Sri Mahavishnu Info: கடவுள் பக்தியால் பலன் கிடைக்குமா ? கடவுள் பக்தியால் பலன் கிடைக்குமா ?
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

கடவுள் பக்தியால் பலன் கிடைக்குமா ?

Sri Mahavishnu Info
கடவுள் பக்தியால் பலன் கிடைக்குமா ?
நாம் விரும்பியது கிடைத்தால் சந்தோஷம்; எதையாவது இழந்தால் துக்கம். வாழ்க்கை இப்படி போய்க் கொண்டிருக்கிறது. குழந்தை பிறந்து விட்டால் மகிழ்ச்சி; யாராவது இறந்து விட்டால் துக்கம். இதெல்லாம் எத்தனை நாளைக்கு? காலத்தால் மறக்கக் கூடியவை தான். “உறவினரின் மரணத்துக்காக அழாதே; கடவுளின் தரிசனத்துக்காக அழு…’ என்றனர். கடவுளின் தரிசனம் கவலையைப் போக்கி, கண்ணீரைத் துடைப்பதுடன், பிறவியே இல்லாத முக்தி நிலையை அளிக்கும்.

துளசிதாசர் ஒரு ராம பக்தர். கங்கா தீரத்தில் உலவிக் கொண்டிருந்தார். ஒரு மயானம் குறுக்கிட்டது. அங்கு ஒரு இளம்பெண், இறந்து போன தன் கணவனது அருகில் அமர்ந்து, அழுது கொண்டிருந்தாள். தாசரைக் கண்டதும் ஓடி வந்து வணங்கி, “என் கணவர் போன இடத்துக்கு, நானும் செல்ல வழி காட்டுங்கள்…’ என்றாள்.

“அவளிடம், மோட்சத்தை உண்டாக்கிய அந்தக் கடவுள் இவ்வுலகிலும் இருக்கிறான்…’ என்றார் துளசிதாசர். அதற்கு அவள், “நான் மோட்சத்தை விரும்பவில்லை; என் கணவர் அருகில் இருக்க விரும்புகிறேன்…’ என்றாள். “நீங்கள் வீட்டுக்குப் போங்கள்… இன்னும் ஒரு மாதத்தில், உங்கள் கணவர் திரும்பி வந்து விடுவார்…’ என்றார் துளசிதாசர். அவளும் போய் விட்டாள். அன்று முதல் அந்த பெண்ணின் வீட்டுக்கு போய், “உலகம் மாயை, அநித்யமானது!’ என்று பக்தியின் பெருமைகளைப் பற்றி உபதேசித்தார் தாசர். அவளுடைய மனதில் துக்கம் மறைந்து, பக்தி குடி கொண்டது. சதா காலமும் ராமனையே தியானித்து, மற்றவைகளை மறந்தாள்; துக்கமும் போய் விட்டது.

மாதக் கடைசியில் அவளுடைய சிநேகிதி இவளிடம் வந்து, “உன் கணவர் திரும்பி வந்து விட்டாரா?’ என்று கேட்டாள். “ஆம்!’ என்றாள் அவள். “எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டாள் சிநேகிதி. தன் நெஞ்சில் கை வைத்து, “அவர் என் நெஞ்சில் குடி கொண்டுள்ளார்!’ என்றாள் அந்த பெண். பக்தி மேலீட்டால் கணவன் போன துக்கத்தை மறந்து, நெஞ்சில் கடவுளுக்கு இடமளித்து விட்டாள். கடவுளைப் பற்றிய ஞானத்தை அவளுக்கு தாசர் உபதேசித்து விட்டதால், அவளும் உலக விஷயங்களிலிருந்து விடுபட்டு, ஞானம் ஏற்பட்டு கடவுளிடம் மனதை வைத்து, காலங்கழித்து முக்தியடைந்தாள் என்று ஒரு கதை உண்டு.

பிறவி என்பது, கர்ம வினையை அனுபவிப்பதற்காக ஏற்பட்டது. அதை அனுபவித்ததும், அவரவர்கள் போக வேண்டியது தான். வந்த காரணமும் தெரியாது; போன காரணமும் தெரியாது. ஞானம் வந்து விட்டால், ஏதோ வந்தான், போனான் என்றிருப்பர்; அது இல்லையேல், அழுது புலம்பிக் கொண்டிருப்பர். அழுது புலம்பினால் போனவன், வருவானா? நாமும் ஒருநாள் இப்படிப் போக வேண்டியவன் தானே என்று, மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.

🌿 நல்ல அதிர்ஷ்டம் தரும் Lucky Bamboo 🌿

Lucky Bamboo 3 Layer

🍀 வீட்டில், அலுவலகத்தில் செல்வம், ஆரோக்கியம், அமைதி சேர்க்க உதவும் Ugaoo Lucky Bamboo – 3 Layer Feng Shui செடி. 🪴 பராமரிக்க எளிது, நீண்ட காலம் பசுமையாக இருக்கும்!

  • 💚 வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் தரும்
  • 🎁 பரிசளிக்க சிறந்த தேர்வு
  • 🌱 Feng Shui & Vastu இரண்டிற்கும் ஏற்றது
  • ⭐ 4.2/5 மதிப்பீடு – 7,400+ விமர்சனங்கள்
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்