Sri Mahavishnu Info: வினோத பரிகாரம் - பெரியவா வினோத பரிகாரம் - பெரியவா
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

வினோத பரிகாரம் - பெரியவா

Sri Mahavishnu Info
மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - திவ்யதேசங்களை தரிசித்தீர்களே, அந்த புண்ணியம் தான்!

ஒருமுறை மகாசுவாமிகளை தரிசிக்க ஆசார சீலர்களான வைணவர்கள் சிலர் சங்கரமடம் வந்தனர். 

அவர்களில் ஒருவர் மட்டும் சற்று மாறுபட்டவராக இருந்தார். எங்கோ வெறித்து பார்த்தபடி அடிக்கடி தலையை அசைத்துக் கொண்டிருந்தார். ஆனால் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை.

அவரை சுட்டிக்காட்டிய மற்றவர்கள், ''சுவாமி... இவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனால் குணம் ஏதுமில்லை. ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களை தரிசித்தால் குணம் உண்டாகும் என்று பெரியவர்கள் சிலர் சொல்லவே குணசீலம், சோளிங்கர் கோயில்களுக்கு அழைத்துச் சென்றோம். கடைசி முயற்சியாக தங்களை தரிசிக்க வந்தோம். அருள்புரியுங்கள்'' என்றனர்.

''நல்லது.... எல்லோரும் இப்போது விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லுங்கள்'' எனக் கட்டளையிட்டார் மகாசுவாமிகள். அனைவரும் ஒருமித்த குரலில் சொல்லத் தொடங்கினர்.

கடைசியில் மகாசுவாமிகள் குறிப்பிட்ட மனிதருக்கு துளசி தீர்த்தம் கொடுத்தார். அங்கிருந்த பலசாலியான மனிதர் ஒருவரை அழைத்து, பாதிக்கப்பட்டவரின் தலையில் ஒரு குட்டும் வைக்கச் சொன்னார்.

எல்லோரும் திகைத்து நிற்க, மனநிலை சரியில்லாதவரின் தலையில் கணீரென்று குட்டு வைத்தார் அவர்.

மறுகணம் நிகழ்ந்தது ஓர் அதிசயம். சட்டென்று தலையைத் தடவியபடி மனம் பாதிக்கப்பட்டவர், ''நான் எங்கே இருக்கிறேன், இங்கு எப்படி வந்தேன்?'' என்றார் ஏதும் புரியாமல்.

''எல்லாம் மகாசுவாமிகளின் அனுக்ரஹம்'' என நெகிழ்ந்தனர் வைணவர்கள்.

''நான் என்ன செய்தேன்? நீங்கள் நம்பிக்கையுடன் பெருமாள் திவ்யதேசங்களை தரிசித்தீர்களே... அந்த புண்ணியத்தால் தான் பலன் கிடைத்தது'' என்றார் மகாசுவாமிகள்.
தேங்காய் துடைப்பம்

🧹 இயற்கை தேங்காய் துடைப்பம்

🌿 100% இயற்கை தேங்காய் குச்சியால் தயாரிப்பு
💪 மிகவும் பலம் – உடையாது, நீண்ட நாட்கள் பயன்படும்
🏡 வீடு, மாடி, தோட்டம் சுத்தம் செய்ய சிறந்தது
✨ தூசி, குப்பை எளிதில் அகற்றும் திறன்
📦 3 துடைப்பம் கொண்ட value pack
🔥 தினசரி பயன்பாட்டுக்கு super choice!

⚡ இன்று order பண்ணுங்க !

🔗 இப்போது வாங்க
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚