Sri Andal (ஆண்டாள்) – திருப்பாவை நாயகி

📍 பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
📅 பிறந்த காலம்: 9ம் நூற்றாண்டு, நள ஆண்டு, ஆடி மாதம்
🌟 நக்ஷத்திரம்: பூரம் (வளர்பிறை சதுர்த்தசி)
📆 கிழமை: செவ்வாய்
👨👧 தந்தை: பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை)
📘 எழுதிய நூல்கள்: திருப்பாவை, நாச்சியார் திருமொழி
🎶 பாடல்கள்: 173
✨ சிறப்பு: திருமாலின் மனைவியாகும் பாக்கியம் பெற்றவள். கரும்பார் குழல் கோதை என்ற சிறப்புப்பெயர் பெற்றவர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் துளசி செடியின் அடியில் ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமி அவதாரமாக ஆண்டாள் தோன்றினாள். பெரியாழ்வார் அவளை கண்டு வளர்த்தார். நந்தவன மலர்களை மாலையாகத் தொடுத்து பெருமாளுக்கு அர்ப்பணிக்கின்ற பணியில், ஆண்டாள் அந்த மாலைகளை தாமும் அணிந்து பெருமாளுக்கு அனுப்புவார்.
பெருமாள் கணவனாகவே இருக்க வேண்டும் என்று விரும்பிய ஆண்டாள், மார்கழியில் திருப்பாவை பாடி விரதம் இருந்து, நாச்சியார் திருமொழி மூலம் தனது பிரமிக்கத்தக்க பக்தியையும், காதலையும் வெளிப்படுத்தினார்.
அவர் விருப்பத்தின்படி, ஸ்ரீ ரங்கநாதருடன் திருமணம் நடைபெற்றது. ஆண்டாள் ரெங்கநாதரின் மார்பில் வீற்றிருக்கும் சுடர்க்கொடியாயினாள். 12 ஆழ்வார்களில் பெண்மணியான ஒரே ஆழ்வார் இவரே.
ஆண்டாள் தனியாக மங்களாசாசனம் செய்யாமல், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 10 கோயில்களுக்கு மங்களாசாசனம் செய்துள்ளார். அவரது பாடல்கள் இன்று மார்கழி மாதம் முழுக்க பாடப்படும் முக்கிய பக்திப் பிரபந்தமாக உள்ளன.