Sri Mahavishnu Info: ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி - 6 ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி - 6

ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி - 6

Sri Mahavishnu Info
ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி - 6
ரிஷிகளும் முனிவர்களும் தேவர்களும் இந்த மூன்று ராட்சசர்களால் வதைக்கப்பட்டார்கள். இதனால் வருந்தி பயந்து நடுங்கி ரிஷிகளும் முனிவர்களும் தேவர்களும் சிவனை சரணடைந்தனர். பிரம்மா கொடுத்த வரத்தினால் கர்வம் தலைக்கேறி சுகேசனின் மூன்று மகன்களும் எங்களைத் துன்புறுத்துகிறார்கள். யாரரென்றும் பார்க்காமல் எல்லோரையும் வம்புக்கு இழுத்து அடித்துக் கொல்கிறார்கள். வருபவர்களுக்கு அடைக்கலமாக இருக்கும் எங்களின் ஆசிரமங்கள் இப்பொழுது யாரையும் காப்பாற்ற இயலாத இடமாகி விட்டது. நான் தான் விஷ்ணு நான் தான் ருத்ரன் நான் பிரம்மா என்றும் யமன் வருணன் சந்திரன் சூரியன் அனைவரும் நாங்களே என்று சொல்லிக் கொண்டு மாலி சுமாலி மால்யவான் மூவரும் அட்டகாசம் செய்கிறார்கள். இறைவனே பயத்தில் வாடும் எங்களுக்கு அபயம் தர வேண்டும். தேவர்களுக்கு எதிரிகளான இவர்களை அழிக்க தகுந்த உருவம் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று வேண்டினார்கள். அதற்கு சிவன் என்னால் நேரடியாக அவர்களை வதம் செய்ய முடியாது. அவர்கள் அப்படிப்பட்ட வரத்தை தானமாக பெற்றிருக்கிறார்கள். அவர்களை அழிக்க உங்களுக்கு ஒரு வழி சொல்லித் தருகிறேன். நீங்கள் நேராக விஷ்ணுவிடம் செல்லுங்கள். அவர் தான் இந்த ராட்சசர்களைக் அழிக்க சக்தி வாய்ந்தவர். ஏதாவது செய்து உங்களுக்கு உதவி செய்வார் என்று சொல்லி அனுப்பி வைத்தார். சிவனை வாழ்த்தி தேவர்கள் கூட்டம் விஷ்ணு இருந்த இடம் வந்து சேர்ந்தனர்.

விஷ்ணுவை வணங்கி மூன்று ராட்சசர்களிடம் தாங்கள் படும் துன்பங்களை விவரித்து எங்கள் நன்மைக்காக அவர்களை அழித்து விடுங்கள் என்று வேண்டி கேட்டுக் கொண்டார்கள். இதைக் கேட்ட விஷ்ணு அனைவருக்கும் அபயம் அளிக்கிறேன் என்றார். சுகேசனும் அவனுடைய புத்திரர்களும் பிரம்மாவிடம் வரம் பெற்றதும் அவர்கள் செய்யும் அட்டகாசங்களை நான் அறிவேன். எல்லையை மீறும் அவர்களின் கர்வத்தை அடக்குவேன். ரிஷிகளே முனிவர்களே தேவர்களே கவலையின்றி போய் வாருங்கள் என்று விஷ்ணு சொல்லி அனுப்பினார். அவர்களும் விஷ்ணுவை புகழ்ந்தபடி திரும்பிச் சென்றனர். மூன்று ராட்சசர்களில் ஒருவனான மால்யவான் நடந்தவைகள் அனைத்தையும் அறிந்து கொண்டான். உடன் பிறந்த மற்ற இருவரிடமும் இது பற்றி விவாதித்தான். தேவர்களும் ரிஷிகளும் சிவனிடமும் விஷ்ணுவிடமும் எங்களைத் துன்புறுத்துகிறார்கள் என்று சொல்லி அழுது நம்மை அழிக்கச் சொல்லி வேண்டியிருக்கிறார்கள். அனைவரும் வேண்டிக் கொண்டதால் நம்மை அழிப்பதாக விஷ்ணு சொல்லியிருக்கிறார். இதனால் இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என்றான். மூவரும் சேர்ந்து ஆலோசித்தார்கள்

மாலியும் சுமாலியும் மால்யவானுக்கு மந்த்ராலோசனை சொன்னார்கள். நமது விருப்பம் போல ஐஸ்வர்யங்கள் கிடைக்கப் பெற்றோம். அதைக் காப்பாற்றியும் வருகிறோம். வியாதியில்லாத ஆரோக்யமான வாழ்வும் பெற்றோம். தேவர்களை அடக்கி நமது வலிமையினால் வெற்றி கொண்டோம். அதனால் நமக்கு மரண பயம் கிடையாது. விஷ்ணுவினால் மட்டுமல்ல ருத்ரனோ இந்திரனோ யமனோ யாராக இருந்தாலும் நம் முன்னால் யுத்த பூமியில் நிற்க கூட பயப்படுவார்கள். விஷ்ணுவுக்கு நம்மிடம் பகை எதுவும் இல்லை. இந்த தேவர்கள் விஷ்ணுவின் மனதை கலைத்திருக்கின்றனர். அதனால் நாம் உடனே அந்த தேவர்களையே அடிப்போம் என்று முடிவு செய்தார்கள். உடனே எல்லா வீரர்களையும் திரட்டி பெரும் சேனையோடு கோஷம் செய்தபடி இலங்கையை விட்டு கிளம்பி தேவ லோகத்தை முற்றுகையிட்டனர். ராட்சசர்களை இந்த உலகத்தில் இல்லாமல் செய்ய வேண்டும் இதற்கு விஷ்ணு நமக்கு துணை இருப்பார் என்று தேவர்கள் முடிவு செய்து தாங்களும் யுத்தத்திற்கு தயாரானார்கள். தேவலோகம் சென்று சேரும் முன்னதாகவே யுத்தம் ஆரம்பித்தது. யுத்தத்தினால் மலைகள் அசைந்து ஆடின. மேகம் இடி இடிப்பது போல முழக்கம் செய்தது. பயங்கரமான தோற்றத்துடன் குள்ள நரிகள் ஊளையிட்டன. நெருப்பை உமிழும் முகத்தோடு கழுகுகள் வட்டமிட்டன. மின்மினி பூச்சிகள் வட்டமாக சக்கரம் போல ராட்சசர்களின் தலை மேல் ஆகாயத்தில் கூடின. பலவிதமான அபசகுனங்கள் ராட்சசர்களுக்கு தெரிந்தது இவைகளை அலட்சியம் செய்த ராட்சசர்கள் மேலும் தேவலோகத்திற்கு மேலும் முன்னேறிச் சென்றனர்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்