* மூலவர் மற்றும் தாயார் போன்ற திருவுருவங்களுக்கு திருமஞ்சனம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.
* ஏகாதசி, துவாதசி, அமாவாசை, பெளர்ணமி ஆகிய தேதிகளில் துளசியைப் பறிப்பது மிகவும் அசுபமானது என கருதப்படுகிறது. ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துளசி இலைகளைப் பறிக்கக் கூடாது . என்றும் சொல்லப்படுகிறது..
* மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
* கொடி மரம், கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
* மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.
* வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே அணைவதே சிறந்தது. நாம் அதனை அணைக்கக் கூடாது.
* திருக்கோவிலின் பிரதான வாசல் வழியில் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.
* விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.
* தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.
* கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.