Sri Mahavishnu Info: ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 49 ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 49
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 49

Sri Mahavishnu Info
ராமாயணம் | 7 உத்தர காண்டம் | பகுதி – 49
ராமனிடம் சென்ற லட்சுமணன் முனிவர் ஒருவர் வந்திருக்கிறார். யார் என்று தெரியவில்லை. தங்களைக் காண அனுமதி கேட்கிறார் என்று தெரிவித்தான். இதைக் கேட்ட ராமர் முனிவரைக் காண அரண்மனை வாயிலுக்கு வந்தார். மிகுந்த தேஜசுடன் இருந்த முனிவரை கண்ட ராமர் அவருக்கு தக்க மரியாதை செய்து வரவேற்றார். ராமரின் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு அவரை வாழ்த்தினார் முனிவர். ராமர் முனிவரிடம் பேச ஆரம்பித்தார். மகா முனிவரே தாங்கள் வந்த நோக்கத்தைச் சொல்லுங்கள். என்னால் தங்களுக்கு என்ன காரியம் ஆகவேண்டும் தயங்காமல் கேளுங்கள் என்னால் இயன்றதை செய்கிறேன் என்றார் ராமர். அதற்கு முனிவர் நான் உனக்கு ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன். அதனை உன்னிடம் சொல்ல வேண்டுமானால் சொல்வதற்கு முன்பாக நீ எனக்கு ஒரு உத்திரவாதம் கொடுக்க வேண்டும் அதற்கு சம்மதித்தால் சொல்கிறேன் என்றார். ராமரும் சம்மதிக்க நாம் பேச ஆரம்பித்ததும் இடையில் நம்மை யாரும் பார்த்தாலோ நாம் பேசுவதைக் கேட்டாலோ நீ அவர்களை கொன்று விட வேண்டும் என்றார். உடனே ராமர் லட்சுமணனிடம் சென்று வாசலில் நீ காவலுக்கு நில். மற்ற காவல்காரர்களை அனுப்பி விடு. நாங்கள் உள்ளே பேசிக் கொண்டிருக்கும் போது யார் இடையில் வந்தாலும் அவர்களை கொல்வதற்கு கட்டளையிட வேண்டியிருக்கும் ஆகையால் எச்சரிக்கையுடன் காவலுக்கு இரு என்று சொல்லி விட்டு முனிவருடன் தனது தனி அறைக்கு வந்தார். இனி நீங்கள் கொண்டு வந்த தகவலை என்னிடம் சொல்லலாம் நமக்கு இடையில் யாரும் வர மாட்டார்கள். நீங்கள் கொண்டு வந்த தகவலை கேட்க ஆவலாக இருக்கிறேன் சொல்லுங்கள் என்றார்.

ராமரிடம் பேச ஆரம்பித்தார் முனிவர் வேடத்தில் இருந்த யமதர்மர். பிரம்மா என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார். சகலத்தையும் சம்ஹாரம் செய்யும் காலன் நான். உயிராகப் பிறந்தவர்களின் இறுதி காலத்தில் அவர்களை அழைத்துச் சென்று விடுவது எனது தொழில். ராவணனால் உலகில் மக்கள் பயந்து நடுங்கும் போது அவர்களை காக்க விஷ்ணுவாகிய தாங்கள் மனிதனாக பிறக்க திருவுள்ளம் கொண்டீர்கள். நூறாயிரம் வருடங்கள் மேலும் பல நூறு ஆண்டுகள் நீங்கள் இங்கு வாழ்ந்து விட்டீர்கள். இந்த யுகத்திற்கான மனிதர்கள் கணக்கில் பூர்ண ஆயுள் இது. இப்போது நீங்கள் உங்களின் இருப்பிடமான வைகுண்டத்திற்கு திரும்பிச் செல்லும் காலம் நெருங்கி வந்து விட்டது. நீங்கள் உடனடியாக வைகுண்டம் திரும்பலாம் இல்லையென்றால் தங்களின் விருப்பம் போல சில காலம் இங்கு நீங்கள் தங்கியிருக்கலாம் முடிவு உங்களுடையது. இந்த செய்தியை பிரம்மா என்னிடம் சொல்லி அனுப்பினார் என்று சொல்லி முடித்தார் முனிவர் வடிவில் வந்த யமதர்மர்.

ராமர் முனிவரிடம் பேச ஆரம்பித்தார். பிரம்மாவிடமிருந்து அற்புதமான செய்தியை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். பிரம்மாவின் கூற்றுக்கு நான் சம்மதம் தெரிவிக்கிறேன். அரசனுக்காக இந்த பதவியை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு விரைவாக இங்கிருந்து கிளம்புகிறேன் என்றார் ராமர். ராமரும் முனிவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது தவ வலிமை மிக்க துர்வாச முனிவர் அங்கு வந்தார். அவருக்கு தகுந்த மரியாதைகள் செய்து வரவேற்றான் லட்சுமணன். ராமரிடம் முக்கியமான தகவலை சொல்ல வேண்டும் எனவே நான் விரைவில் அவரை பார்க்க வேண்டும் என்று ராமரின் அறைக்குள் செல்ல முயற்சித்தார் துர்வாச முனிவர். இதனைக் கண்ட லட்சுமணன் துர்வாச முனிவரிடம் பணிவாக பேச ஆரம்பித்தான். ராமர் மிகவும் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார். இடையில் யாருடைய குறுக்கிடும் இருக்கக்கூடாது என்று எனக்கு கட்டளை யிட்டிருக்கிறார். எனவே தங்களுக்கு என்ன காரியம் ஆக வேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள். என்னால் இயன்ற வரை தங்களுக்கு செய்து கொடுக்கின்றேன். என்னிடம் சொல்ல இயலாது என்றால் ராமரின் அனுமதிக்காக சிறிது நேரம் காத்திருக்கள் என்று மரியாதையுடன் கூறினான். இதைக் கேட்ட முனிவர் கோபம் கொண்டார். ஆத்திரம் கண்களை மறைக்க கண்களாலேயே லட்சுமணனை எரித்து விடுபவர் போல பார்த்தார்.
OM Mantra Wall Hanging
🏆 Best Seller
🕉️
OM Mantra Wooden Wall Hanging
Decorative Items for Home
★★★★☆
4.3
(1,423 reviews)
🏠
Perfect for Living Room Decor
🎁
Ideal Gift Item
🪵
High Quality MDF Wood
🙏
Religious & Spiritual
Modern Art Design
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்