Sri Mahavishnu Info: விஷ்ணு புராணம் – பகுதி 65 | Vishnu Purana Ep 65 விஷ்ணு புராணம் – பகுதி 65 | Vishnu Purana Ep 65
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

விஷ்ணு புராணம் – பகுதி 65 | Vishnu Purana Ep 65

Sri Mahavishnu Info
விஷ்ணு புராணம் – பகுதி 65 | Vishnu Purana Ep 65

04_09. ஆயுஸ்ஸின் மற்றொரு புதல்வனான ரஜி என்பவனுக்கு ஐநூறு பிள்ளைகள். அனைவருமே ஒப்பற்ற பராக்ரமங்கள் உடையவர்கள். இந்த ஸமயத்தில் தேவாஸுர யுத்தம் நடந்தது. இவர்களிருவருமே அப்போது ப்ரஹ்மாவிடம் போய் இந்தப் போரில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று வேண்டினர். ப்ரஹ்மா ரஜி எவர் பக்கம் இருந்து யுத்தம் செய்கிறானோ அவர்களே வெற்றி பெறுவர் என்று கூறிவிட்டார். உடனே அஸுரர்கள் முதலில் சென்று ரஜியைத் தங்கள் பக்கம் இருந்து யுத்தம் செய்யுமாறுக் கேட்டனர். அதற்கு ரஜி போரில் வென்றதும் தன்னை அவர்களுக்கு இந்தரனாகக் (தலைவனாக) கொண்டால் இதற்குச் சம்மதம் என்று கூறினான்.


"முதலில் ஒன்றைக் கூறிப் பின் அதை மாற்றிக் கூறும் பழக்கம் எங்களுக்கில்லை. இப்போது சொல்லி விடுகிறோம். ஏற்கனவே ப்ரஹ்லாதன் எங்களுக்கு இந்த்ரன். அவரே இந்த்ரனாய்த் தொடர வேண்டுமென்றே இந்த யுத்தமும். எனவே வெற்றிக்காகப் பொய் சொல்ல நாங்கள் விரும்பவில்லை" என அஸுரர்கள் ரஜியின் நிபந்தனைக்கு மறுப்பு கூறிச் சென்று விட்டனர். இதன்பின் தேவர்கள் இந்த நிபந்தனையை ஏற்று ரஜியைக் கொண்டு அஸுரர்களை வென்றனர். ஆனால் அதன் பின் இந்த்ரன் ரஜியின் கால்களில் விழுந்து "நீங்களே எங்களை பயத்திலிருந்து காத்து உணவளித்தீர்கள். எனவே நீங்கள் எனக்குத் தகப்பன் முறை. புத்ரன் இந்த்ரனாக இருப்பது தகப்பனுக்குப் பெருமை தானே. ஆகையால் நானே இந்த்ரனாகத் தொடர அருள வேண்டும்" என்று வேண்டினான்.


ரஜியும் சிரித்துக் கொண்டு "பகைவர்களே பாதம் பணிந்தால் அருள வேண்டும். உனக்கென்றால் சொல்லவும் வேண்டுமா. நீயே இந்த்ரனாக இரு" என்று கூறி தன் நகரம் திரும்பி விட்டான். ரஜிக்குப் பின் அவன் புத்ரர்கள் அரசாண்டு கொண்டிருந்த போது நாரதர் அவர்களிடம் வந்தார். இந்த்ரனும் உங்கள் தகப்பனுக்குப் புத்ரன் முறையே. எனவே நீங்கள் அவனுக்குப் பங்காளிகள். எனவே உங்களுக்கும் இந்த்ர பதவியில் உரிமையுண்டு என்று போதித்தார். இவர்களும் இதைக் கேட்டுக் கொண்டு இந்த்ரனிடம் சென்று உரிமை கோரினர். மறுத்த இந்த்ரனையும், தேவர்களையும் ஒடுக்கித் தாங்களே இந்த்ர லோகத்தில் அதிகாரம் செலுத்தலாயினர்.


சில நாட்கள் இங்குமங்கும் அலைந்த இந்த்ரன் குரு ப்ருஹஸ்பதியிடம் சென்று தன் கவலையைக் கூறி யாகங்களில் இலந்தைப் பழ அளவிலாவது புரோடாசம் (யாக அடை)கிடைக்க அருள் வேண்டினான். ப்ருஹஸ்பதி முன்னமே என்னிடம் வந்திருந்தால் இந்த நிலையே உனக்கு வந்திருக்காதல்லவா. சரி, போனது போகட்டும். விரைவிலேயே உனக்கு உன பதவியை மீட்டுத்தருகிறேன் என்று கூறி இந்த்ர தேஜஸ் அதிகரிக்கவும், ரஜியின் புத்ரர்களுக்கு அழிவையும் வேண்டி நாள் தோறும் அபிசாரம் செய்ய ஆரம்பித்தார். இதனால் புத்தி பேதலித்த ரஜி புத்ரர்கள் வர்ணாச்ரமங்களை விட்டு, வைதீக மார்கத்துக்கு எதிராக செயல் படத்தொடங்கினர். இவர்கள் இப்படி ஆனதால் இவர்களை இந்த்ரன் எளிதில் வென்று ப்ருஹஸ்பதியின் ஹோமத்தால் பெற்ற தேஜஸ்ஸுடன் மீண்டும் ஸ்வர்க பதவியை அடைந்தான். இந்த இந்த்ரன் தன் பதவியை இழந்து, மீண்டும் அதை அடைந்த கதையைக் கேட்பவர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகாமலும், தர்மாத்மாக்களாகவும் இருப்பார்கள்.


ஆயுவின் மற்றொரு புத்ரனான ரம்பனுக்கு சந்ததியில்லை. க்ஷத்ரவ்ருத்தனுக்கு ப்ரதிக்ஷத்ரனும், அவனுக்கு ஸஞ்ஜயனும், அவனுக்கு ஜயனும், அவனுக்கு விஜயனும், அவனுக்கு க்ருதனும், அவனுக்கு ஹர்யதனனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு அதீனனும், அவனுக்கு ஜயத்ஸேனனும், அவனுக்கு ஸங்க்ருதியும், அவனுக்கு க்ஷத்ரதர்மனும் பிறந்தனர்.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚