Sri Mahavishnu Info: மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 2 மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 2

மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 2

Sri Mahavishnu Info

மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 2
கர்ணன் திரும்பிய திசையெங்கும் பிணங்கள் குவிந்தன. அவன் வில்லில் இருந்து புறப்படும் அம்பு அது புறப்பட்டதா இல்லையா என்று தெரியும் முன் இலக்கை தாக்கியது. கர்ணனின் அம்புகள் எதிரணியை சல்லடையாக துளைத்தது. துரியோதனன் பூரிப்படைந்தான். கௌரவ படைகள் ஆர்பரித்தன. வீரியத்துடன் போர் புரிந்தன. கர்ணனின் வருகையால் கௌரவ படை சற்று ஓங்கியது. பாண்டவர்கள் திகைத்தனர். கிருஷ்ணர் அர்ஜூனனை பார்த்து பார்த்தாயா கர்ணனை தெரிந்து கொள் அவன் ஆற்றலை. கர்னணனை நேருக்கு நேர் சந்திக்கும் போது தான் நீ உன்னை நிரூபிக்க வேண்டிய சரியான தருணம் வரும் என்றார்.

மற்றறொரு முனையில் அர்ஜுனனின் மகனான அபிமன்யு போர்களத்தில் தன் பெயரை நிலைநாட்டி கொண்டிருந்தான். அன்றைய போரில் அபிமன்யூவின் கை ஓங்கியது. அவனுக்குத் துணையாக கடோத்கஜன் இறங்கினான். துரியோதனனின் தம்பிகள் ஆறு பேரை கொன்றான். இதனால் துரோணரின் வியூகம் உடைக்கப்பட்டது. ஐந்து யானை படைகளை அம்பெய்து கொன்றான். அபிமன்யூவின் போர்த்திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவன் வெல்ல முடியாதவனாய் காட்சியளித்தான். தன் மகனின் வீரத்தை கண்டு அர்ஜுனன் மெய் சிலிர்த்தான்.

யுதிஷ்டிரனை பிடிக்க வேண்டுமென்று துரோணர் உறுதி பூண்டார். துரியோதனின் லட்சியத்தை நிறைவேற்ற துரோணர் யுதிஷ்டிரர் மீதே குறியாக இருந்தார். அதற்காக அவர் யுதிஷ்டிரனை நோக்கி சென்ற பாய்ச்சல் பயங்கரமாக இருந்தது. தம்மை எதிர்த்த அனைவரையும் அழித்தார். துரோணருக்கு துணையாக துச்சாதனன் மற்றும் ஆறு தம்பிகள் இருந்தனர். யுதிஷ்டிரரை சுற்றி வளைத்து போர் செய்தனர். யுதிஷ்டிரன் அவர் கையில் அகப்பட்டுக் கொள்ளும் தருவாயில் இருந்தான். அவன் அகப்பட்டுக் கொண்டான் என்று யூகித்த கௌரவர்கள் வெற்றிக்கு அறிகுறியாக கூப்பாடு போட்டது. இதற்கிடையில் தக்க தருணத்தில் அர்ஜுனன் இப்போராட்டத்தில் கலந்து கொண்டான். பீமனும் யுதிஷ்டிரரை காப்பதில் ஈடுபட்டான். அர்ஜூனனின் தாக்குதலைத் துரோணரால் சமாளிக்க முடியவில்லை. ருத்ரமூர்த்தி போர்க்களத்தில் யுத்தம் செய்வது போல் அர்ஜுனன் காட்சியளித்தான். எல்லா பக்கங்களிலிருந்தும் எதிரிப்படைகளை அவன் அழித்தான். அர்ஜுனனின் அஸ்திரங்கள் யுதிஷ்டிரருக்கு கேடயமாக அமைந்து அவரை பாதுகாத்தது. ஆஞ்சநேயரின் அருள் பெற்ற பீமன் அனைவரையும் பந்தாடினான். அர்ஜுனன் பீமன் மற்றும் கடோட்கஜனின் போர் ஆற்றலை கண்ட கௌரவர்கள் நடுங்க ஆரம்பித்தனர். துரோணரும் சோர்ந்து போனார். யுதிஜ்டிரனை பிடிக்க முடியாமல் துரோணர் மிகவும் துயரம் அடைந்தார். மாலையில் சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது.

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்