Sri Mahavishnu Info: மகாபாரதம் | 17 மகாபிரஸ்தானிக பருவம் | பகுதி -3 மகாபாரதம் | 17 மகாபிரஸ்தானிக பருவம் | பகுதி -3
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

மகாபாரதம் | 17 மகாபிரஸ்தானிக பருவம் | பகுதி -3

Sri Mahavishnu Info

மகாபாரதம் | 17 மகாபிரஸ்தானிக பருவம் | பகுதி -3
யுதிஷ்டிரன் மேரு மலையின் உச்சியை அடைந்தான். அவனுடன் வந்த நாயும் அவன் பின்னே வந்து சேர்ந்தது. அப்போது இந்திரன் தன்னுடைய விமானத்தில் யுதிஷ்டிரனை அழைத்து செல்ல யுதிஷ்டிரன் முன்னிலையில் வந்து இறங்கினான். இந்திரன் யுதிஷ்டிரனை பார்த்து தங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றேன். தாங்கள் விமானத்தில் ஏறுங்கள் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு யுதிஷ்டிரர் வழியில் வீழ்ந்து மடிந்து போன தன்னுடைய சகோதரர்களும் திரௌபதியும் என்ன கதியை அடைந்தார்கள் என்று நான் தெரிந்து கொள்ளவேண்டும். அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு சொர்க்கலோகம் வரமாட்டேன் என்று கூறினான். அதற்கு இந்திரன் அவர்கள் ஒவ்வொருவராக வீழ்ந்த போது நீ ஏன் அவர்களை திரும்பிப் பார்க்கவில்லை என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரன் அவர்களை திரும்பி பார்த்திருந்தால் நானும் வீழ்ந்திருப்பேன். மேலான லட்சியத்தை நாடிச் செல்லும் ஒருவன் பந்த பாசத்தை முன்னிட்டோ அல்லது வேறு காரணத்தினாலோ திரும்பிப் பார்ப்பானாகில் அவன் மேற்கொண்டு முன்னேற்றம் அடையமாட்டான். இது வாழ்வைப் பற்றிய கோட்பாடு ஆகும். மேலான சொர்க்கத்திற்கு செல்லும் லட்சியத்தை நாடிச் சென்று கொண்டிருந்தேன். ஆகையால் திரும்பிப் பார்க்கவில்லை என்று கூறினான்.  

உனது சகோதரர்களும் திரௌபதியும் வீழ்ந்த போது பீமனிடம் அதற்கான சரியான காரணத்தை சொன்னாய். அந்த காரணங்களை முன்னிட்டு அவர்கள் உடலோடு சொர்க்கத்திற்குப் வர தகுதியற்றவர்கள் ஆனார்கள். சூட்சும உடலோடு அவர்கள் ஏற்கனவே சொர்க்கத்திற்கு வந்திருக்கின்றார்கள். நீ அறநெறி பிறழாது இருந்த காரணத்தினால் உடலுடன் சொர்க்கம் வர தகுதி உடையவனாக இருக்கிறாய். ஆகையால் நீ விமானத்தில் ஏறுவாயாக என்று இந்திரன் கூறினான். யுதிஷடிரன் விமானத்தில் ஏற முயன்ற பொழுது யுதிஷ்டிரனுடன் வந்த நாய் விமானத்தில் ஏற முயன்றது. அப்போது இந்திரன் இந்த நாய்க்கு சொர்க்கத்தில் இடமில்லை என்று தடுத்தான். இதைப்பார்த்த யுதிஷ்டிரன் என்னை நம்பி இந்த நாய் வந்திருக்கின்றது. இதற்கு அனுமதி இல்லையென்றால் என்னை நம்பி வந்த இந்த நாயை புறக்கணித்துவிட்டு நான் வரமாட்டேன் என்று கூறினான். அதற்கு இந்திரன் இந்த நாயோடு இந்த உலகத்தில் இருக்க விரும்புகிறாயா அல்லது ஏற்கனவே அங்கு சென்றுள்ள உன் சகோதரர்களுடன் சொர்க்கத்தில் இருக்க விரும்புகின்றாயா என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் அனைத்து விலங்குகளையும் தெய்வீகம் வாய்ந்தவைகளாகவே தான் கருதுகிறேன். என்னை நம்பி வந்த நாயை புறக்கணிப்பது தர்மமாகாது. தர்மத்தின் படி நடக்க என்னுடன் பிறந்தவர்களையும் சொர்கத்தையும் துறக்க நான் தயாராக இருக்கின்றேன். என்னை நம்பி வந்த நாயை விட்டு வரமாட்டேன் என்று உறுதியுடன் கூறினான்.

யுதிஷ்டிரன் இவ்வாறு கூறியதும் நாய் எழில் நிறைந்த தர்மதேவதையாக மாறியது. மகனே உன்னை நான் பெரிதும் பாராட்டுகிறேன் முன்பு ஒரு தடவை நச்சுப்பொய்கை கரையில் உன்னை நான் சோதித்தேன். சொந்த சகோதரர்களுக்கும் மாற்றாந்தாய் சகோதரர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லாமல் நடந்து கொண்டாய். இப்பொழுது விலங்குகள் மேல் வைத்திருக்கும் கருணையை நான் ஆராய்ந்தேன். உன்னுடைய பரந்த மனப்பான்மையை முற்றிலும் நான் பாராட்டுகின்றேன். நீ இந்திரனோடும் என்னோடும் சொர்க்கலோகம் வருவாயாக இந்த உடலோடு வரும் தகுதி உனக்கு உண்டு என்று விமானத்திற்குள் வரவேற்றார். இந்த அதிசயத்தை காண விண்ணவர்கள் அங்கு ஏராளமானவர்கள் கூடினார்கள். யுதிஷ்டிரன் அவர்களை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.  

மகாபிரஸ்தானிக பருவம் முற்றியது அடுத்து சுவர்க்க ஆரோஹன பருவம்.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚