Sri Mahavishnu Info: ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 30 ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 30

ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 30

Sri Mahavishnu Info
ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 30
கிஷ்கிந்தைக்கு திரும்பி வந்த வாலி தனது உபவனத்தில் அமர்ந்து தன் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த ராவணனை விடுவித்து விட்டு இங்கே என்ன செய்கிறாய் ராவணா என்று சிரித்துக் கொண்டே கேட்டான். ராவணன் சிரமப்பட்டு வாலியிடம் பேச ஆரம்பித்தான் வானரங்களுக்கு அரசனான உன்னுடன் யுத்தம் செய்வதற்காகத் தான் திட்டமிட்டு வந்தேன். உனது பலத்தை நீ செயலிலேயே காட்டி விட்டாய். மூன்று உலகத்தையும் வெற்றி பெற்ற என்னை உன் கைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டு நான்கு சமுத்திரத்தையும் வலம் வந்து விட்டாய். நீ தாவிச் செல்லும் வேகம் மனம் காற்று கருடன் ஆகிய இவர்கள் மூன்று பேரும் செல்லும் வேகத்தில் நீ தாவிச் செல்கிறாய். உனக்கும் இந்த மூவரின் வேகம் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன். அதனால் உன்னுடன் நட்பு கொள்ள விரும்புகிறேன். நாம் இனி நண்பர்களாக இருப்போம் என்று சொல்லி அக்னியை மூட்டினான். வாலியும் ராவணனின் நட்பை ஏற்றுக் கொண்டான். இருவரும் இரண்டு சிங்கங்கள் போல சுற்றி நட்புடன் இருந்தார்கள். சில நாட்கள் கிஷ்கிந்தையில் வாலியின் உபசரிப்பை ஏற்றுக் கொண்ட ராவணன் பின்பு தனது இலங்கைக்கு திரும்பிச் சென்றான். அதன் பிறகு கார்த்த வீர்யார்ஜூனன் மற்றும் வாலி இருக்கும் திசைப் பக்கம் ராவணன் செல்லவில்லை. அந்த வலிமையுள்ள வாலியைத் தான் நீ கொன்றாய் ராமா என்று அகத்தியர் சொல்லி முடித்தார்.

ராமர் அகத்தியரிடம் பேச ஆரம்பித்தார். வாலி ராவணன் இருவருமே நல்ல பலசாலிகள் தான். இருந்தாலும் அனுமனுக்கு சமமாக மாட்டார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. பலம் தைரியம் அறிவு தர்ம உணர்வு என பல சிறப்பு தன்மைகள் அனுமனிடத்தில் குடி கொண்டுள்ளன. அனுமனின் உதவியால் நான் சீதையை பெற்றேன். தனி ஒருவனாக இருந்து நூறு யோசனை தூரத்தை கடந்து சென்று சீதையை கண்டு பிடித்து எதிர்த்தவர்களை அழித்து இலங்கையை எரித்து விட்டு வந்திருக்கிறான் அனுமன். நூறு யோசனை தூரத்தை ஒரே தாவலில் தாவுவது என்பது எவ்வளவு கடிமான செயல். கடினமான இந்த செயலை செய்ததோடு மட்டுமில்லாமல் இங்கு யுத்தம் வேறு செய்து வெற்றி பெற்று மீண்டும் நூறு யோசனை தூரம் தாவி திரும்பி வந்திருக்கிறான் அனுமன். இது சாதாரணமான செயல் இல்லை. தேவர்கள் கந்தர்வர்கள் என மூன்று உலகத்தில் இருப்பவர்களும் இப்படி ஒரு செயலை செய்து நான் அறிந்ததில்லை. அத்தனை வலிமையுள்ள அனுமன் ஏன் சுக்ரீவனுடன் வாலி சண்டையிட்ட போது வாலியை அடக்கி சுக்ரீவனுக்கு உதவவில்லை? அனுமனுக்கு தன் பலம் தெரியாமலேயே வளர்ந்திருக்கிறான் என்று நினைக்கிறேன். அனுமன் அந்த நேரத்தில் ஏன் தன் பலத்தை தெரிந்து கொள்ளாமல் இருந்தான் என்று கேட்டார்.

ராமரின் கேள்விக்கு அகத்தியர் பதில் கூற ஆரம்பித்தார். நீ சொல்வது முற்றிலும் சரிதான் அனுமனுக்கு சமமான பலசாலியோ அறிவாளியோ யாரும் இல்லை. குழந்தைப் பருவத்தில் அனுமனுக்கு தவிர்க்க முடியாத நிலையில் ஒரு முனிவர் சாபமிட்டார். அதன் காரணமாகத் தான் தன் பலத்தை தானே உணராதவனாக வளர்ந்தான் அனுமன். மிகவும் பலசாலியான அனுமன் குழந்தை பருவத்தில் ஒரு காரியம் செய்தான். அதை வர்ணிக்க இயலாது. அதனை முழுமையாக சொல்கிறேன் கேள் என்று அனுமன் சாபம் பெற்ற வரலாற்றை சொல்ல ஆரம்பித்தார் அகத்தியர். குழந்தையாக இருந்த போது ஒரு நாள் அனுமனுக்கு நன்றாக பசித்தது. தனது தாயே தேடினான். அவனது தாய் அஞ்சனாதேவி அனுமனின் உணவிற்காக பழங்கள் சேகரிக்க வெளியில் சென்றிருந்தாள். தாயாரைக் காணாமல் பசியும் வாட்ட பெரிதாக அழுதான் அனுமன். உணவிற்கு பழம் வேண்டும் என்ற எண்ணத்துடன் அண்ணாந்து மேலே பார்த்த அனுமனுக்கு சூரியன் பழம் போல காட்சியளித்தான். உடனே அதனை சாப்பிட வேண்டும் என்று எண்ணிய அனுமன் சூரியனைப் பிடிக்க ஆகாய மார்கமாக தாவினான். ஆகாயத்தில் தாவிய குழந்தையை தேவர்களும் தானவர்களும் ஆச்சர்யத்துடன் பார்த்து அதிசயித்தபடி நின்றனர்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்