Sri Mahavishnu Info: மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 7 மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 7

மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 7

Sri Mahavishnu Info

மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 7
விராட நகருக்குள் மக்களிடமும் மன்னரிடமும் விடியற்காலையில் நம்பிக்கை ஒன்று பரவியது. யாராலும் எதிர்க்க முடியாத கீச்சகனை கந்தவர்கள் கொன்றுவிட்டார்கள். இச்செய்தியை குறித்து ஊரார் அனைவரும் நடுநடுங்கினர். சைரந்திரியை கந்தர்வர்கள் பாதுகாத்து வருகின்றார்கள். சைரந்திரிடம் முறை தவறி நடந்து கொள்கிறார்கள் ஆபத்துக்கு ஆளாவார்கள் என்று அவர்கள் அஞ்சினார்கள. ஆராய்ச்சிக்கு எட்டாத அப்பெண் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க அரசனுக்கு துணிவு வரவில்லை. அவளுக்கு சிறதளவும் மனவருத்தம் உண்டாகாதவாறு அவளை வெளியே அனுப்பி விடும்படி அரசியிடம் அரசன் தெரிவித்தான். சகோதரனுடைய மரணத்தைக் குறித்து அரசி சுதேசனா மிகவும் துயரத்தில் ஆழ்ந்நிருந்தாள். அதேவேளையில் சைரேந்திரிக்கு நிகழ்ந்த தௌர்பாக்கியத்தை குறித்தும் அரசி சுதேசனா வருந்தினாள். தனக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்ட திசையை பணிவுடன் சைரேந்திரியிடம் அரசி சுதேசனா தெரிவித்து அவள் மனம் கோணாது நகரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று நயந்து வேண்டிக்கொண்டாள்.

அகதியாக வந்த தன்னை பதினோரு மாதங்கள் தாங்கள் என்னிடம் இரக்கம் மிக வைத்து நன்கு பாதுகாத்து வந்தீர்கள். நான் விமோசனம் அடைவதற்கு கிட்டத்தட்ட ஒருமாதம் மட்டுமே பாக்கியிருக்கிறது. தங்கள் என்னை காப்பாற்றி வருவது என்னுடைய கந்தர்வக் கணவர்கள் நன்றி மிக உடையவர்களாக கவனித்து வருகிறார்கள். தாங்கள் எனக்கு காட்டியிருக்கும் பேரன்புக்கு ஏற்ற கைமாறு ஒன்றை நிச்சயம் அவர்கள் தங்களுக்கு செய்து வைப்பார்கள். மடிந்துபோன தங்களுடைய சகோதரனுக்கு ஏற்ற ஈடு ஏதாவது இருக்குமானால் அதையும் அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள். தாயே தங்களுக்கு வேறு எந்த தீங்கும் வந்து விடாது. என் மீது இரக்கம் வைத்து ஓர் மாதம் மட்டும் காப்பாற்றுங்கள் என்று அரசிடம் கேட்டாள். அதற்கு அரசி ஒரு மாதம் முற்றுப் பெறும் வரையிலும் தன்னுடனேயே வைத்துக் கொள்ள சம்மதம் கொடுத்தாள்.

பாண்டவர்கள் எங்கு எப்படி வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு ஏற்ற மிக தகுதி வாய்ந்த ஒற்றர்களை துரியோதனன் நியமித்து இருந்தான். அவர்கள் நாடெங்கும் உள்ள மூலைமுடுக்குகளில் அலசி ஆராய்ந்து பார்த்தனர். பெரிய பட்டணங்களையும் பெரிய ஊர்களையும் கிராமங்களையும் அவர்கள் தேடிப் பார்த்தார்கள். வனந்திரங்களிலும் மலைகளிலும் குகைகளிலும் தேடிப் பார்த்தார்கள் ஆனால் மறைந்து வாழ்ந்திருக்கும் பாண்டவர்களை மட்டும் கண்டுபிடிக்க அவர்களுக்கு இயலவில்லை. ஆகையால் ஒற்றர்கள் அஸ்தினாபுரம் திரும்பி வந்து நாட்டை விட்டு சென்றவர்கள் இறந்து போய் இருப்பார்கள் அல்லது கடல் கடந்து வெளிநாடுகளுக்கு ஓடிப்போய் இருப்பார்கள் என்று உறுதி கூறினார்கள். தங்களுக்கும் தங்கள் அறிவுக்கு எட்டிய இடங்களில் எங்குமே அவர்கள் வாழ்ந்திருக்கும் அறிகுறி ஏதுமில்லை என்று அவர்கள் கூறினார்கள். பாண்டவர்கள் இறந்திருந்தால் உபத்திரவம் முடிந்தது என்று துரியோதனன் எண்ணினான். எனினும் இதுகுறித்து ஆலோசனை செய்ய சபை ஒன்றை கூட்டி ஆலோசனை கேட்டான்.

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்