.jpg)
🌺 ஆடிப்பூரம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் விரதம்
பெண்களின் திருமணத்தடை நீக்கும் ஆடிப்பூர விரதம்: திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசனம் செய்தால், அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஆடி மாதம், பூமாதேவி அவதரித்த ஆனந்தமான மாதமாகும். ஆண்டாள் அவதரித்த நன்னாள் தான் ஆடிப்பூரம். இதைச் சிறப்பாக கொண்டாடுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டம் நடைபெறுகிறது.
மாங்கல்ய பலம் அதிகரிக்கும்: ஆடி செவ்வாய்க்கிழமைகளில் திருமண யோகத்துக்காக பெண்கள் ஆலயத்துக்குச் செல்வது வழக்கம். “ஆடி செவ்வாய் தேடி குளி, அரைத்த மஞ்சள் பூசி குளி” என்பர்.
ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளி: பெண்கள் மா விளக்கு போடுதல், திருவிளக்கு பூஜை செய்தல், வழிபாடு செய்வது வழக்கம். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தைப் பாக்கியமும் அதிகரிக்கும் என ஐதீகம் கூறுகிறது.
🌸 நம்பிக்கையோடு பகவானை நாடுங்கள்
அவர் உங்கள் பிரார்த்தனைகளைக் கேட்பார், வழிகாட்டுவார், அருள் புரிவார்.
இன்றைய பக்தி உங்கள் வாழ்வில் ஒளியாய் பரவட்டும்!