Sri Mahavishnu Info: அரங்கன் புகழ் பாட அரங்கன் புகழ் பாட
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

அரங்கன் புகழ் பாட

Sri Mahavishnu Info

பராசர பட்டர், ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார்...

‘என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்?..’ என அரங்கன் கேட்க…

‘முதலில், உம்முடைய ஆதிசேஷனைப் போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பிறகு பார்க்கலாம்...’ என்றாராம் பட்டர்..

‘அட… ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ?..’ என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட… பராசரபட்டருக்கு, ஆயிரம் நாக்குகளை வழங்கினான்.

ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பட்டர்...

”மன்னிக்கவும் ரங்கா! என்னால் இப்பவும் உன்னை பாட முடியாது!..” என்று சொல்லிவிட்டு, அமைதியாகி விட்டார் பட்டர்..

ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு!..

பின்னே இருக்காதா?..

...பட்டர் கேட்டபடியே,
ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகிவிட்டது.. அப்படியும் ‘பாட முடியாது’ என்று மறுத்தால், அரங்கனுக்கு ஆச்சரியம் எழத்தானே செய்யும்?..

”என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய்; கொடுத்தேன்..

பிறகென்ன?…
பாட வேண்டியதுதானே?.. முடியாது என்கிறாயே!” என்றான் அரங்கன்.

பராசர பட்டர், மீண்டும் கைகளைக் குவித்துக்கொண்டார்; மொத்த உடலையும் இன்னும் குறுக்கிக் கொண்டார்;

முதுகை வளைத்து இன்னும் கூனாக்கிக்கொண்டு,

”அரங்கா… உன் ஒளி பொருந்திய அழகை என்னால் பாடமுடியாது என்று சொல்வதற்கே, எனக்கு நீ கொடுத்த இந்த ஆயிரம் நாக்குகள் தேவையாக இருக்கும்போது,

...பரஞ்சோதியாகத் திகழும் உன்னையும், உனது பேரழகையும் பாடுவதற்கு, எனக்கு இன்னும் எத்தனை எத்தனை நாக்குகள் தேவையோ?!..”
என்று வியந்தாராம் பட்டர்..

அவரது சாமர்த்யமான பதிலைக் கேட்ட அரங்கன் முகத்தில் புன்னகைப் பூவொன்று பூத்து,

அவன் அழகை மேலும் கூட்டியது!..
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்