Sri Mahavishnu Info: மகாபாரதம் | 6 பீஷ்ம பருவம் | பகுதி - 6 மகாபாரதம் | 6 பீஷ்ம பருவம் | பகுதி - 6
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

மகாபாரதம் | 6 பீஷ்ம பருவம் | பகுதி - 6

Sri Mahavishnu Info

மகாபாரதம் | 6 பீஷ்ம பருவம் | பகுதி - 6
துரியோதனன் தெளிவு பெற்ற பின்பு அவனை பத்திரமாக வேறு இடத்திற்கு அனுப்ப பீஷ்மர் முற்பட்டார். அப்போது துரியோதனன் பீஷ்மரைப் பார்த்து பாட்டனாரே இது வரைக்கும் நடந்த யுத்தத்தை பார்த்தால் இன்னும் தங்களுடைய முழு பலத்தை கையாளாமல் இருக்கின்றீர்கள் என்று எனக்கு நன்கு தெரிகிறது. பாண்டவர்கள் பக்கம் நீங்கள் அதிக பாசம் வைத்து இருக்கின்றீர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அந்த பாசத்தினால் என்னை நட்டாற்றில் கைவிட்டு விட்டீர்கள். இதுபற்றிய உங்களுடைய கருத்தை உள்ளபடி எனக்கு முழுமையாக தெரிவியுங்கள் என்றான். அதற்கு பீஷ்மர் முதலிலேயே நான் உனக்கு எச்சரிக்கை செய்து இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். என்னுடைய ஆற்றல் முழுவதையும் உனக்காக பயன்படுத்துவேன். ஆனாலும் இந்த யுத்தத்தில் நீ வெற்றியடைய மாட்டாய் என்று கூறிவிட்டு ஊக்கம் படைத்தவராக பீஷ்மர் போர்க்களத்தில் பிரவேசித்தார். பாண்டவர் படைகள் முழுவதையும் துடைத்து அழிக்க அவர் எண்ணம் கொண்டார். அவர் புரிந்த உயிர்ச்சேதம் அளப்பரியதாக இருந்தது.

அர்ஜூனனிடனும் பீமனிடமும் போரைத் தொடர்ந்தார். பீஷ்மர் கோபத்துடன் செய்த விற்போரில் அர்ஜூனனும் பீமனும் அவரை எதிர்த்து சமாளிக்க முடியாமல் திணறினார்கள். பீஷ்மரை எதிர்த்துப் போர் செய்வதை மறந்த அர்ஜூனன் பீஷ்மரை பார்த்து வியப்பில் ஆழ்ந்தான். தன்னை மறந்து நின்ற அர்ஜூனனை பார்த்து கிருஷ்ணர் சினம் கொண்டார். பாட்டனாரை எதிர்த்து நீ உன்னுடைய முழு வல்லமையை காட்டி யுத்தம் செய்யவில்லை. அர்ஜூனா என்னவாயிற்று உனக்கு? பீஷ்மரையும் துரோணரையும் வெல்வேன் என்றாயே அதை மறந்து விட்டாயா என்றார். உற்சாகம் அடைந்த அர்ஜூனன் தனது ஒரு அம்பால் பீஷ்மரின் வில்லை முறித்தான். பீஷ்மர் வேறு அம்பை எடுத்து எட்டு திசைகளிலும் அர்ஜூனன் மீது அம்புகளைச் செலுத்தி மறைத்தார். பல அம்புகள் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன. ஆனால் அர்ச்சுனனின் திறமை இயல்பாய் இல்லாததை கிருஷ்ணர் உணர்ந்தார்.

அர்ஜூனனைப் பார்த்து பாட்டனார் மீது வைத்த பாசத்தின் விளைவாக ஒருவேளை இப்படி செய்கிறாயா என்ற கிருஷ்ணன் அர்ஜூனனை தேரிலிருந்து கீழே இறங்கி விட்டார். கிருஷ்ணர் கையில் சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு தானே ஆயுதம் ஏந்தி பீஷ்மரை அழிக்க தீர்மானம் பண்ணினார். பேராற்றல் படைத்த சுதர்சன சக்கரத்தை கிருஷ்ணர் கையில் ஏந்தினார். பாண்டவப் படைகளை அழித்துக்கொண்டிருந்த கொண்டிருந்த பீஷ்மரை நோக்கி கிருஷ்ணர் விரைந்து சென்றார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அங்கு திடீரென்று காட்சி மாறியது. கிருஷ்ணருடைய சக்கரத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது. பீஷ்மர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. கிருஷ்ணரை பார்த்து பீஷ்மர் என்னை அழித்து தள்ளிவிடுங்கள். நான் உயிரோடு இருந்தால் பாண்டவப் படைகளில் ஒரு பகுதியும் மிஞ்சாது. அதுவே என் தீர்மானம். தாங்கள் என்னை அழித்தால் அது நான் செய்த பாக்கியம் ஆகும் என்ற பீஷ்மர் கிருஷ்ணனைப் பார்த்து வணங்கி புகழ்ந்து தோத்திரம் செய்து இறைஞ்சினார்.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚