Sri Mahavishnu Info: மகாபாரதம் | 6 பீஷ்ம பருவம் | பகுதி - 7 மகாபாரதம் | 6 பீஷ்ம பருவம் | பகுதி - 7
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

மகாபாரதம் | 6 பீஷ்ம பருவம் | பகுதி - 7

Sri Mahavishnu Info

மகாபாரதம் | 6 பீஷ்ம பருவம் | பகுதி - 7
அர்ஜூனன் கிருஷ்ணரின் செயலை கண்டு மனம் பதறினான். ஓடோடி கிருஷ்ணரின் காலைப் பிடித்துக் கொண்டு நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும். நீங்கள் ஆயுதம் ஏந்தி போரிட மாட்டேன் என்று சொல்லியிருக்கின்றீர்கள். என்னை உற்சாகப்படுத்த இச்செயலை செய்கின்றீர்கள் என்று எண்ணுகிறேன். என்னுடைய வல்லமை முழுவதையும் இப்போதே யுத்தத்தில் பயன்படுத்துகிறேன் என்று உறுதி கூறுகிறேன். சினம் வேண்டாம் என வேண்டினான். கிருஷ்ணரின் ஆவேசம் தணிந்தது. அர்ஜூனன் கிருஷ்ணரிடம் நீங்கள் தேரில் ஏறிக் கொள்ளுங்கள். என் கடமையை நான் செய்கிறேன் என்னை எதிர்ப்பவர்கள் இன்று மடிந்தார்கள் என்று கூறினான். கிருஷ்ணரும் தேரில் ஏறி மீண்டும் சாரதி உத்தியோகத்தை கையில் எடுத்துக்கொண்டார்.

அர்ஜூனன் கடுமையான போரை மேற்கொண்டான். அவனின் காண்டீபம் இடியென முழங்கியது. யானைகள் சாய்ந்தன. குதிரைகள் வீழ்ந்தன. காலாட் படையினர் சரிந்தனர். ஆவேசத்தோடு அர்ஜூனன் போர் புரிந்தான். அவனை எதிர்த்து நின்ற பாட்டனாருக்கு அவன் செயல் பரம திருப்தியை உண்டு பண்ணியது. போர் வீரர்கள் அர்ஜுனனுடைய வீரத்தை பார்த்து திகைத்து நின்றனர். அன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 16,000 தேர்ப் படை வீரர்கள் அர்ஜூனனால் துடைத்து தள்ளப்பட்டனர். இந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு யானைகளும் குதிரைகளும் காலாட்படை களைந்து ஒழிக்கப்பட்டன. சூரிய அஸ்தமனமாயிற்று. மூன்றாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது. அன்று இரவெல்லாம் இருகட்சிகாரர்களும் அர்ஜுனனுடைய வீரத்தை பற்றிய பேசிக்கொண்டிருந்தார்கள்.

நான்காவது நாள் பீஷ்மர் தம்முடைய சேனைகளை வியாளம் என்ற வியூகத்தில் அமைத்தார். ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் பீஷ்மர் போர் புரிந்தார். அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன் அவ்வனுமானின் பேராற்றலுடன் அர்ஜுனன் போரிட்டான். பாண்டவர்கள் பக்கத்தில் அர்ஜுனனுடைய செல்வன் அபிமன்யுவுடன் பூரிசிரவசு, அஸ்வத்தாமா, சல்லியன் ஆகியோர் எதிர்த்துப் போர் புரிந்தனர். அர்ஜூனனுக்கு ஏற்ற மகனாக அவன் போர் புரிந்ததை பார்த்த போர் வீரர்கள் பெரு வியப்படைந்தனர். பாண்டவர்களுக்கு சேனாதிபதியாக இருந்த திருஷ்டத்யும்னன் சால்வனுடைய மகனின் தலையை இரண்டாகப் பிளந்தான். அதை முன்னிட்டு எதிரியின் படைகளில் பெரும் குழப்பம் உண்டாயிற்று. பீஷ்மரும் அர்ஜுனனும் பராக்கிரத்துடன் போர் புரிந்தார்கள். மற்றோரிடத்தில் பீமனிடம் துரியோதனனும் அவனது தம்பிகளும் வீராவேசத்துடன் சண்டையிட்டனர். துரியோதனனுடைய தம்பிகள் 8 பேரை பீமன் கொன்றான். தன் கதையால் யானைகளை வீழ்த்தினான். பீமனுடைய மைந்தனாகிய கடோத்கஜன் சென்ற இடங்களில் எல்லாம் எதிரிகளின் படைகளை துடைந்நு தள்ளினான். அவன் புரிந்த பயங்கர போர் எதிரிகளை நடுங்கச் செய்தது. துரியோதனின் வீரர்கள் சோர்ந்து போயினர். பலர் மாண்டனர். சூரிய அஸ்தமனமாயிற்று. நான்காம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚