Sri Mahavishnu Info: ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 24 ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 24

ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 24

Sri Mahavishnu Info
ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 24
ராமரும் லட்சுமணனும் நாக பாணத்தில் இருந்து பிழைத்து விட்டார்கள். மீண்டும் யுத்தம் செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள் என்று மிகவும் பதறியபடி ராட்சச ஒற்றர்கள் ராவணனிடம் கூறினார்கள். இதனை கேட்ட ராவணன் நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது. நாக பாணத்தில் இருந்து இது வரை யாரும் தப்பித்தது கிடையாது. இந்த ராம லட்சுமணர்கள் எப்படி தப்பித்தார்க்கள். இந்திரஜித்தின் நாக பாணம் வீணாகப் போனது என்றால் நமக்கு ஆபத்து இருக்கிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் நாம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மிகவும் கவலையுடன் பேசினான். சிறிது நேரத்தில் ராவணனின் கர்வம் தலை தூக்கியது. நாம் ஏன் ராமரை பார்த்து பயப்பட வேண்டும் என்று தூம்ராசன் என்ற ராட்சசனை அழைத்தான் ராவணன். மகா பலசாலியான நீ இருக்க நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். உனக்கு தேவையான படைகளையும் ஆயுதங்களையும் திரட்டிக் கொண்டு போய் ராமரையும் இந்த வானர படைகளையும் அழித்து வெற்றியுடன் திரும்பி வா என்று உத்தரவிட்டான் ராவணன். தூம்ராசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அரசன் தனக்கு மிகப்பெரிய கவுரவத்தை அளித்திருக்கிறார் என்று பெருமைப் பட்டுக் கொண்டான். தனக்கு தேவையான படைகளை திரட்டிக் கொண்டு வானரங்களுடன் யுத்தம் செய்ய புறப்பட்டான்.

ராமரை எதிர்க்கப் புறப்பட்ட தூம்ராசன் முதலில் அனுமனை எதிர்த்து யுத்தம் செய்தான். யுத்தத்தில் இரு தரப்பில் இருந்தும் ஏராளமானவர்கள் இறந்தார்கள். அனுமனுக்கும் தூம்ராசனுக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. தூம்ராசன் தன்னுடைய முள்ளால் ஆன கதையில் அனுமனின் தலையில் தாக்கினான். அதனை பொருட்படுத்தாத அனுமன் பெரிய மலையை தூக்கி தூம்ராசன் மீது போட்டார். தூம்ராசன் மலையின் அடியில் உடல் பாகங்கள் நசுங்கி இறந்து போனான். இதனை கண்ட ராட்சச வீரர்கள் யுத்த களத்திலிருந்து பயந்து ஓடினார்கள். தூம்ராசனுடன் நடத்திய யுத்தத்தில் அனுமன் மிகவும் களைப்படைந்திருந்தார். அனுமனை வானர வீரர்கள் மிகவும் போற்றிக் கொண்டாடினார்கள். இதனால் மேலும் உற்சாக மடைந்த அனுமன் தனது களைப்பை பொருட்படுத்தாமல் மீண்டும் யுத்தம் செய்ய ஆரம்பித்தார். தூம்ராசன் அனுமனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மனம் கலங்கிய ராவணன் இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிகவும் கோபத்துடன் பெரு மூச்சு விட்டு மாய வித்தைகள் செய்யும் வஜ்ரதம்ஷ்ட்ரனை அழைத்தான். மாய வித்தைகளில் வலிமையான நீ உனக்கு தேவையான படைகளையும் ஆயுதங்களையும் திரட்டிக் கொண்டு போய் ராமரையும் இந்த வானர படைகளையும் அழித்து வெற்றியுடன் திரும்பி வா என்று உத்தரவிட்டான் ராவணன். வஜ்ரதம்ஷ்ட்ரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனக்கு தேவையான படைகளை திரட்டிக் கொண்டு வானரங்களுடன் யுத்தம் செய்ய புறப்பட்டான்.

ராமரை எதிர்க்கப் புறப்பட்ட வஜ்ரதம்ஷ்ட்ரன் தெற்கு வாசல் வழியாக கிளம்பினான். அப்போது வானத்தில் இருந்து அவனுக்கு முன்பாக பெரிய நெருப்புக் கங்குகள் விழுந்தன. நரிகள் ஊளையிட்டன. கொடிய விலங்குகள் ஓலமிட்டன. பல ராட்சச வீரர்கள் கால் இடறி கீழே விழுந்தார்கள். பல அபசகுனங்களை கண்ட வஜ்ரதம்ஷ்ட்ரன் பயந்தாலும் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு முதலில் அங்கதனிடம் யுத்தம் செய்தான். யுத்தத்தில் வஜ்ரதம்ஷ்ட்ரன் மிகப்பெரிய மாயங்கள் செய்து வானர வீரர்களை பயமுறுத்திக் கொன்றாலும் வானர வீரர்கள் எதற்கும் அஞ்சாமல் யுத்தம் செய்து பல ராட்சச வீரர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள். வஜ்ரதம்ஷ்ட்ரன் மாயங்கள் செய்து தன்னுடைய வில்லில் இருந்து ஒரே நேரத்தில் பல அம்புகளை அங்கதன் மீது எய்தான். அம்புகளால் தாக்கப்பட்ட அங்கதன் பெரிய மரங்களையும் பெரிய பாறைகளையும் இடைவிடாமல் வஜ்ரதம்ஷ்ட்ரன் மூது தூக்கிப் போட்டுக் கொண்டே இருந்தான். மரங்கள் மற்றும் பாறைகளுக்கு நடுவில் சிக்கிய வஜ்ரதம்ஷ்ட்ரன் மயக்கம் அடைந்தான். அவனது மயக்கம் தெளியும் வரை ஓய்வெடுத்த அங்கதன் அவனது மயக்கம் தெளிந்ததும் அவனை தனது கதை ஆயுதத்தால் தாக்கி கொன்றான். இந்திரனுக்கு நிகரான வலிமையுள்ள வஜ்ரதம்ஷ்ட்ரன் அங்கதனால் கொல்லப்பட்டு விட்டான் என்று வானரவீரர்கள் அங்கதனை போற்றி கொண்டாடினார்கள்.
Indianara Painting
Indianara Religious Painting – Synthetic Wood
★★★★★ 4.5 (1,149)
27×30.5×1 cm • Multicolour • Home Decor • Devotional Wall Frame
🛒 Buy on Amazon
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்