Sri Mahavishnu Info: ராமாயணம் | 3 ஆரண்ய காண்டம் | பகுதி – 31 ராமாயணம் | 3 ஆரண்ய காண்டம் | பகுதி – 31
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ராமாயணம் | 3 ஆரண்ய காண்டம் | பகுதி – 31

Sri Mahavishnu Info
ராமாயணம் | 3 ஆரண்ய காண்டம் | பகுதி – 31
ராமர் சிறிது நேரம் செயல்பட முடியாமல் தவித்தார். லட்சுமணா சீதையை ராட்சசர்கள் கொன்று தின்றிருப்பார்கள். சீதையை இழந்து விட்டேன். என்னை நம்பி வந்தவளை பாதுகாக்காமல் விட்டுவிட்டேன். என்னை போல் ஒரு பாவி உலகத்தில் இல்லை. இனி என் உயிர் எனக்கு வேண்டியதில்லை. வனத்திற்கு சீதையுடன் சென்றவன் ராட்சசர்களுக்கு சீதையை உணவாக கொடுத்து விட்டு தனியாக வந்திருக்கின்றான் என்று மக்கள் பேசுவார்கள். அவர்களுக்கு சமாதானம் சொல்ல என்னால் முடியாது. இனி அயோத்திக்கு தான் போக முடியாது. நீ அயோத்திக்கு சென்று நமது தாயார்களை பார்த்துக்கொள். பரதனிடம் அயோத்திக்கு இனி நீயே அரசன் என்று நான் உத்தரவிட்டதாக சொல்லிவிடு என்று அழது கொண்டே கூறினார்.

ராமருக்கு லட்சுமணன் தொடர்ந்து தைரியம் சொல்லிக் கொண்டே இருந்தான். மனநிலை தெளிவில்லாமல் தைரியம் இழந்தவர்கள் ஒரு செயலையும் செய்ய முடியாது. துக்கத்தை அடக்கிக் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் இந்த காடு மலை குகைகள் என்று அனைத்து திசைகளிலும் தேடுவோம். மகாவிஷ்ணு பலிச்சக்கரவர்த்தியை அடக்கி மூவுலகையும் அடைந்தது போல் நீங்களும் சீதையை நிச்சயம் அடைவீர்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தான். இருவரும் சீதையை தேடிக்கொண்டே இருந்தார்கள். அப்போது மான் கூட்டம் ஒன்றின் சகுனங்களை பார்த்த லட்சுமணன் தெற்கு திசை நோக்கி சென்று தேடலாம் வாருங்கள் என்று ராமரை அழைத்துச் சென்றான். வழியில் ஓரிடத்தில் பூக்கள் சிதறிக் கிடந்தது. பூக்களை கண்ட ராமர் இதோ நான் சீதைக்கு கொடுத்த பூக்கள் இங்கே சிதறிக்கிடக்கிறது என்று அழுதுகொண்டே சீதையை தேடி ஓட ஆரம்பித்தார். பூக்கள் இருக்கும் காட்டை சுற்றி தேடிப்பார்த்தார்கள். அங்கு ராட்சசனின் காலடித் தடங்களும் சீதையின் காலடித் தடங்களும் இருந்தன அருகில் சீதை அணிந்திருந்த மணிகள் சிதறிக் கிடந்தது. இதனை கண்ட ராமர் பார்த்தாயா லட்சுமணா சீதையை மிகவும் துன்புறுத்தி இருக்கிறான் ராட்சசன் என்று புலம்ப ஆரம்பித்தார்.

ராமரும் லட்சுமணனும் அந்த இடத்தை சுற்றி ஏதேனும் தடயங்கள் கிடைக்கின்றதா என்று பார்த்தார்கள். அருகில் தேரின் உடைந்த பாகங்களும் தேர் ஓட்டும் ராட்சச சாரதி ஒருவன் இறந்து கிடந்ததையும் கண்டார்கள். இரண்டு ராட்சசர்கள் சீதையை திண்பதற்காக சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள் பெரிய சண்டை ஒன்று இங்கு நடந்திருக்கின்றது. இந்த நேரத்தில் ஒரு தெய்வம் கூட சீதையை காப்பாற்ற வரவில்லை. இந்த கொடுமையான உலகத்தை என்னுடைய அஸ்திரங்களால் அழித்து விடுவதே சரியாக இருக்கும் நான் கற்ற அஸ்திரங்கள் பயன்படாமல் போகுமா பார்க்கலாம் என்று ராமர் லட்சுமணனிடம் புலம்பிக்கொண்டே கூறினார். லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். உங்களுடைய பெரும் துயரத்தினால் உங்களுடைய இயற்கையான குணங்களை விட்டு விடாதீர்கள். ஒருவன் செய்த துஷ்ட செயலால் உலகத்தை வெறுக்கவோ கோபிக்கவோ தேவையில்லை. நம்முடைய எதிரி யார் என்று முதலில் தெரிந்து கொள்வோம். பிறகு செய்ய வேண்டியதை பற்றி யோசித்து செயல்படுவோம் என்று தைரியம் சொல்லிக்கொண்டே வந்தான். சிறிது தூரத்தில் பறவை ஒன்று சிறகு வெட்டப்பட்ட நிலையில் இரத்ததுடன் துடித்துக்கொண்டிருப்பதை கண்டார்கள்.

குறிப்பு: 

ராமாயணம் புராணத்தில் ஆரண்ய காண்டம் பகுதியில் சீதையை இழந்த ராமர் புலம்பி அழுவதை படிக்கும் பலர் விஷ்ணுவின் அவதாரமாக இருக்கும் ராமர் ஏன் அழ வேண்டும். இறைவன் ஏன் துன்பப்படுகின்றார் என்று சந்தேகங்கள் கேட்பதுண்டு. அதற்கான பதில்  

சீதை ராமரிடம் சரணடைந்திருப்பதை போல் இறைவனை சரணடைந்திருக்கும் பக்தன் சிறு தவறு செய்து இறைவனை சென்றடையும் பாதையை விட்டு வழி தவறிப் போனால் இறைவனின் திருவுள்ளம் துன்பப்படுகின்றது என்ற கருத்து இந்த இடத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கின்றது.
இயற்கை தங்க நெல் தோரணம் – Widget
🌾 இயற்கை தங்க நெல் தோரணம் – 3.5 அடி + 2 பாய் ஹேங்கிங்ஸ்
வாசல் & பூஜை அறைக்கான அழகிய அலங்காரம் • தினசரி பூஜைக்கும் பண்டிகைக்கும் பொருத்தம் ✨
இயற்கை தங்க நெல் கதிர்களுடன் பூஜை அறை தோரணம்
⭐ 4.0 / 5 (109 மதிப்பீடுகள்) • கடந்த மாதம் 100+ பேர் வாங்கினர்
  • இயற்கை தங்க நிற நெல் கதிர்கள் – சுபநிகழ்வுகளுக்கு ஏற்ற அலங்காரம்
  • 3.5 அடி நீளம் – வீட்டின் வாசலுக்கும் பூஜை அறைக்கும் பொருந்தும்
  • 2 பாய் ஹேங்கிங் – கூடுதல் அழகு மற்றும் சமநிலை
  • தீபாவளி, கிரஹப் பிரவேசம், திருமணம், பரிசு – எல்லாவற்றுக்கும் சிறந்த தேர்வு 🎁
🔗 மேலும் பார்க்க / ஆர்டர் செய்ய
Sri Mahavishnu Info சார்பில் பரிந்துரை – உங்கள் இல்லத்திற்கு நன்மையும் அழகும் தரட்டும் 🙏
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்