Sri Venkatesa Mahatmiyam - 1
திருமலை திருப்பதி திருக்கோவிலின் வரலாறு, புராணக்கதைகள், பெருமாளின் அவதாரம் என ஸ்ரீ வேங்கடேஸ்வரப் பெருமாளின் பெருமைகளைப் போற்றும் மஹாத்மியம் Sri Venkatesa Mahatmiyam "ஸ்ரீ வேங்கடேச மஹாத்மியம்" என அழைக்கப்படுகிறது. "கலௌ வேங்கட நாயக" என்று கலியுக தெய்வமாகக் கொண்டாடப்படும் திருவேங்கடவன் உகந்து அர்ச்சாரூபியாய் பக்தர்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்து அருளும் திருவேங்கட மாமலை எனும் ஸ்வயம் வ்யக்த திவ்ய ஷேத்ரம் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரத்தில் மலையில் எம்பெருமான் கோவில் கொண்டருளி சேவை சாதிக்கிறார்.
ஷேத்ரம் : ஆதிவராக ஷேத்ரம்விமானம் : ஆனந்த நிலைய விமானம்
புஷ்கரணி : ஸ்வாமி புஷ்கரணி
பெருமாள் திருநாமம் : திருவேங்கடவன் (ஸ்ரீநிவாசன், கோவிந்தன், ஏழுமலையான், பாலாஜி)
திருக்கோலம் : நின்ற திருக்கோலம்.
மங்களாஸாசனம் : 9 ஆழ்வார்கள், ஆண்டாள், தேசிகன்.
தீர்த்தம் :-
இந்த ஷேத்ரத்தில் 14 தீர்த்தங்கள் உள்ளன. அவை1. வைகுண்ட தீர்த்தம்
2. சக்ர தீர்த்தம்
3. ஜாபாலி தீர்த்தம்
4. வருண தீர்த்தம்
5. ஆகாச கங்கை
6. பாப விநாசம்
7. பாண்டவ தீர்த்தம்
8. குமாரதாரை
9. இராமக்ருஷ்ண தீர்த்தம்
10. தும்புரு தீர்த்தம்
11. சேஷ தீர்த்தம்
12. ஸநக ஸநந்தன தீர்த்தம்
13. யுத்தகள தீர்த்தம்
14. சீதம்ம தீர்த்தம்
புராண மஹாத்மியம் :-
2. பாத்ம புராணம்
3. கருட புராணம்
4. பிரஹ்மாண்ட புராணம்
5. மார்க்கண்டேய புராணம்
6. ஹரிவம்சம்
7. வாமன புராணம்
8. ப்ரஹ்ம புராணம்
9. ஆதித்ய புராணம்
10. ஸ்கந்த புராணம்
11. பவிஷ்யோத்தர புராணம்
12. வெங்கடேச்வர ரஹஸ்யம்
