Sri Mahavishnu Info: கடவுள் யாரையும் கைவிடுவதில்லை | God Never Leaves Anyone கடவுள் யாரையும் கைவிடுவதில்லை | God Never Leaves Anyone

கடவுள் யாரையும் கைவிடுவதில்லை | God Never Leaves Anyone

Sri Mahavishnu Info

🌱 ஒரு நாள் நான் முடிவு செய்தேன்

இந்த வாழ்க்கையை துறந்துவிட வேண்டும் என்று...

ஆம்,

எனது வேலை,

எனது உறவுகள்,

என் இறையாண்மை - அனைத்தையும் விட்டுவிட வேண்டும் என்று.

துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.


அப்போது...

கடைசியாக இறைவனிடம் சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

"கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?"


🌿 கடவுளின் பதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது

"ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும், நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?"

"ஆமாம்" என்று நான் பதிலளித்தேன்.

"நான் புதர் செடி மற்றும் மூங்கிலுக்கான விதைகளை ஒரே நேரத்தில் விதைத்தேன். இரண்டுக்கும் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று அனைத்தையும் வழங்கினேன்."

புதர் செடி விரைவாக வளர்ந்தது. மூங்கில் விதை எந்த முன்னேற்றமும் காட்டவில்லை. ஆனாலும் நான் அதை கைவிடவில்லை.


⏳ பல ஆண்டுகள் கழிந்தும்...

இரண்டாம் ஆண்டு – புதர் செடி வளர்ந்தது. மூங்கில் மட்டும் மௌனம்.

மூன்றாம், நான்காம் ஆண்டும் – அதே நிலை.

ஆனால் ஐந்தாம் ஆண்டு மூங்கிலில் இரண்டு இலைகள் மட்டும் வளர்ந்தன.

ஆறு மாதங்களில் மூங்கில்கள் வியக்கத்தக்க உயரத்திற்கு வளர்ந்தன.

கடவுள் சொன்னார்:

"மூங்கிலின் விதை உயிருடன் இருந்தது. அது வேர்களை பரப்பி, தன்னை உறுதியா மாற்றிக் கொண்டிருந்தது. அதன் பிறகு தான் அதன் வளர்ச்சி துவங்கியது."


🌟 முக்கியமான உன்னத செய்தி

"உனக்கான நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இது தான். உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரம் எட்ட முடியும்!"

நான் கேட்டேன்:

"மூங்கிலால் எவ்வளவு உயரம் வளர முடியும்?"

"அதன் எல்லை எது என்பதையே அது தீர்மானிக்கிறது."

அது போல "உன்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உயரம் வளர முடியும்."


நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் திரும்பினேன்.

இது உங்களுக்கும் ஊக்கம் தரும் என்று நம்புகிறேன். கடவுள் யாரையும் ஒருபோதும் கைவிடுவதில்லை.

🌱 சாதிக்க மிக மிக அவசியம் – பெறுமை!

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்