Sri Mahavishnu Info: மகாபாரதம் | 5 உத்தியோக பருவம் | பகுதி - 15 மகாபாரதம் | 5 உத்தியோக பருவம் | பகுதி - 15

மகாபாரதம் | 5 உத்தியோக பருவம் | பகுதி - 15

Sri Mahavishnu Info

மகாபாரதம் | 5 உத்தியோக பருவம் | பகுதி -15
அஸ்தினாபுரத்தின் சபையில் துரியோதனன் பாட்டனாராகிய பீஷ்மரை அணுகி அவர் கௌரவ சேனையின் சேனாதிபதியாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு பீஷ்மர் இயற்கையின் பாங்குகள் அனைத்தையும் உலக மக்கள் எல்லோரும் அவரவருக்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறார்கள். இயற்கையோ நல்லார்க்கும் பொல்லார்க்கும் பொதுவாக எப்பொழுதும் பயன்பட்டு வருகிறது. இந்த இயற்கை தாயின் போக்கையே நானும் பின்பற்றி வருகிறேன். என்னிடதில் உள்ள பேராற்றல் பேரறிவு ஆகிய அனைத்தையும் எனக்காக நான் எப்பொழுதும் பயன்படுத்தில்லை. என்னிடத்தில் யார் எதைக் கேட்டாலும் அதை நான் தவறாமல் வழங்கிக் கொண்டே இருக்கிறேன். நான் உனக்கு கொடுத்த வாக்குப்படி நடந்து கொள்கின்றேன். என்னுடைய வீரியம் அனைத்தும் உனக்கு சொந்தமாகி விடுகிறது. ஆயிரக்கணக்கான வீரர்களை நான் கொல்வேன். ஆனால் பாண்டவர்களை மட்டும் நான் கொல்லமாட்டேன். நீயும் உன் சகோதரர்களும் என் அன்புக்கு உரியவர்களாக இருப்பது போன்றே பாண்டவர்களும் என் அன்புக்கு உரியவர்களே.

மற்றுமொரு விஷயத்தையும் உன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். மீண்டும் சொல்கிறேன் நான் யுத்தத்தை ஆமோதிக்கிறவன் அல்ல. உன்னுடைய தோழனாகிய கர்ணன் எப்போதும் எனக்கு உபத்திரத்தை உண்டு பண்ணுபவனாக இருக்கின்றான். நான் சேனாதிபதியாக இருக்கும் சமயத்தில் அவன் போர் புரிவது இல்லை என்று உறுதி கூறி இருக்கின்றார். ஆகையால் அந்த சேனாதிபதி பொறுப்பை நீ முற்றிலும் கர்ணன் வசம் ஒப்படைக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் அவன் சொல்படியே என்னுடைய கடமையை நன்கு நிறைவேற்றுவேன் என்றார். துரியோதனன் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பீஷ்மரை கௌரவப்படைகளுக்கு தலைமை சேனாதிபதியாக தன் விருப்பப்படியே நியமித்தான். பீஷ்மரின் தலைமையில் கௌரவப்படைகள் போர்களம் செல்ல துவங்கினார்கள்.

கிருஷ்ணனுடைய தமையன் பலராமன் குருஷேத்திரப் போர் களத்திற்கு வந்து பார்த்தான். எண்ணிக்கையில் அடங்காத போர் பட்டாளங்கள் ஒன்றையொன்று அழித்துத் தள்ளக்கூடிய பாங்கில் இருப்பதைப் பார்த்தான். பலராமன் பீமனுக்கும் துரியோதனனுக்கும் கதை யுத்தம் சொல்லிக்கொடுத்தவன். ஆகையால் இருவரையும் அவன் ஒரே பாங்கில் நேசித்தான். பலராமனுடைய விருப்பத்திற்கு மாறாக அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மாய்த்துக்கொள்ள முடிவு கட்டியிருந்தார்கள். அத்தகைய தன் மனதுக்கு ஒவ்வாத போராட்டத்தை பார்க்க பலராமன் விரும்பவில்லை. ஆகையால் அவன் அவ்விடத்தைவிட்டு தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டுபோனான். 

உத்தியோக பருவம் இந்த பகுதியுடன் முற்றியது. அடுத்து பீஷ்ம பருவம்.

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்