Sri Mahavishnu Info: ராமாயணம் | 5 சுந்தர காண்டம் | பகுதி – 19 ராமாயணம் | 5 சுந்தர காண்டம் | பகுதி – 19

ராமாயணம் | 5 சுந்தர காண்டம் | பகுதி – 19

Sri Mahavishnu Info
ராமாயணம் | 5 சுந்தர காண்டம் | பகுதி – 19
அனுமன் அசோகவனத்தில் சிம்சுபா மரத்தடியில் சீதை அமர்ந்திருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சீதையிடம் சென்று தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு தாயே தாங்கள் நலமாக இருப்பதை கண்டேன். இப்போது இலங்கையில் நடந்தது அனைத்தும் தாங்கள் அறிவீர்கள். அனைத்தும் தங்களின் சக்தியினால் என்பதை உணர்கிறேன். உங்களால் நெருப்பு சுடாமல் நான் காப்பற்றப்பட்டேன் இது எனது பாக்கியம் என்றார். அதற்கு சீதை உன்னால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. சீக்கிரம் எனது ராமனை அழைத்து வர வேண்டும். இது உன் ஒருவனால் மட்டுமே செய்ய முடியும். என்றாள். விரைவில் சுக்ரீவன் தலைமையில் ஆயிரக்கணக்கான வானரத்துடன் ராமரும் லட்சுமணனும் விரைவில் வந்து சேருவார்கள். விரைவில் நீங்கள் அயோத்திக்கு திரும்பிச் செல்வீர்கள். நான் விரைவில் சென்று வருகிறேன் என்ற அனுமன் அங்கிருந்து கிளம்பினார்.

அனுமன் இலங்கை கடற்கரையின் மிகப்பெரிய மலை ஒன்றின் மீது ஏறி நின்று வில்லில் இருந்து செல்லும் அம்பு போல அங்கிருந்து ஆகாயத்திற்கு தாவினார் அனுமன். தூரத்தில் மகேந்திரகிரி மலை தெரிந்ததும் கடற்கரைக்கு அருகே வந்து விட்டோம் என்பதை உணர்ந்து வெற்றிக்காண கர்ஜனை செய்தார் அனுமன். ஆகாயத்தில் கருடன் பறந்து வருவதைப் போல கர்ஜனை செய்து கொண்டு அனுமன் வருவதைப் பார்த்த வானரங்கள் அனுமன் வந்து விட்டார் என்று ஆரவாரம் செய்தார்கள். இது வரையில் கவலையும் கண்ணீருமாக இருந்த வானரங்கள் அடங்காத மகிழ்ச்சியோடு குதித்தார்கள். அப்போது ஜாம்பவான் அனுமன் வெற்றியுடன் திரும்பி வருகிறான். அதனாலேயே இவ்வாறு கர்ஜனை செய்கின்றான் என்றார். அனைவரும் மரங்களிலும் குன்றுகளில் ஏறி அனுமன் ஆகாயத்தில் பறந்து வருவதைப் பார்த்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் நின்றார்கள். ஆகாயத்திலிருந்து கீழே பார்த்த அனுமன் மலைகள் குன்றுகள் மரங்கள் எல்லாம் வானரங்கள் நிறைந்து நிற்கும் காட்சியை பார்த்து மகிழ்ந்த அனுமன் கீழே இறங்கினார்.

அனுமனைப் பார்த்த மகிழ்ச்சியில் வானரங்கள் அனுமனை சுற்றி நின்று ஒன்றுகூடி ஆரவாரம் செய்தார்கள். ஜாம்பவான் அனுமனை வரவேற்றார். சீதை எப்படி இருக்கிறாள். அவளின் மனநிலை உடல் நிலை எப்படி இருக்கிறது. ராவணன் அவளிடம் எப்படி நடந்து கொள்கிறான். பார்த்தவற்றையும் நடந்தவற்றையும் அப்படியே சொல். சீதையை கண்ட மகிழ்ச்சியான செய்தியை அனைவரும் அனுபவிக்க காத்திருக்கிறோம். நீ சொல்பவற்றை வைத்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்யலாம் என்று ஜாம்பவான் அனுமனிடம் கூறினார். அதற்கு அனுமன் கிளம்பியதில் இருந்து கடலைத் தாண்டும் போது வந்த ஆபத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்து இலங்கையை எரித்தது வரை அனைத்தையும் கூறினார். தன் வாலில் ராட்சசர்கள் பற்ற வைத்த நெருப்பில் இருந்து சீதை தன்னை காப்பற்றியதை திகைப்புடன் சொன்ன அனுமன் சீதை தன்னிடம் சொன்ன வார்த்தைகளை சொல்லும் போது மட்டும் அனுமனின் கண்களில் நீர் வடிந்தது. ராவணனைப் பற்றி சொல் என்று ஜாம்பவன் கேட்டார்.

அனுமன் பேச ஆரம்பித்தார். நெருப்பே நெருங்க முடியாத சீதையை யாராவது தூக்கிச் செல்ல வேண்டும் என்று அருகில் சென்றிருந்தால் கூட அவர்கள் சாம்பலாகிப் போயிருப்பார்கள். ஆனால் ராவணன் சீதையை தூக்கிச் செல்லும் போது அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவ்வளவு தவ பலனை வைத்திருக்கும் வலிமையானவன் அவன். சீதையை தூக்கிச் சென்றதில் ராவணனுடைய தவ பலன்கள் சற்று குறைந்தாலும் இன்னும் சிறிது தவ பலன் அவனை காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் வலிமையுடன் இருக்கின்றான். சீதை நினைத்தால் இந்த ராவணனை நெருப்பால் பொசுக்கி இருப்பாள். அப்படி செய்தால் ராமரின் மதிப்பு குறைந்துவிடும் என்றும் ராமர் தன்னுடைய வலிமையால் ராவணனை வென்று அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் நடப்பது அனைத்தையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருக்கிறாள் என்றார்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்