வைகாசி மாத சிறப்புகள்
வைகாசியானது தமிழ் வருடத்தின் இரண்டாவது மாதம் ஆகும். சூரியன் ரிஷப இராசிக்குள் பயணம் செய்யும் காலப் பகுதியே இம் மாதம் ஆகும். வளம் தரும் மாதமாக வைகாசி மாதம் காணப்படுகின்றது.

பொதுவாக மாதங்கள் அத்தனையும் பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டமைந்துள்ளன. அதிலும் வைகாசி மாதம் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. வைகாசி மாதத்தின் சிறப்புகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

வைகாசி மாத சிறப்புகள்

வசந்த வைகாசி

வசந்தம் உண்டாகக் கூடிய காலநிலை, விழாக்கள், வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதால் வைகாசி மாதமானது வசந்த வைகாசி என்று அழைக்கப்படுகிறது.

குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும்

சித்திரை முடிந்து வைகாசி மாதம் ஆரம்பிக்கும் பொழுது வணங்க வேண்டிய தெய்வமாக குலதெய்வம் உள்ளது. குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு கும்பத்தை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

வைகாசி மாதத்தின் சிறப்பு பெயர்கள்

இம் மாதத்திற்கு பல சிறப்பு பெயர்கள் உள்ளன. இம்மாதமானது மாதவ மாதம், வைகாசம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.

வைகாசி மாதத்தில் பிறந்த கடவுள்

நரனும் சிங்கமும் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, புத்த மதத்தை தோற்றுவித்த கௌதம புத்தர் மற்றும், இந்துக்களின் மரணக் கடவுளான எமதர்மன் ஆகியோர் வைகாசி மாதத்தில் தான் தோன்றியுள்ளனர்.

வைகாசி மாதத்தில் நம்மாழ்வார்,திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்கப்பெருமாள் அரையர், பெரிய திருமலை நம்பி, பராசர பட்டர், வியாசபதி போன்றோரின் திருநட்சத்திர தினங்களை வைகாசி மாதத்தில் கொண்டாடுகிறோம்

புராண நிகழ்வுகள்.

வைகாசி சுக்ல சதுர்த்தசியில்தான் மகாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரு நொடிப்பொழுதில் நரசிம்ம அவதாரம் எடுத்தார். வைகாசியில் மனமுருகி இறைவனை பிரார்த்தனை செய்திட ஆயுள் விருத்தி, செல்வம் பெருகல் புத்திரப்பேறு குடும்பத்தில் அமைதி, செல்வமும் கிட்டும்.

வழிபாட்டு பயன்கள்.

இம்மாதத்தில் வழிபாடுகள் மேற்கொள்ள ஆயுள், செல்வம், புத்திரப்பேறு ஆகியவை கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், செல்வமும் செழிக்கும்.

வைகாசியில் வைகுந்தனை நினைத்தாலும் சுகபோக வாழ்க்கை கிட்டும், வைகாசியில் புனித தீர்த்தங்களில் நீராடி திருமாலை துளசியால் வழிபட நற்பேறுகள் கிடைக்கும்.

வைகாசி முதல் தேதியில் கங்கை நதியில் நிராடினால் ஏழேழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகின்றது.

வைகாசி மாதம் இந்துக்களுக்கு மட்டுமின்றி, பௌத்தர்களுக்கும் சிறப்புக்குரிய மாதமாகும்.

வைகாசியில் புனித நதியில் நீராடி திருமாலை வழிபட்டு துளசியால் பூஜை செய்தால் நற்பேறுகள் பெறலாம் என்கிறது விஷ்ணு புராணம்.

பாவங்களை போக்கி நற்பேறுகளை அள்ளி வழங்கும் மாதம் இந்த வைகாசி மாதம். இந்த காலகட்டத்தில் இறைவழிபாடு மன அமைதியை கொடுக்கும். கடும் கோடையில் இருந்து வசந்த காலம் மாறுவதை போல நம்வாழ்வும் வளம் பெறும் என்பது ஐதீகம். வைகாசி மாதம் முழுவதுமே இறைவழிபாடு செய்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்.