பெரியாழ்வார் – Sri Periyazhwar Alwar

பிறந்த நாள்: 9ம் நூற்றாண்டு, குரோதன ஆண்டு, ஆனி மாதம்
நட்சத்திரம்: சுவாதி (வளர்பிறை ஏகாதசி)
கிழமை: திங்கள்
தந்தை: முகுந்தர்
தாய்: பதுமவல்லி
எழுதிய நூல்: பெரியாழ்வார் திருமொழி
பாடிய பாடல்: 473
சிறப்பு: திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்
பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணுசித்தர். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாளுக்கு தினமும் பூமாலை செலுத்தி அர்ப்பணிப்பதை தன் கடமையாகக் கொண்டிருந்தார். மதுரையில் நடந்த சோதனையில் அவர் வேதங்கள் மூலம் "ஸ்ரீமன் நாராயணனே பரன்" என நிரூபித்தார்.
இத்தகைய உன்னதத்தை போற்றும் வகையில், ராஜா அவரை யானை மீது ஏற்றி நகரத்தில் வலம் வரச் செய்தார். அப்போது பெருமாள் தன் தேவியுடன் கருடன் மீது தோன்றி ஆழ்வாருக்கு அருள்புரிந்தார். இந்த தரிசனத்தில் பெரியாழ்வார் அச்சமும் பரிவும் கலந்த உணர்வில் “பல்லாண்டு!” என மங்களாசாசனம் பாடினார்.
இவர் பாடிய பெரியாழ்வார் திருமொழி இன்று வைணவ மரபில் முக்கியமான ஸ்தானத்தில் உள்ளது. பெருமாள் திருப்பதிகளில் 19 கோயில்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.