நம் மனதிற்கு மிகவும் பிடித்தவர்… நம்மை நம்முள் உணர்த்தி பிறவித் தொடரை கடக்க உதவுபவர். தவறான எண்ணங்கள் எழும் போது, மென்மையாக புன்னகைத்து நம்மை நல்வழி படுத்துபவர். தியானத்தில் தடுமாறும் போது உடன் பயணிப்பவர். கோபம் வரும் போது நம்மை அமைதியாக்குபவர். தவறான முடிவுகளிலிருந்து தடுத்து நேர்வழிக்கு அழைப்பவர். புரியாத விஷயங்களை புன்னகையுடன் விளக்குபவர். பிரபஞ்ச நினைவோடு நாம் பயணிக்கும் போது, கைகோர்த்து நம்மோடு இருக்கிறார். அரூபமாக நம்முடனே இருந்து நல்வழியில் வழிநடத்துபவர். துன்பத்தில் கலங்காத நிலை கொடுப்பவர். வெற்றியில் திமிர்க்காமல், பணிவுடன் வாழ வைப்பவர். மற்றவர்களுக்கு உதவ உற்சாகம் ஊட்டுபவர். ஞான சூத்திரங்களை நமக்குள் நன்கு பதிய வைப்பவர். அன்பும் கருணையும் நமக்குள் வளர்த்துப் பயணிக்க வைப்பவர். பிறவியின் நோக்கத்தை விளக்குபவர். நம்முள் அறிவாய் இயங்குவது இறையே, நாமும் இறையின் துகளே என்பதை தெளிவுபடுத்துபவர்.
