலையில், பண்டரிபுரத்திற்கு, பாண்டுரங்க தரிசனம் செய்ய வந்த அரசன், கானோபாவை பார்த்தான். பாடலையும் ஆடலையும் ரசித்தவன் அவள் அழகில் மயங்கினான்,

தன் வீரர்களை அழைத்து, ‘அவளை அந்தப்புரத்திற்கு அழைத்து வாருங்கள்…’ என்று கட்டளை இட்டான்.

கானோபாவிடம் தகவலை வீரர்கள் கூற கானோபா அரசனை சந்திக்க மறுத்தாள் வீரர்கள் “நீ வர மறுத்தால் உன்னை பலாத்காரமாக தூக்கி சென்று விடுவோம்…’ என்று மிரட்டினர் வீரர்கள்.

‘சற்றுப் பொறுங்கள்; இறுதியாக இறைவனை தரிசித்து வருகிறேன்” என்று கூறி, கோவிலுக்குச் சென்றாள்.,

‘பாண்டுரங்கா… உன் உடமையான என்னை வேறு ஒருவன் தீண்டலாமா… என்னை ஏற்றுக் கொள்…’ என்று கூறி, கண்ணீர் விட்டாள்.

உடனே,

அவள் உடலில் இருந்து மின்னலைப் போல ஒரு ஒளி வெளிப்பட, அப்படியே தரையில் சாய்ந்தாள் கானோபா.

அவளிடம் வெளிப்பட்ட ஒளி, பாண்டுரங்கனின் விக்கிரகத்திற்குள் புகுந்து மறைந்தது.

தான் விரும்பியபடியே, இறைவனுடன் கலந்து விட்டாள் கானோபா.

அவள் உடலை, பிரகாரத்தின் தெற்கு பகுதியில், சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்தனர்.

சிறிது நேரத்திலேயே அதிலிருந்து ஒரு மரம் முளைத்தது. இன்றும், பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் கோவிலில் இருக்கும் அந்த மரத்தை, பக்தர்கள் வணங்கி, வழிபட்டு வருகின்றனர்.

அதை, ‘தாட்டி மரம்’ என அழைக்கின்றனர்.

ஆண்டவனிடம், பொன், பொருள் மற்றும் புகழை கேட்போர் மத்தியில், ஆண்டவனையே கேட்டு, அவரையே அடைந்த ஒரு சிலரில், கானோபா முக்கியமானவள்.

பண்டரிநாத் மகாராஜ் கீ ஜெய் …!
விட்டல விட்டல ஜெய் ஹரி விட்டல
விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல
பண்டரிநாத விட்டல

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

📚 அர்த்தமுள்ள இந்து மதம் – 10 பாகங்கள் முழுத் தொகுப்பு!

🙏 இந்து மதம், சனாதன தர்மம் மற்றும் ஆன்மிக அறிவை வளர்க்கும் அரிய PDF நூல்கள் ஒரே இடத்தில்!

✨ இதில் இடம்பெறும் நூல்கள்:

  • அர்த்தமுள்ள இந்து மதம் (1-10 பாகங்கள்)
  • 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?
  • ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
  • ஆன்மிக வினா – விடை தொகுப்புகள்
  • மேலும் பல அரிய சனாதன தர்ம நூல்கள்...
💰 சிறப்புச் சலுகை விலை ₹199 ₹999
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚