Sri Mahavishnu Info: ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 48 ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 48
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 48

Sri Mahavishnu Info
ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 48
ராமர் பிரம்மாவின் வார்த்தைகளில் அமைதியடைந்தார். லவ குசர்களை அழைத்துக் கொண்டு அரண்மனை திரும்பினார். அயோத்திக்கு லவ குசர்கள் வந்ததை மக்கள் திருவிழாவைப் போல் கொண்டாடினார்கள். அரண்மனைக்கு திரும்பிய ராமர் தனது குழந்தைகள் தன்னுடன் வந்திருப்பதை நினைந்து மகிழ்ச்சி அடைந்தாலும் இந்த உலகத்தை விட்டு சீதை சென்றது இந்த உலகமே சூன்யமாக இருப்பதைப் போல் உணர்ந்தார். வால்மீகி முனிவர் எழுதிய ராம கானத்தை பிரம்மா சொன்னபடி தினந்தோறும் கேட்க ராமர் ஏற்பாடுகளை செய்தார். அஸ்வமேத யாக குதிரை உலகம் முழுவதும் சுற்றி யாக சாலைக்குள் வந்தது. யாகத்தை நிறைவு செய்த ராமர் யாகம் செய்த அந்தணர்களுக்கும் வேதியர்களுக்கும் யாகத்திற்கு உதவி செய்தவர்களுக்கும் தட்சணைகள் தானங்கள் கொடுத்து வழி அனுப்பி வைத்தார். யாகம் இனிதாக நிறைவு பெற்றது. ராமர் அனைத்து அரசர்களுக்கு எல்லாம் அரசனான சக்ரவர்த்தி என்று தன்னை அறிவித்துக் கொண்டார். ஆனாலும் ராமருக்கு மன அமைதி அருகில் கூட வர மறுத்தது மிகவும் வேதனையை அனுபவித்தார். லவ குசர்கள் இருவருடனும் மேலும் மேலும் பல யாகங்களைச் செய்தார். இரவு பகல் பார்க்காமல் யாகம் செய்யும் அந்தணர்களுக்கும் வேதியர்களுக்கும் கணக்கில்லாத பசுக்களையும் பெரும் செல்வத்தையும் தானம் கொடுத்து திருப்தி செய்தார். ராமரது ஆட்சியில் நாட்டில் காலத்திற்கு சரியாக மழை பொழிந்தது. மக்கள் ஆரோக்யத்துடன் வாழ்ந்தார்கள். எந்த பிராணியும் வியாதியால் கூட வாடவில்லை. யாரும் அகால மரணம் அடையவில்லை. இந்த விதமான துர்சம்பவங்களும் நடைபெறவில்லை. அனைவருக்கும் நன்மை மட்டுமே கிடைத்தது, மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.

ராமரின் ஆட்சிக் காலம் தர்மத்தின் ஆட்சி என்று போற்றப்பட்டது. ராமர் இவ்வாறு பல ஆண்டு காலம் சிறப்பாக ராஜ்யத்தை ஆண்டார். லட்சுமணனுக்கும் பரதனுக்கும் சத்ருக்கனனுக்கும் திருமணம் நடந்தி வைத்தார் ராமர். மூவருக்கும் தலா இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். லட்சுமணனின் மகன்கள் இருவருக்கும் அங்கதன் சந்திரகேது என்று பெயரிட்டார்கள். பரதனின் மகன்களுக்கு தட்சன் புஷ்கரன் என்று பெயரிட்டார்கள். சத்ருக்கனனின் மகன்களுக்கு சுதாகு சுருதசேனன் என்று பெயரிட்டார்கள். பல ஆண்டு காலம் சென்ற பின் பல விதமான தானங்களும் தர்மங்களும் செய்து வாழ்ந்தவளான ராமரின் தாய் கௌசலை சொர்க்கம் சென்றடைந்தாள். அவளைத் தொடர்ந்து சுமித்ரையும் கைகேயியும் சென்றனர். இவர்களுக்கான பித்ரு தானங்களை ராமர் செய்து முடித்தார். ஒரு நாள் ராமர் தனது சகோதரர்கள் மூவரையும் அழைத்தார். உங்களது மூவரின் மகன்களும் கல்வி கற்று தேர்ந்து விட்டார்கள். தர்மம் நீதி முறைகளைத் தெரிந்து கொண்டு விட்டார்கள். அங்கதனும் சந்திர கேதுவும் தற்சமயம் ராஜ்யத்தை ஆளும் தகுதி பெற்று விட்டனர். இவர்களை ஒரு தேசத்திற்கு முடி சூட்டி அரசர்களாக அமர்த்த வேண்டும். எதிரிகளின் தொந்தரவு இல்லாத நலமாக இருக்கும் இடமாகப் பார்த்து இவர்களுக்கு தகுதியான தேசம் எது என்று தெரிந்து கொண்டு வா என்று லட்சுமணனை கேட்டுக் கொண்டார் ராமர்.

ராமர் இவ்வாறு சொன்னதும் அதற்கு பரதன் பதில் கூறினான். இங்கு காரூபதம் என்ற ஒரு அழகிய தேசம் ஆரோக்யமாக இருக்கிறது அங்கு அங்கதனை நியமிக்கலாம். அதே போல் சந்திர காந்தம் என்ற பெயரில் ஒரு தேசம் இருக்கிறது அங்கு சந்திரகேதுவை நியமிக்கலாம் என்றான். பரதன் சொன்னபடியே அங்கதனையும் சந்திரகேதுவையும் அரசனாக்கி முடி சூட்டினார் ராமர். அங்கதனுக்கு லட்சுமணனும் சந்திரகேதுவுக்கு பரதனும் சென்று நிர்வாகம் செய்வதைப் பற்றி சொல்லிக் கொடுத்தார்கள் சில காலம் சென்றது. பரதனும் சத்ருக்கனனும் ராமருக்கு சேவை செய்வதையே தங்கள் பாக்யமாக கருதி வாழ்ந்து வந்தனர். மூவரும் அரசு நிர்வாகத்தை ஒற்றுமையாக செய்து வந்தனர். ஒரு நாள் எமதர்மர் முனிவரின் வேடத்தை தரித்து அரண்மனை வாசலில் வந்து நின்றார். வாசலில் நின்ற முனிவரை லட்சுமணன் வரவேற்றான். லட்சுமணனிடம் முனிவர் ராமரை பார்க்க வேண்டும் அனுமதி பெற்று வா என்று கேட்டுக் கொண்டார்.

🧹 தேங்காய் குச்சி தூய்மை துடைப்பம் (4 Pack)

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் தரமான தேங்காய் குச்சி துடைப்பம். வீட்டில், தோட்டத்தில், வெளிப்புறம் எல்லாமே எளிதாக சுத்தம் செய்யலாம்.

  • 🌿 இயற்கை தேங்காய் குச்சி
  • 💪 பலமாகவும் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்
  • 🧹 தூசி, குப்பை எளிதாக அகற்றும்
  • 🏡 வீடு & வெளிப்புறம் பயன்படுத்தலாம்
  • 📦 4 துடைப்பம் ஒரு செட்
🛒 இப்போது வாங்க

🙏 நம் ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ மூலம் பக்தர்களுக்காக அன்புடன் வழங்கப்படும் ஒரு சிறந்த தயாரிப்பு இது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டரும், நம் சேவைக்கு ஒரு பெரிய ஆதரவாகும் 🙌

🌾 கிராமங்களில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முயற்சி செய்யப்படுகிறது. உங்கள் ஒரு சிறிய ஆதரவு, அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ✨

📦 தற்போது இந்த தயாரிப்பு தமிழ்நாடு முழுவதும் Meesho மூலம் மட்டுமே அனுப்பப்படுகிறது.

📲 தயாரிப்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்கள் WhatsApp எண்ணிற்கு message அனுப்பலாம்.

💬 WhatsAppல் தொடர்பு கொள்ள
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚