நம்முடைய குறைகளை அறிந்த ஒருவன் – பெருமாள்.

மகாபாரதம் | 8 கர்ண பருவம் | பகுதி - 10

Sri Mahavishnu Info

மகாபாரதம் | 8 கர்ண பருவம் | பகுதி - 10
கர்ணன் சல்லியனிடம் தேரை பூமியில் சிக்குண்ட இடத்தில் இருந்து மீட்குமாறு கூறினான். அதற்கு சல்லியன் எனது வேலை தேர் ஓட்டுவது மட்டும் தான். தேரை மீட்பது அல்ல. என்னை நீ அவமதித்து பேசினாலோ முறை தவறி பேசினாலோ நான் உன்னை விட்டு விலகி விடுவேன் என்று துரியோதனனிடம் போட்ட நிபந்தையின் பெயரில் தான் உனக்கு சாரதி ஆனேன். இப்போது நான் போகிறேன் என்று கூறிவிட்டு ரதத்தை விட்டு சென்றுவிட்டார். கர்ணன் தன் தேரில் இருந்து குதித்து தன் தேர் சக்கரங்களை வெளியே எடுக்க முயன்றான். இந்த சூழ்நிலையில் அர்ஜுனன் அவனை கொல்ல விரும்பவில்லை.

கிருஷ்ணர் அர்ஜுனனை நோக்கி ஏன் தயங்குகிறாய் அர்ஜுனா அவன் மீது உள்ள அணைத்து சாபங்களும் ஒன்றாக வேலை செய்கிறது. இது தான் சரியான தருணம். செலுத்து உன் அம்புகளை. கொன்றுவிடு அவனை என்றார். அர்ஜுனனும் தன் இலக்கை குறித்தான். பரசுராமர் அளித்த சாபம் இப்போது வேலை செய்தது. ஆபத்து வேளையில் கர்ணன் கற்ற வித்தைகள் அனைத்தும் அவனுக்கு மறந்து போனது. அர்ஜுனன் தன் மேல் போர் தொடுப்பதை கண்ட கர்ணன் நிராயுதபாணியாய் நிற்கின்ற என்னை தர்மத்தின் பெயரில் கேட்கிறேன் தேரை பூமியில் இருந்து மீட்டு எடுக்க சற்று அவகாசம் கொடு என கேட்டான்.

அப்போது கிருஷ்ணர் கர்ணா நீயா தர்மத்தைப் பற்றி பேசுகிறாய். துரியோதனன் சகுனியுடன் சேர்ந்து தீமைக்குத் துணைப்போனாய். அப்போது உன் தர்மம் என்ன ஆயிற்று. மன்னர் நிறைந்த அவையில் திரோபதியின் உடையைக் களைய நீயும் உடந்தைதானே அப்போது எங்கே போயிற்று உன் தர்மம். பாண்டவர்கள் பதின்மூன்று காலம் வன வாசம் முடித்து வந்ததும் தர்மப்படி நடந்துக் கொண்டாயா. அபிமன்யூவை தர்மத்திற்கு விரோதமாக பின்னால் இருந்து தாக்கினாயே அப்போது எங்கே போயிற்று உன் தர்மம் என கேட்டார். கர்ணன் பதில் பேச முடியாமல் நாணித் தலை குனிந்தான். தான் புரிந்த செயல்கள் சரியானவர்கள் என்று சமாதானம் சொல்ல அவனுக்கு இயலவில்லை

அர்ஜூனன் தன் சக்தி அஸ்திரத்தை எடுத்து நான் தர்மயுத்தம் செய்வது உண்மையென்றால் இது கர்ணனை அழிக்கட்டும் என கர்ணன் மீது செலுத்தினான். அஸ்திரங்களை ஏவும் மந்திரங்கள் மறந்து போக உதவி அற்ற நிலையில் புறமுதுகு காட்டாமல் அர்ஜுனனின் அஸ்திரங்களை மார்பிலே கர்ணன் ஏந்தினான். அம்பு மீது அம்பு விட்டான் அர்ஜுனன். ஆனாலும் கர்ணனின் உயிரை அவற்றால் தீண்டக் கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில் அர்ஜுனனின் மின்னல் வேக அம்புகள் அனைத்தும் மலர் மாலைகளாகி கர்ணனுக்கு விழத் துவங்கின. குழம்பினான் அர்ஜுனன்.

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

#buttons=(Ok, Got it!) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Learn more.
Ok, Go it!
🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்