Sri Mahavishnu Info: பக்த சோகாமேளர் | SANT CHOKHAMELA பக்த சோகாமேளர் | SANT CHOKHAMELA
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

பக்த சோகாமேளர் | SANT CHOKHAMELA

Sri Mahavishnu Info

பக்த சோகாமேளர் | SANT CHOKHAMELA
பண்டரிபுர எல்லையில், பஞ்சம மரபினர் எனும் எளிய குடிசைவாழ் மக்களின் மரபில் தோன்றிய பக்தர் ஸ்ரீசோகாமேளர்.

எவ்வித சுய ஒழுக்கமுமின்றி மது; மாமிசம்; வாயிலாப் பிராணிகளைப் பலியிடுவது என்று வாழ்ந்து வரும் அப்பகுதி குடிசைவாசிகளைத் தம்முடைய தொடர் போதனைகளால் பாண்டுரங்க பக்திக்கும் நல்லொழுக்கத்திற்கும் ஆட்படுத்தி வந்தார் சோகாமேளர்.

அனுதினமும் வைகறைப் பொழுதில் துயிலெழுந்து பீமா நதியில் நீராடி, திருமண் தரித்துக் கொள்வார், பண்டரிபுர ஆலய எல்லையில் நின்ற வண்ணமே பாண்டுரங்கப் பெருமானை வணங்கி மகிழ்வார். இது பொறுக்காத அப்பகுதி உயர்குல மக்கள் அவரைக் கடுமையாய் நிந்தித்து இப்பகுதியில் இனியும் கால் பதிக்காதே என்று தூற்றினார்கள். அதனால் சோகாமேளர் பீமா நதியின் மறுகரைக்குத் தன் மனைவியுடன் குடிபெயர்ந்து வாழத் தொடங்கினார்.

ஒருநாள் பகவான் பாண்டுரங்கன் சோகாமேளருக்கு அவரது குடிசையில் திருக்காட்சி தந்து அருள் புரிந்து அவரைத் தன்னுடைய ஆலயக் கருவறைக்கு அழைத்துச் சென்றுத் திருவுருவம் மறைகின்றார்.

பண்டரிநாதரின் விக்கிரகத் திருமேனியையும் தரிசிக்கப் பெறும் சோகாமேளர் கண்ணீர் பெருக்கி அகம் குழைந்து ‘கருணைக் கடலே! பண்டரிநாதா! எளியேனின் பொருட்டு இத்தனை கருணையா பிரபு?!’ என்று அன்றைய இரவுப் பொழுது முழுவதுமே கருவறையில் ஏகாந்தமாய் ஆடிப் பாடித் தொழுகின்றார்.
அது மட்டுமா! ஒரு சமயம் சோகாமேளரும் அவரின் திருத்துணைவியாரும் ஏகாதேசியன்று நல்விரதமிருந்து, இரவு முழுவதும் கண் விழித்துப் பாண்டுரங்கப் பெருமானை வழிபடுகின்றனர்.

மறுநாள் துவாதசி, சோகாமேளரின் மனைவியார் விரத நிறைவிற்கான பாரணை உணவினைத் தயாரிக்கச் செல்கின்றார்,

அச்சமயம் வாயிலில் கோடி சூரியப் பிரகாசராய்ப் பகவான் பண்டரிநாதர் தோன்றி ‘அன்பனே! நாம் இங்கு துவாதசிப் பாரணைக்காக எழுந்தருளி வந்தோம்’ என்று அருள் புரிந்து, அப்பெருமக்களின் உணவினை உண்டு ‘உங்கள் சுவையான உணவினால் அகமிக மகிழ்ந்தோம்”

இனி ஒவ்வொரு துவாதசிக்கும் உங்கள் இல்லத்தில் நேரில் எழுந்தருளிப் பாரணை உணவினை ஏற்போம்’ என்றொரு அமுத மொழி பகர்கின்றார். இறைவன் முன் உயர்வு தாழ்வு என்ற பேதம் கிடையாது. எளியோர்க்கு எளியோன் பக்த பாண்டுரெங்கன் அன்றோ…..

பண்டரிநாத் மகாராஜ் கீ ஜெய் …!
விட்டல விட்டல ஜெய் ஹரி விட்டல
விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல
பண்டரிநாத விட்டல

ர்வம் கிருஷ்ணார்ப்பணம்

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚