📖 பராபரன்: பெருமாளை "பராபரன்" என்பார்கள். "பர" என்பது மேன்மைக்கெல்லாம் எல்லை, "அபர" என்பது எளிமைக்கெல்லாம் எல்லை.
அவரது குணங்களை மென்மை (பரத்வம்) மற்றும் எளிமை (ஸௌலப்யம்) என இரு கோணங்களில் காணலாம்.
ஆனால் இதில், மேன்மை குணமான பரத்வமே பெருமாளில் அதிகமாக பிரகாசிக்கும்.
எளிமையை அவரது ஸ்வாதந்திரம் (சுதந்திரம்) மற்றும் கோபம் மூடிக்கொள்கிறது. இதை “நெருப்பு கிளர்ந்தாற் போல்” என்பர்.
தணல் எரிகிறது. ஆனால் மேலே சாம்பல் மூடியிருக்கும். அதை தட்டினால்தான் உள்ளிருக்கும் "தகதகப்பை" காண முடியும்.
அதேபோல், பெருமாளின் அபரிமித குணங்கள் பக்தருக்கு ரட்சிப்பை தரும் – ஆனால் வெளிப்படாமல் சாம்பல் மூடியதுபோல் இருக்கும்.
🪔 பிராட்டியின் பண்பு: இந்த சாம்பலை தட்டும் பணி பிராட்டிக்கே உரியது. அவள் தட்டினால்தான் பெருமாளின் கல்யாண குணங்கள் வெளிப்படுகின்றன.
பெருமானை நேசிப்பவர்கள், பிராட்டியை சேவித்து, பின்னர் பெருமானை நோக்கினால் அவரது புனித குணங்கள் இன்னும் அதிகமாக வெளிப்படும்.
ஆண்டாள் கூறும் "மாமாயன் மாதவன் வைகுந்தன்" என்ற பாடல் இதில் முக்கியமான விளக்கம் தருகிறது:
மாமாயன் – வைகுந்தன் என்ற இரண்டும் பெருமாளையே குறிக்கும். ஆனால் நடுவில் இருக்கும் “மாதவன்” என்பது பிராட்டியை குறிப்பது.
அதனால் தான் ஆண்டாள் அதை நடுவில் எழுதியுள்ளார் – பிராட்டி இல்லாமல் அவர் வைகுந்தனாக முடியாது!
