Sri Mahavishnu Info: ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 40 ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 40

ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 40

Sri Mahavishnu Info
ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 40
ராமரிடம் வந்த லட்சுமணன் அவரை வணங்கி நின்றான். தேவலோகத்தில் இந்திரனை வெற்றி பெற்றவனும் யாராலும் வெற்றி பெற முடியாத இந்திரஜித்தை அழித்து விட்டாய் உனது காரியத்தால் விரைவில் சீதையை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது என்று லட்சுமணனை கட்டி அணைத்து பாராட்டினார் ராமர். இந்திரஜித் லட்சுமணனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனிடம் தெரிவித்தார்கள். இதனை ராவணன் நம்பாமல் இந்திரஜித் இருக்கும் இடத்திற்கு சென்றான். அங்கு இந்திரஜித்தின் உயிரற்ற உடலை பார்த்ததும் அங்கேயே மூர்ச்சையாகி விழுந்தான் ராவணன். சுற்றி இருந்ந ராட்சசர்கள் என்ற செய்வது என்று தெரியாமல் விழித்து நின்றார்கள். சிறிது நேரம் கழித்து விழித்த ராவணன் புத்திர சோகத்தில் புலம்பினான். பின்பு கோபத்தில் எழுந்த ராவணன் அனைத்திற்கும் காரணமானவள் இந்த சீதை இவளால் தான் இவை அனைத்தும் நடந்தது. அவளை இப்போதே கொன்று விடுகிறேன் என்று தனது கத்தியை எடுத்துக் கொண்டு அசோகவனத்திற்கு சென்றான் ராவணன்.

ராமரின் சிந்தனையில் இருந்த சீதை தன்னை நோக்கி ராவணன் கத்தியுடன் கோபமாக வருவதை பார்த்ததும் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டாள். ராவணனின் மகன்கள் இல்லையென்றால் தம்பிகள் யாராவது ராம லட்சுமணர்களால் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதை யூகித்த சீதை தன்னை கொன்று விடப்போகிறானோ என்று சந்தேகத்துடன் நின்றாள். அப்போது அங்கு வந்து சேர்ந்த ராவணனின் ஆலோசகனும் அமைச்சருமான சுபார்ச்வன் ராவணனை தடுத்தான். வேதத்தை ஓதி சகல வித்தைகளையும் கற்று உலகத்தையையே வென்ற உங்களுக்கு நிகர் யாரும் இல்லை. இவ்வளவு வலிமை வாய்ந்த நீங்கள் ஒரு மானிடப் பெண்ணை கொன்று அதனால் எற்படும் தோஷத்தையும் அவமானத்தையும் பெற்றுக் கொள்ளாதீர்கள். உங்களை வெல்ல யாராலும் முடியாது. உங்களது கோபத்தை ராமரின் மீது காண்பியுங்கள். இன்று இரவு தாண்டியதும் நாளை அமாவாசை ஆரம்பிக்கிறது. நமக்கு உகந்த நாள். இன்று ஒரு நாள் பொறுத்திருங்கள். பிரம்மா உங்களுக்கு கொடுத்த கவசத்தை இது வரை நீங்கள் உபயோகித்ததில்லை. நாளை அதனை உபயோகித்து யுத்தத்திற்கு சென்று உங்களது கோபத்தை ராம லட்சுமணர்களின் மீது காண்பியுங்கள். நீங்கள் அணிந்திருக்கும் பிரம்மாவின் கவசத்தை மீறி அவர்களின் அம்பு உங்கள் உடலை துளைக்காது. உங்கள் வலிமையை உபயோகித்து அவர்களை அழித்து விடுங்கள். உங்களது புகழ் மேலும் பெருகும். உங்களுக்கு சீதை கிடைத்து விடுவாள் என்று சுபார்ச்வன் யோசனை தெரிவித்தான். ராவணன் சிறிது நேரம் யோசித்து நீங்கள் சொல்வது சரியான யோசனை என்று தனது சேனைத் தலைவர்களை அழைத்தான். நாளை அமாவசை ஆரம்பித்ததும் நான் யுத்தத்திற்கு வருகிறேன். அது வரையில் நீங்கள் இருக்கும் அனைத்து படைகளையும் அழைத்துக் கொண்டு யுத்த களத்திற்கு செல்லுங்கள். ராமரையும் லட்சுமணனையும் நான்கு புறமும் சுற்றி நின்று ஆயுதங்களை அவர்கள் மீது எரிந்து யுத்தம் செய்யுங்கள். நான்கு புறமும் உங்களுடன் யுத்தம் செய்த களைப்பில் ராமர் இருக்கும் போது நான் வந்து ராமரையும் லட்சுமணனையும் அழித்து விடுகிறேன் கிளம்புங்கள் என்று உத்தரவிட்டான். ராவணனின் உத்தரவுப்படி அனைத்து ராட்சச வீரர்களும் யுத்த களத்திற்கு புறப்பட்டார்கள்.

ராமரையும் லட்சுமணனையும் சுற்றி நின்று தாக்கிய ராட்சச படைகளின் மீது ராமரும் லட்சுமணனும் அம்பு மழை பொழிந்து கொன்று குவித்தார்கள். மழை போல் வந்த அம்புகளுக்கு நடுவில் ராமரை ராட்சசர்களால் காண இயலவில்லை. ராட்சசர்கள் தங்களுடன் வந்தவர்கள் ராமரின் அம்புகளால் இறப்பதை பார்த்து பயத்தில் கலங்கி நின்றார்கள். ராவணன் உத்தரவுப்படி ஒரு நாள் தாக்குப்படிக்க முடியாது என்று உணர்ந்த மீதியிருந்த ராட்சசர்கள் இலங்கை நகரத்திற்குள் சிதறி ஓடினார்கள். இலங்கை நகரத்திற்குள் ஒவ்வொரு வீட்டிலும் பெண்களின் அழுகை சத்தம் கேட்ட வண்ணமாக இருந்தது. ராவணனின் அகங்காரத்தினால் அனைவரும் இறந்து விட்டார்களே என்று ராவணனை துற்றியபடி ராட்சச பெண்கள் ஒருவருக்கு வருவர் கூக்குரலிட்டு அழுது புலம்பினார்கள்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்