Sri Mahavishnu Info: ராமாயணம் | 1 பால காண்டம் | பகுதி - 8 ராமாயணம் | 1 பால காண்டம் | பகுதி - 8

ராமாயணம் | 1 பால காண்டம் | பகுதி - 8

Sri Mahavishnu Info
ராமாயணம் | 1 பால காண்டம் | பகுதி - 8
விஸ்வாமித்ரரும் ராம லட்சுமனனும் அதிகாலையில் எழுந்து சரயு நதியும் கங்கையும் சங்கமிக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கு ஒரு ஆசிரமம் இருந்தது. அந்த இடத்தின் அழகை பார்த்த ராமர் விஸ்வாமித்ரரிடம் இந்த இடம் மிகவும் ரம்யமாக இருக்கின்றது. இது என்ன இடம் என்று கேட்டார். அதற்கு விஸ்வாமித்ரர் இந்த ஆசிரமத்திற்கு சிவபெருமான் ஆசிரமம் என்று பெயர். சிவபெருமான் யோகத்தில் இருந்த இடம் இது. யோகத்தில் இருந்த சிவபெருமானின் யோகத்தை கலைக்க மன்மதன் முயன்ற போது சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனின் அங்கத்தை (உடல்) அழித்து காமதகனம் செய்தார். அதனால இந்த நாட்டிற்கு அங்க நாடு என்றும் இந்த இடத்திற்கு காமஷ்ரமம் என்று பெயர் என்றார். இந்த இடத்தில் சில ரிஷிகள் ஆசிரமம் அமைத்து தங்கி இருக்கிறார்கள் என்று அங்கு அழைத்து சென்றார். ஆசிரமத்திற்குள் மூவரும் சென்றனர். அங்கு இருந்த ரிஷிகள் தங்கள் ஞானகண்ணால் வந்திருப்பது விஸ்வாமித்ரரும் ராம லட்சுமனனும் என்று அறிந்து கொண்டு வரவேற்று உபசரித்து சராயு நதியை கடப்பதற்கு அவர்களுக்கு ஒர் படகை கொடுத்தார்கள்.

சராயு நதிதை கடந்ததும் அங்கு இருந்த இடம் பாலைவனம் போல் பயங்கரமாக தென்பட்டது. ஒரு பறவை மிருகங்களும் இல்லை. அந்த காட்டை கடங்கும் போது ராமர் லட்சுமனன் இருவரும் மிகவும் களைப்படைந்தனர். பசியும் தாகமும் அவர்களை பற்றிக்கொண்டது. இதனை கண்ட விஸ்வாமித்ரர் இரவு உபதேசித்த மந்திரத்தை அவர்கள் உச்சரிக்க வேண்டும் என்றும் சரியான நேரத்தில் இதனை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று வாழ்க்கை முறையை பயிற்சி கொடுத்தார். இருவரும் மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்ததும் களைப்பு பசி தாகம் நீங்கி ஆயிரம் யானைகளின் பலம் வந்தது போல் உற்சாகமடைந்தார்கள். இந்த இடம் ஏன் இப்படி இருக்கின்றது இங்கு ஒரு உயிரினம் கூட இருப்பதற்கான அறிகூறி இல்லையே என்று ராமன் விஸ்வாமித்ரரிடம் கேட்டார்.

இங்கு தாடகை என்று ஒரு யட்சினி இருக்கின்றாள். அவளுக்கு ஆயிரம் யானை பலம் அவ கோபத்துனால இந்த இடத்தை அழித்துவிட்டாள் என்று விஸ்வாமித்ரர் கூறினார். யட்சினிகளுக்கு அவ்வளவு பலம் இருக்குமா என்று ராமர் கேட்டார். அதற்கு விஸ்வாமித்ரர் சுகேதுன்னு ஒரு யட்சன் இருந்தான் அவன் பிரம்மாவிடம் தவம் செய்து ஒரு பெண் குழந்தையை வரமாக கேட்டான், பிரம்மா அவன் கேட்ட வரத்தை கொடுத்தார். அவனுக்கு தாடகை என்ற பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு சுகேது ஆயிரம் யானை பலம் கொடுத்தான். அவள் வளர்ந்து சுந்தன் என்ற ஒருவனை திருமணம் செய்தாள். அவளுக்கு மாரிசன் என்ற குழந்தை பிறந்தது. இந்த சுந்தன் அகத்திய முனிவரை தொந்தரவு செய்தான். அகத்தியர் அவனை அழித்து விட்டார். இந்த தாடகையும் மாரிசனும் அகத்தியரை அழிக்க எதிர்த்தார்கள். அகத்தியர் இருவரையும் ராட்சசர்களாக போங்கன்னு சபித்தார். ராட்சசர்களான தாடகையும் இந்த ஆக்ரமிப்பு செய்து கோபத்தில் இந்த இடத்தை அழித்துவிட்டாள். இப்பொழுது நீ இந்த தாடகையை வதம் செய்துவிடு. பெண்ணை அழிக்க வேண்டுமா என்று யோசிக்காதே இதற்கு முன் தர்மத்திற்காக இந்திரன் விரோசனன் என்ற பெண்ணை வதம் செய்திருக்கிறான். விஷ்ணு பகவான் காவியமாதாவை வதம் செய்திருக்கிறார். அதுபோல் இந்த உலகத்துக்கு கெடுதல் நினைக்கின்ற பெண்அழிக்கலாம் தவறில்லை என்று விஸ்வாமித்திரர் ராமனுக்கு கட்டளை இட்டார்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்