Sri Mahavishnu Info: Manakkal Nambi Vaibhavam | மணக்கால் நம்பி வைபவம் Manakkal Nambi Vaibhavam | மணக்கால் நம்பி வைபவம்
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

Manakkal Nambi Vaibhavam | மணக்கால் நம்பி வைபவம்

Sri Mahavishnu Info

Manakkal Nambi Vaibhavam | மணக்கால் நம்பி வைபவம்
மணக்கால் நம்பி வைபவம்
திருநக்ஷத்திரம் : மாசி “மகம்”

தனியன்கள் :

அநுஜ்ஜி தக்ஷமாயோக மபுண்யஜநபாதகம் |
அஸ்ப்ருஷ்டமதராகம் தம் ராமம் துர்யமுபஸ்மஹே ||

[(பரசுராமனைப் போல்) பொறுமையை (பூமியை) விடாதவராய், (ராமனைப் போல்) புண்யஜனங்களை (ராக்ஷஸர்களை) பாதிக்காதவராய், (பலராமனைப் போல்) மதுபானமதம் இல்லாதவரான நாலாவது ராமனை (மணக்கால் நம்பியை) உபாசிக்கிறோம்].

பகவத்பக்திதுக்தாப்தி க்ருதகாடாவகாஹநம் |
நிர்முக்ததாபத்ரிதயம் ஸ்ரீராமம் ஸரணம் ஸ்ரயே ||

[பகவத் பக்தியாகிர பாற்கடலில் குடைந்தாடப் பெற்றவராய் (அதனால்) ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் என்னும் மூன்று தாபங்களும் நீங்கப்பெற்றவரான ஸ்ரீராமன் என்னும் மணக்கால் நம்பியை ஆச்ரயிக்கிறேன்.

திருநக்ஷத்திர தனியன் :

கும்பமாஸே மகோத்பூதம் ராமமிஸ்ரமுபாஸ்மஹே |
புண்டரீகாக்ஷ பாதாப்ஜ சமாஸ்ரயண ஸாவிதம் ||

கும்ப (மாசி) மதம் மகம் நக்ஷத்திரத்தில், உய்யக்கொண்டார் என்னும் ஆச்சார்யரின் திருவடித் தாமரைகளில் தஞ்சமடைந்த ராமமிஸ்ரரை (மணக்கால் நம்பி) வணங்குகிறேன்.

நாதமுனி தொடக்கமாக இருக்கும் ஓராண் வழி ஆசார்யர்கள் வரிசையில் மூன்றாவதாக வீற்றிருப்பவர் மணக்கால் நம்பி என்பவர் ஆவார். உய்யக்கொண்டாருடைய பிரதான சிஷ்யரான "ஸ்ரீராமமிஸ்ரர்" என்னும் பேருடைய மணக்கால் நம்பி, உய்யக்கொண்டார் என்னும் ஆசார்யர் அவதரித்து 43 வருடங்களுக்குப் பின்பு (கி.பி.929) விரோதி வருஷத்திலே மாசி மாதம் மகம் நக்ஷத்திரத்திலே ஸுக்ல பக்ஷம் சதுர்த்தசி கூடிய புதன் கிழமையில் காவேரிக்கரையில், லால்குடிக்கு அருகில் மணக்கால் என்னும் கிராமத்தில் பிராம்மண குலத்தில் குமுதாக்ஷர் என்னும் நித்யஸுரியின் அம்சமாக அவதரித்தவர்.

இவர், தம் ஆச்சார்யர் உய்யக்கொண்டார் நியமனப்படி (உத்தரவு), நாதமுனிகளின் பேரனான ஆளவந்தாரைத் திருத்திப் பணிகொண்டு, அவருக்கு "ரஹஸ்யத்ரய"த்தையும், திவ்யப்ரபந்தங்களையும் அவற்றின் அர்த்த விசேஷங்களையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹம் அளித்தருளினார். பவிஷ்யதாசார்ய விக்ரஹம் - ஸ்ரீ ராமானூஜரின் திவ்யமங்கள விக்ரஹம் - இது ஸ்ரீ ராமானுஜர் அவதரிப்பதற்கு முன்னமேயே, அவர் அவதாரம் நிகழப்போவதை ஞானத்தால் உணர்ந்த நம்மாழ்வார், அவரது விக்ரஹத்தை நாதமுனிகளிடம் கொடுத்தது).

மணக்கால் நம்பி 12 வருடங்கள் ஆசார்யனைப் பிரியாது அவருக்குக் கைங்கர்யங்கள் (தொண்டு) புரிந்துவந்தார். இவர், தன் ஆசார்யரான உய்யக்கொண்டாரின் துணைவியார் பரமபதித்த பின்னர், அவர் வீட்டு காரியங்களையும் சேர்த்து செய்து வந்தார். ஒருநாள் தம் ஆசார்யரின் பெண் குழந்தைகள் இருவரையும் நீராட்டி அழைத்து வரும்போது, வழியில் வாய்க்கால் சேறாக இருந்ததனால், அதைக் கடப்பதற்குக் குழந்தைகள் தவித்தனர். இதைப் பார்த்து மணக்கால் நம்பி, அந்தச் சேற்றில் படுத்துக் கிடந்து, தம் முதுகில் அக்குழந்தைகளை அடிவைத்துத் தாண்டும்படி செய்தார். இப்படி, குழந்தைகளின் கால்கள் சேற்றில் படாதபடி அருளியதால், அந்தக் குழந்தைகளின் மணல் படிந்த கால்கள் இவர் மீது பதிந்ததால், இவர் “மணக்கால் நம்பி” என்று உய்யக்கொண்டாரால் திருநாமம் இடப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். அதே சமயம் இவர் பிறந்த ஊரும் "மணக்கால்" என்னும் கிராமமாகும். இதை வைத்துப் பார்த்தாலும், இவர் மணக்கால் நம்பி என்று பெயர் கொண்டது பொருத்தமாக உள்ளது. இதை அறிந்த உய்யக்கொண்டார், "இப்படியும் செய்ததே" என்று மிகவும் கொண்டாடித் தம் திருவடிகளை அவர் முடிமேல் வைத்து அனுக்ரஹித்தார் (ஆசீர்வாதம் செய்தல்) . மேலும், "உமக்கு என்ன செய்யவேண்டுவது?" என்று கேட்டார். நம்பியும் அதற்கு, "உற்றேன் உகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன், ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்" (நம்மாழ்வார், திருவாய்மொழி, "திருமாலிருஞ்சோலை" பதிகம், 10.8.10) என்று பிரார்த்தித்தார். அதாவது, ஆழ்வார் இப்படிப் பாட எது காரணம் என்று கேட்டால், எம்பெருமான் ஆழ்வார் தனக்குச் செய்யும் அடிமைத் தொழிலால் மகிழ்ந்து, அவர் முன் தோன்றி என்ன வேண்டும் கேளும் தருகிறோம் என்று கூற, ஆழ்வார் மேலும் மேலும் கைங்கர்யங்கள் புரிந்து, ஆனந்தமயமான உன் திருவடித் தாமரைகளில் எப்போதும் லயித்திருக்கவேண்டும் என்பதைத் தவிர அடியேன் வேண்டுவதற்கு வேறு என்ன உள்ளது? என்று பதில் அளித்தார்.

அதேபோல், மணக்கால் நம்பி செய்த கைங்கர்யத்தை அறிந்த உய்யக்கொண்டார் அவரிடம் உமக்கு நாம் ஏதாவது செய்யவேண்டும்; கேளும் என்று கூற, நம்மாழ்வார் அருளிய மேற்பாசுரத்தை எடுத்துரைத்து, அடியேன் உமக்கு மேலும் மேலும் கைங்கர்யங்கள் புரியும் பாக்கியத்தை அருளவேண்டும் என்று பிரார்த்தித்தார்.

பின்னர், உய்யக்கொண்டார் பரமபதத்திற்கு எழுந்தருளும்போது, மணக்கால் நம்பி அவரிடம், உமக்குப் பின்னர் இந்த குரு பரம்பரையை அலங்கரிக்கப் போவது யார் என்று கேட்க அதற்கு உய்யக்கொண்டார், நம்பியைப் பார்த்து நீரே அதற்குத் தகுதியானவர் என்றும், உமக்குப்பின் ஸ்ரீமந் நாதமுநனிகளுக்குப் பேரனாக அவதரிக்கப் போகும் ஆளவந்தாரை ஆசார்யராக நியமிக்கும்படி உபதேசித்து அருளினார்.

குலசேகர ஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழி என்னும் ப்ரபந்தத்திற்குத் ("ஆரம்கெடப் பரனன்பர்".....) தனியன் அருளியவர் ஆவார் மணக்கால் நம்பி.

மணக்கால் நம்பி வாழி திருநாமம்:

தேசம் உய்யக் கொண்டவர்த்தாள் சென்னிவைப்போன் வாழியே
தென்னரங்கர் சீர் அருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே
தமிழ் நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே
தேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே
நீணிலத்தில் பதின்மர்கலை நிறுத்தினான் வாழியே
மாசிமகந்தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால்மணக்கால் நம்பிபதம் வையகத்தில் வாழியே.

மணக்கால் நம்பி திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏
Donate Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚