Sri Mahavishnu Info: ராமாயணம் | 2 அயோத்தியா காண்டம் | பகுதி - 39 ராமாயணம் | 2 அயோத்தியா காண்டம் | பகுதி - 39
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ராமாயணம் | 2 அயோத்தியா காண்டம் | பகுதி - 39

Sri Mahavishnu Info
ராமாயணம் | 2 அயோத்தியா காண்டம் | பகுதி - 39
பரதன் ராமரிடம் பேசினான். தந்தையின் ஆணையை நிறைவேற்றியே தீர வேண்டுமானால் நான் தங்களுக்கு பதிலாக 14 வருடங்கள் காட்டில் இருக்கிறேன். எனக்கு பதிலாக நீங்கள் அயோத்தியில் அரச பதவியை ஏற்றுக்கொண்டு ஆட்சி செய்யுங்கள் என்றான். ராமர் இதனைக்கேட்டு சிரித்தார். பரதா இது என்ன பண்ட மாற்று வியாபாரமா ஒருவன் கடமையை ஆபத்துக்காலங்களில் அவனால் செய்ய முடியவில்லை என்றால் மற்றோருவன் செய்வதுண்டு. நான் எற்றுக்கொண்ட விரதத்திற்கு என் உடல் சக்தியில்லாமல் இருந்து என்னால் செய்ய முடியவில்லை என்றால் தம்பி முறையில் நீ செய்யலாம். ஆனால் நான் திடகாத்திரமான வலிமையோடு இருக்கின்றேன். நான் சக்தியற்றும் நீ சக்தியுள்ளவன் என்றும் உன்னால் சொல்ல முடியுமா என்றார். பரதன் தலை குனிந்து நின்றான். வசிஷ்டர் பரதனிடம் நீ ராமனுடைய அனுமதியை பெற்றுக்கொண்டு அரசாட்சி செய் இதனால் எந்த பழி பாவமும் உன்னை வந்து சேராது. சத்தியமும் தர்மமும் காக்கப்படும் என்றார்.

ராமர் பரதனை அனைத்து அயோத்தியை நான் உனக்கு தந்த ராஜ்யமாக எண்ணி அரசாட்சி செய் என்று தன் அன்பின் சக்தியெல்லாம் அவன் மீது செலுத்தி கட்டளையிட்டார் ராமர். பரதன் ராமரிடம் அண்ணா நீயே என் தந்தை என் தெய்வம் நீ சொல்கின்றபடி செய்கின்றேன். நீங்கள் 14 வருடம் முடிந்ததும் அயோத்திக்கு வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்வேன் என்று உறுதி மொழி தாருங்கள். பின்னர் உங்கள் மிதியடியை தந்தீர்கள் என்றால் உங்கள் மிதியடியை சிம்மாசனத்தின் மீது வைத்து 14 வருடங்கள் கழித்து நீங்கள் வரும் வரை அரசாட்சி செய்வேன். எனது பணிகள் அனைத்தையும் உங்கள் மிதியடிக்கு சமர்ப்பிப்பேன் என்றான் பரதன். அப்படியே என்ற ராமர் தனது மிதியடியை பரதனிடம் கொடுத்தார். பரதன் ராமரின் மிதியடியை பெற்றுகொண்டு தன் தலையில் வைத்துக்கொண்டு அயோத்தி நகரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். தாயார் மூவரும் பின் தொடர அனைவரும் அயோத்தி நோக்கி சென்றார்கள்.

அயோத்தி செல்லும் வழியில் பரத்வாஜ முனிவரிடம் நடந்தவற்றை சொல்லி அவரிடம் ஆசி பெற்றான் பரதன். பரதனுடைய குணத்தை பாராட்டிய பரத்வாஜ முனிவர் மழை நீர் பள்ளத்தை நோக்கி பாய்வதை போல உன் குலத்தின் நெறி உன்னை அடைந்திருக்கின்றது. உன்னை பெற்ற தந்தை பெரும் பாக்கியவான். அவர் இறக்கவில்லை உன் சொரூபத்தில் அமரராக இருக்கிறார் என்று சொல்லி வாழ்த்தினார்.

அயோத்தி நகரை அடைந்ததும் பரதன் வசிஷ்டர் மற்றும் மந்திரிகள் அனைவரையும் சபைக்கு வரவழைத்தான். அந்த ராஜ்யம் ராமருடையது. தற்காலிகமாக அவர் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். அண்ணனுக்கு பதிலாக அவரின் மிதியடியை அரசரின் சிம்மாசனத்தில் அமர்த்திருக்கிறேன். ராமர் 14 ஆண்டுகள் கழித்து திரும்பி வரும் வரையில் நான் அருகில் இருக்கும் நந்தி கிராமத்தில் இருந்து ஆட்சி செய்து அவர் எனக்கு இட்ட கட்டளையே நிறைவேற்ற போகின்றேன். தாங்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக இருந்து நல்வழிகாட்டுகள் என்றான்.

Two Moustaches — Ethnic Handcarved Brass Diya

Two Moustaches Brass Diya

இறைவனுக்கு தீபராதனை 🪔 — அழகான செம்ம தங்க நிற மிளிரும் மண்ணித்தட்டு. வீட்டுக்கும் பக்தி அனுசரணைக்கும் சிறந்த பரிசு.

  • Ethnic handcarved design with curved handle
  • Standard size — Golden finish
  • Suitable for pooja & home decor
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்