குரு என்பவர் யார்?

Sri Mahavishnu Info
குரு என்பவர் யார்?
நம் மனதிற்கு மிகவும் பிடித்தவர்

நம்மை நம்முள் உணர்த்தி பிறவித் தொடரை கடக்க உதவுபவர்.

தவறான எண்ணங்கள் எழும் போது, நம்முள் மென்மையாக புன்னகைத்து நம்மை நல்வழி படுத்துபவர்

தியானத்தில் தடுமாறும் போது உடன் பயணிப்பவர்.

கோபம் வரும் போது நம்முள் நம்மை அமைதி ஆக்குபவர்

தவறான முடிவுகள் எடுக்கும் போது, தடுத்து நேர்வழியில் பயணிக்க வைப்பவர்.

புரியாத ஒன்றை புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது புன்னகையுடன்
புரிய வைப்பவர்.

பிரபஞ்ச நினைவோடு இருக்கும் போது நம்மோடு கைகோர்த்து உலாவுபவர்.

அரூபமாக நம்முடனேயே இருந்து நம்மை நல்வழியில் நடத்தி செல்பவர்.

எந்த துன்பம் வந்தாலும், கலங்காத மனநிலையை கொடுப்பவர்.

வெற்றி வந்தால் தலைகனத்தோடு திரிய விடாமல் அடக்கி வாசிக்க வைப்பவர்.

மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய உற்சாகமூட்டுபவர்.

ஆழ்ந்து ஆழ்ந்து பயணிக்கும் போது, புரியாத பல ஞான சூத்திரங்களை, புரிய வைப்பவர்.

அன்பும் கருணையும் நீரூற்றாக நம்முள் பெருக அடித்தளம் இடுபவர்.

பிறவியின் நோக்கம் புரிய வைப்பவர்.

நம்முள் அறிவாய் இயங்குவதும் இறையே, நாமும் இறையின் துகளே என்று தெளிய வைப்பவர்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்