Sri Mahavishnu Info: மகாபாரதம் | 2 சபா பருவம் | பகுதி - 15 மகாபாரதம் | 2 சபா பருவம் | பகுதி - 15

மகாபாரதம் | 2 சபா பருவம் | பகுதி - 15

Sri Mahavishnu Info

மகாபாரதம் | 2 சபா பருவம் | பகுதி - 15
திரௌபதி சகுனியை பார்த்து தாங்கள் அங்கு அமர்ந்தபடியே பேசலாம். பகடை காயை நான் உருட்டுவதால் தாங்கள் முதல் எண்ணிக்கையை கூறுங்கள். எனது வெற்றிக்கான எண்ணிக்கையை அடுத்துக் கூறுகிறேன் என்றாள். எனது எண்ணிக்கை ஐந்து என்றான் சகுனி. திரௌபதி கிருஷ்ணரை சரணடைந்தாள். தான் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி எனது எண்ணிக்கை ஒன்று இதில் நான் வெற்றி பெற்றால் இதற்கு நான் விரும்பி கேட்பது ஒருவரை மட்டுமே என்றாள். பாண்டவர் ஐவரையும் கேட்பாள் என்று நினைத்த பலர் மனத்திலும் யார் ஒருவரை இவள் கேட்கப் போகிறாள் ஆர்வத்தில் இருந்தார்கள். கையிரண்டையும் கூப்பி இதுவரை வலது புறங்காலில் ஆட்டிக்கொண்டிருந்த பகடைக்காய்களை தனக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையே போடுகிறாள். பகடை ஒன்று. பக்கத்தில் இருந்த விகர்ணன் ஆவலாய்ப் பார்த்து பகடை ஒன்று. என சந்தோஷ மிகுதியால் கூறுகிறான்.

துரியோதனன் முதல் ஆட்டத்தில் தாம் தோல்வி அடைந்து விட்டோம். அடுத்த ஆட்டத்தில் மற்ற நால்வரில் ஒருவரையோ இல்லை நால்வரையுமே கேட்டு இவள் வெற்றி கொண்டாலும் பாதகமில்லை. எப்படியும் இந்திரபிரஸ்தம் மற்றும் அவர்களுடைய செல்வம் அனைத்தும் நம்முடையது தான். இவளை அவையில் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். நினைத்தது அனைத்தும் நடந்து விட்டது என நினைத்து அடுத்த ஆட்டத்தில் மற்ற நால்வரையும் சந்தோஷமாய் கொடுக்க தயாராகி விட்டான் துரியோதனன். கௌரவர்களின் அடிமையாய் இருந்த யுதிஷ்டிரர் ஆசனத்தில் அமர்ந்ததும் திரௌபதி அவரை வணங்குகிறாள்.

குந்தி புத்திரரே என்னை முதல் ஆட்டத்திற்கு பணயமாய் வைத்தேன். பகடைக் காயை மன்னர் காலடியிலிருந்து எடுத்து வந்து தாங்கள் என் காலில் காயை வைத்த போது பலரும் தங்களுக்கு நான் செய்யும் அவமரியாதை என்றே நினைத்திருக்கக் கூடும். அந்த நிலையில் வேறு வழி ஏதும் தெரியவில்லை. பகடை ஆட தாங்கள் சம்மதமும் வெற்றி பெற ஆசியும் வேண்டும். தாங்கள் பகடையை கொண்டு வந்து கொடுத்ததில் சம்மதமாய் எடுத்துக்கொண்டேன். மாமா சகுனியின் ஆயுதமான பகடைக்காயை கைகளால் தொடுவதில்லை என சத்தியம் செய்ததால் காலால் வேகமாய் உதைத்தேன். அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. மாமா சகுனிக்குத் தெரியும் அவர் ஆயுதம் எவ்வளவு சக்தி வாய்ந்ததென்று. ஆடுவதற்கு முன்பு அதன் வீர்யத்தைக் குறைக்க அது ஒன்று தான் வழி. அனைத்தும் எதற்காக செய்தேன் என்று அப்போது தங்களிடம் எடுத்துச் சொல்ல வழியில்லை. மோட்சத்திற்கு வழி என்று நான் சொன்ன போதே இங்கு மரணம் நிகழ்ந்து விட்டது. அதை மாமா சகுனி மட்டும்தான் அறிவார். பின் அஸ்தி கரைப்பது தங்கள் கையால் நடக்க வேண்டும் என நான் விரும்பியபடி காய்களை தாங்கள் ஏந்தி வந்தீர்கள். கண்ணில் வழியும் கண்ணீரை கங்கையாக பாவித்து தங்கள் கையில் தெளித்து அதையும் தாங்களே செய்து முடிக்கும்படி செய்தேன். இது மாமா சகுனிக்கு முழுவதுமாய் புரிந்திருக்கும். எல்லோருக்கும் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை.

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்