Sri Mahavishnu Info: ராமாயணம் | 3 ஆரண்ய காண்டம் | பகுதி – 7 ராமாயணம் | 3 ஆரண்ய காண்டம் | பகுதி – 7
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ராமாயணம் | 3 ஆரண்ய காண்டம் | பகுதி – 7

Sri Mahavishnu Info
ராமாயணம் | 3 ஆரண்ய காண்டம் | பகுதி – 7
ராமர் சீதை லட்சுமணன் மூவரும் அகத்தியரின் தம்பி இத்மவாஹர் ஆசிரமத்திற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டு அகத்தியரின் ஆசிரமம் நோக்கி சென்றார்கள். தூரத்தில் மிருகங்களும் பறவைகளும் விளையாடிக்கொண்டும் நடுவில் முனிவர்கள் சிலர் பூஜைக்காக மலர்களை சேகரித்துக் கொண்டும் இருப்பதை பார்த்தார்கள். அகத்தியரின் ஆசிரமத்திற்கு அருகில் வந்துவிட்டோம் என்பதை உணர்ந்த ராமர் லட்சுமணனிடம் முதலில் நீ மட்டும் சென்று அகத்தியரிடம் உள்ளே வருவதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டு வா என்றார். லட்சுமணன் மட்டும் தனியாக ஆசிரமத்தின் அருகில் சென்று அங்கிருந்த அகத்தியரின் சீடர் ஒருவரிடம் தசரதரின் புதல்வர்கள் ராமர் லட்சுமணன் இருவரும் ஜனகரின் மகள் சீதையும் அகத்தியரை பார்த்து ஆசி பெற காத்திருக்கின்றார்கள் வரலாமா என்று கேட்டு செய்தி சொல்லி அனுப்பினான். சீடரும் அகத்தியரிடம் லட்சுமணன் சொன்னதை அப்படியே சொன்னார். இதனை கேட்ட அகத்தியர் வெகுகாலமாக அவர்களின் வரவை எதிர் நோக்கி காத்திருக்கின்றேன். நல்ல படியாக உபசரித்து அவர்களை விரைவாக அழைத்துவா அவர்களை பார்க்க ஆவலாக இருக்கின்றேன் என்று சீடரிடம் கூறினார். மூவரும் அகத்தியரை காண சென்றார்கள்.

ராமரை கண்டதும் அகத்தியர் தானே எழுந்து வந்து ராமரை கட்டி அணைத்து வரவேற்றார். நீங்கள் சித்திர கூடம் வந்த போதே எனக்கு தகவல் வந்தது. நீங்கள் எப்படியும் இங்கு வருவீர்கள் என்று தங்களின் வருகைக்காக காத்திருந்தேன். உங்கள் தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற காட்டில் இத்தனை வருடங்கள் வனவாசம் இருந்தீர்கள். மீதி இருக்கும் சில வருடங்கள் உங்களின் விரதம் பூர்த்தியாகும் வரை நீங்கள் இங்கேயே தங்கலாம் என்றார் அகத்தியர். அதற்கு ராமர் நான் தண்டகாரண்ய முனிவர்களுக்கு அவர்களை காப்பதாக வாக்கு கொடுத்திருக்கின்றேன் எனவே தங்களிடம் ஆசி பெற்றவுடன் தண்டகாரண்யம் செல்ல வேண்டும் என்றார். ராமரின் கூற்றை ஏற்றுக்கொண்ட அகத்தியர் மூவருக்கும் சிறப்பான விருந்தளித்து உபசரித்தார்.

அகத்திய முனிவர் ராமரிடம் தங்கத்தால் செய்யப்பட்டு ரத்தினங்கள் பதிக்கப்பட்ட வில் எடுக்க எடுக்க குறையாத அம்புகள் உள்ள அம்பறாத்தூணி மற்றும் கத்தியை அளித்தார். இந்த ஆயுதங்கள் விஷ்ணுவுக்காக தேவலோகத்து விஸ்வகர்மா செய்திருந்தார். முற்காலத்தில் இந்த ஆயுதங்களை வைத்து விஷ்ணு பலமுறை அசுரர்களை அழித்தார். அதனை இப்போது உன்னிடம் தருகிறேன். இதனை வைத்து ராட்சசர்களை அழிப்பாயாக என்று ஆசி கூறினார். பின்பு ராமரிடம் தற்போது நீங்கள் தங்கியிருக்கும் குடிலுக்கு அருகில் இருக்கும் பஞ்சவடி என்னும் இடத்தில் குடில் அமைத்து மீதி இருக்கும் வனவாச நாட்களை கழியுங்கள் என்று ஆசி கூறினார். ராமரும் அவ்வாறே செய்வதாக உறுதி அளித்து கிளம்புவதறகு அனுமதி தருமாறு கேட்டுக்கொண்டார். அகத்தியர் ராம லட்சுமணனிடம் சீதை அரண்மனையில் சுகமாக வாழ்ந்து வந்தவள். காட்டில் கடினங்களுக்கு நடுவில் வசிக்காத ராஜகுமாரி. உங்களுக்காக கடினங்களை பொருட்படுத்தாமல் உங்களுடன் வசித்து வருகிறாள். பஞ்சவடியில் சீதையை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு ஆசி கூறி அவர்கள் செல்ல அனுமதி கொடுத்தார். மூவரும் அங்கிருந்து கிளம்பி பஞ்சவடியை நோக்கி பயண்ம் செய்தார்கள்.

🪔 உங்கள் பூஜை அறையில் ஒளிரும் ஒரு புனித தீபம்!

Brass Shank Chakra Diya

🪔 ஶ்ரீ யஜ்ஞா - சங்குசக்கரத் தீபம்

எளிதாக தூக்கக்கூடிய, ஆன்மீகத் தன்மையுடன் உள்ள ஊதாப்பழை நிற சங்குசக்கரத் தீபம். 5 அங்குல உயரம் – உங்கள் பூஜை அறைக்கு ஒரு அழகு மற்றும் அமைதி தரும் தீபம்!

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்