Sri Mahavishnu Info: ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி - 27 ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி - 27
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி - 27

Sri Mahavishnu Info
ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி - 27
ரம்பா பேசியதை கேட்ட ராவணன் அவளிடம் பேச ஆரம்பித்தான். நீ என்னுடைய மருமகள் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பது மானிட குலப் பெண்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் நீ தேவலோகத்துப் பெண் உனக்கு இது போல் எந்த ஒரு நியதியும் கிடையாது. அதனால் நான் உன்னை விரும்புவதில் தவறில்லை என்று அவளது அனுமதி இல்லாமல் அவளை பலவந்தமாக அடைந்தான். அவள் அணிந்திருந்த ஆபரணங்களும் உடைகளும் நிலை குலைய தன் தலை கேசம் அவிழ்ந்து யானை புகுந்து கலக்கிய நதி போல ஆனாள் ரம்பா. தன்னுடைய எண்ணம் நிறைவெறியதும் ரம்பாவைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் அங்கிருந்து கிளம்பினான் ராவணன். தன் கை கால்கள் நடுங்க தடுமாறியபடியே அழுத முகத்துடன் நளகூபரன் இருக்கும் இடம் வந்து அவனது காலில் விழுந்து அழுது புலம்பினாள் ரம்பா. அவளிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்ட நளகூபரன் கோபத்தில் ராவணனுக்கு கடுமையான ஒரு சாபத்தை கொடுத்தான். ராவணன் விருப்பம் இல்லாத பெண்ணை நெருங்கியதால் இனி ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளை ராவணன் தொட்டால் அவனது தலை ஏழு துண்டுகளாக வெடித்து சிதறும் என்ற சாபத்தை கொடுத்தான். அச்சமயம் ஆகாயத்தில் தேவ துந்துபிகள் முழங்கின. அனைத்து தேவர்களும் மகிழ்ந்தனர். இந்த பயங்கர சாபத்தைக் கேட்ட ராவணன் இனி எந்த பெண்களின் அனுமதி இல்லாமல் நெருங்கக் கூடாது என்று முடிவெடுத்தான். இந்த சாபத்தால் உலகம் முழுவதையும் வெல்ல யுத்தம் செய்த போது ராவணனால் அபகரிக்கப்பட்டு சிறை வைக்கப்பெற்றிருந்த பெண்களும் நிம்மதியடைந்தனர். நளகூபரன் கொடுத்த சாபம் அவர்களுக்கு விடுதலை அளிப்பதாக அமைந்தது.

இந்திரலோகத்தை வெற்றி பெற முடிவெடுத்த ராவணன் தன் மகன் மேகநாதனுடன் இந்திரலோகம் வந்து சேர்ந்தான். ராவணன் வந்திருக்கிறான் என்ற செய்தியைக் கேட்டதும் நடுங்கிய இந்திரன் தன் படைகளை யுத்தத்திற்கு தயாராக இருக்குமாறு சொல்லி விட்டு விஷ்ணுவிடம் உதவி கேட்டு வந்தான். விஷ்ணு இந்திரனிடம் பேச ஆரம்பித்தார். பிரம்மா கொடுத்த வரத்தின் பலத்தால் ராவணன் நிமிர்ந்து நிற்கிறான். பிரம்மா இவனுக்கு கொடுத்த வரங்களும் மாற்ற முடியாதவை. வரத்தின் மகிமை அவனுக்கு அபரிமிதமான சக்தியைக் கொடுத்திருக்கிறது. ராவணனை சுலபமாக வெல்ல முடியாது. ராவணன் தன் மகன் மேகநாதனுடன் வந்திருக்கிறான். மேகநாதன் பிறப்பிலேயே பலசாலி தற்போது மேலும் யாகங்கள் பல செய்து மகேஸ்வரனிடம் வரமும் பெற்றிருக்கிறான். நான் இந்த ராட்சசர்களை அழிக்க சரியான நேரம் வரவில்லை. சரியான நேரம் வரும் போது இந்த ராட்சசர்களை அழித்து அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பேன். இப்போது நீ பயப்படாதே. உன்னால் முடிந்த வரை யுத்தம் செய் என்றார். விஷ்ணு கொடுத்த தைரியத்தில் யுத்தம் செய்ய முடிவு செய்த இந்திரன் அங்கிருந்து கிளம்பினான்.

இந்திரலோகத்திற்கு திரும்பி வந்த இந்திரன் ஜராவதம் வெள்ளை யானையில் சென்று தன் படைகளுடன் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்ய ஆரம்பித்தான். யுத்தம் கடுமையாக இருந்தது. ராவணனின் பக்கத்தில் இருந்த ராட்சச வீரர்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்கள். ராவணனின் மகன் மேகநாதன் தன் மாயா சக்தியால் அந்த இடத்தை சுற்றி இருட்டை உண்டாக்கி அனைவருக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தினான். அனைவரும் தடுமாறிக் கொண்டிருந்த போது தன் உடலை மறைத்துக் கொண்டு இந்திரனை கட்டி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். இந்திரனுடன் ராவணனிடம் வந்த மேகநாதன் இந்திரன் நம் பிடியில் சிக்கிக் கொண்டான் இனி யுத்தம் செய்ய வேண்டியதில்லை. மூவுலகையும் உங்கள் விருப்பம் போல் ஆட்டுவிக்கலாம் என்றான். தன் மகன் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த ராவணன் நீ ஒருவனாகவே இந்திரனை வெற்றி பெற்று விட்டாய் யுத்தத்தில் நாம் வெற்று பெற்று விட்டோம் என்று அறிவித்து விட்டு யுத்தத்தை நிறுத்தி இந்திரனுடன் இலங்கைக்கு செல்ல தன் படை வீரர்களுக்கு உத்தரவிட்டான் ராவணன்.

🧹 தேங்காய் குச்சி தூய்மை துடைப்பம் (4 Pack)

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் தரமான தேங்காய் குச்சி துடைப்பம். வீட்டில், தோட்டத்தில், வெளிப்புறம் எல்லாமே எளிதாக சுத்தம் செய்யலாம்.

  • 🌿 இயற்கை தேங்காய் குச்சி
  • 💪 பலமாகவும் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்
  • 🧹 தூசி, குப்பை எளிதாக அகற்றும்
  • 🏡 வீடு & வெளிப்புறம் பயன்படுத்தலாம்
  • 📦 4 துடைப்பம் ஒரு செட்
🛒 இப்போது வாங்க

🙏 நம் ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ மூலம் பக்தர்களுக்காக அன்புடன் வழங்கப்படும் ஒரு சிறந்த தயாரிப்பு இது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டரும், நம் சேவைக்கு ஒரு பெரிய ஆதரவாகும் 🙌

🌾 கிராமங்களில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முயற்சி செய்யப்படுகிறது. உங்கள் ஒரு சிறிய ஆதரவு, அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ✨

📦 தற்போது இந்த தயாரிப்பு தமிழ்நாடு முழுவதும் Meesho மூலம் மட்டுமே அனுப்பப்படுகிறது.

📲 தயாரிப்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்கள் WhatsApp எண்ணிற்கு message அனுப்பலாம்.

💬 WhatsAppல் தொடர்பு கொள்ள
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚