Sri Mahavishnu Info: ராமாயணம் | 2 அயோத்தியா காண்டம் | பகுதி - 35 ராமாயணம் | 2 அயோத்தியா காண்டம் | பகுதி - 35

ராமாயணம் | 2 அயோத்தியா காண்டம் | பகுதி - 35

Sri Mahavishnu Info
ராமாயணம் | 2 அயோத்தியா காண்டம் | பகுதி - 35
ராஜ குமாரர்கள் நால்வரும் மந்தாகினி ஆற்றங்கரைக்கு சென்றார்கள். அங்கே தசரதருக்கு செய்ய வேண்டிய தர்பணங்களை முறைப்படி செய்தார்கள். ஒருவரை ஒருவர் அணைத்து தங்கள் துயரத்தை தீர்த்துக்கொண்டு குடிசைக்கு திரும்பினார்கள். கௌசலை சுமத்ரை கைகேயி மூவரையும் ராமர் இருக்கும் குடிசைக்கு செல்லலாம் வாருங்கள் என்று வசிஷ்டரரும் அவர்களுடன் கிளம்பினார். வழியில் மந்தாகினி ஆற்றங்கரையில் பித்ருக்களுக்கான தர்ப்பை புல்லும் எள்ளும் வைத்திருப்பதை பார்த்தார்கள். இந்த ஆற்றங்கரையில் இருந்து தான் தங்களுக்கு தேவையான நீரை கொண்டு செல்வார்கள் அருகில் தான் ராமர் இருக்கும் குடிசை இருக்கின்றது என்றார் வசிஷ்டர். எவ்வளவு வசதியாக வாழ்ந்த ராஜ குமாரர்கள் இங்கிருந்து குடிசை வரை தண்ணீர் சுமந்து கொண்டு செல்கின்றார்களா என்று கௌசலை அழ ஆரம்பித்தாள். சுமத்திரை கௌசலையை ஆறுதல் படுத்தினாள். ராமருக்காக லட்சுமணன் தினந்தோறும் தண்ணீரை சுமந்து கொண்டு செல்வதை மகிழ்ச்சியாகவே செய்வான். லட்சுமணனுக்கு இது பெரிய கடினமான காரியம் இல்லை என்று பேசிக்கொண்டே குடிசைக்கு அருகில் வந்தார்கள்.

நான்கு ராஜ குமாரர்களும் பட்டத்து அரசிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அரண்மனையில் சுக போகத்துடன் வாழ்ந்த ராஜகுமாரர்கள் குடியையில் இருப்பதை பார்த்ததும் சக்தியற்றவர்களாக கௌசலையும் சுமத்ரையும் அங்கேயே அமர்ந்து விட்டார்கள். கௌசலையிடம் விரைவாக வந்த ராமர் அவளை தூக்கி தலையில் தடவிக்கொடுத்தார். ராமரின் ஸ்பரிசத்தில் மயங்கிய கௌசலை ஆனந்தத்தில் மூழ்கிப்போனாள். சீதையிடம் வந்த கௌசலை ஜனகருக்கு மகளாகப் பிறந்து அயோத்திக்கு மருமகளாய் வந்து இந்த காட்டில் சிறு குடியையில் தங்கியிருக்கின்றாய். உன்னை பார்த்ததும் நெருப்பில் எரியும் விறகு போல் என் மனம் எரிகிறது என்று சீதையை அணைத்துக்கொண்டாள். சுமித்ரையின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி ராமரும் லட்சுமணனும் ஆசி பெற்றனர். நீண்ட கால பிரிவை ஒட்டி ஒருவரை ஒருவர் தங்கள் கண்களில் நீர் வழிய அணைத்துக் கொண்டு ஆனந்தம் கொண்டார்கள்

ராஜ குமாரர்கள் பட்டத்து அரசிகள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்கின்றார்கள் என்று தெரிந்தவுடன் படைகள் அனைத்தும் அவர்கள் இருக்குமிடம் நோக்கி விரைந்து வந்தார்கள். தசரதரை இழந்த துக்கத்தில் இருந்த அனைவரையும் ஒன்றாக பார்த்த மக்கள் இனி ராமர் அயோத்திக்கு திரும்பி வந்து விடுவார் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். வசிஷ்டருடைய பாதங்களில் ராமரும் லட்சுமணனுடன் பரதனும் சத்ருக்கணனும் வீழ்ந்து வணங்கி அவருக்கு தங்களுடைய வணக்கத்தை செலுத்தினார்கள். வசிஷ்டர் அவர்களுக்கு ஆசி கூறி ஓரிடத்தில் அமர்ந்தார். அவரை பின்பற்றி அனைவரும் அமர்ந்தார்கள். பரதன் ராமரின் அருகில் வந்து அமர்ந்தான். மக்கள் அனைவரும் பரதன் ராமரிடன் என்ன பேசப்போகின்றார் எப்படி ராமரை அயோத்திக்கு அழைக்கப்போகின்றார் என்ற ஆர்வத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
Two Moustaches Brass Diya

🪔 Two Moustaches – சங்கு சக்ர நாமம்: வடிவம் கொண்ட பிரத்யேக பித்தளைக் கம்பத் தீபம்

✨ சங்கம், சக்கரம், பத்மம், கதாயுடன் வடிவமைக்கப்பட்ட பரந்த கால் அடிப்படையுடன் அழகிய தீபம்

🎉 இப்போது 40% தள்ளுபடி!

⭐ மதிப்பீடு: 4.3 / 5 (703 பேர்)

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்