Sri Mahavishnu Info: விஷ்ணு புராணம் – பகுதி 67 | Vishnu Purana Ep 67 விஷ்ணு புராணம் – பகுதி 67 | Vishnu Purana Ep 67
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

விஷ்ணு புராணம் – பகுதி 67 | Vishnu Purana Ep 67

Sri Mahavishnu Info
விஷ்ணு புராணம் – பகுதி 67 | Vishnu Purana Ep 67

04_11. யயாதியின் மூத்த மகன் யதுவின் வம்சத்தைப் பற்றிக் கூறுகிறார் மஹரிஷி. இந்த வம்சத்தில் தான் அனைவராலும் அனைத்துப் பலன்களையும் கேட்டுத் துதிக்கப்படும் மஹாவிஷ்ணு அவதரித்தார். பரம பாவனமான இந்த வம்சத்தைக் கேட்பவர்கள் பாவங்களிலிருந்து விடுபடுகின்றனர். யதுவின் புத்ரர்கள் ஸஹஸ்ரஜித், க்ரோஷ்டு, நளன், நஹுஷன் என்ற நால்வர். ஸஹஸ்ரஜித்துக்கு சதஜித்தும், அவனுக்கு ஹைஹயன், ஹேஹயன், வேணுஹயன் என்ற மூன்று புதல்வர்கள். ஹைஹனுக்குத் தர்மனும், அவனுக்குத் தர்மேந்த்ரனும், அவனுக்குக் குந்தி என்பவனும், அவனுக்கு ஸஹஜித் என்பவனும், அவனுக்கு மாஹிஷ்மதீ நகரை நிர்மாணித்த மஹிஷ்மானும், அவனுக்கு பத்ரச்ரேண்யனும், அவனுக்கு துர்தமனும், அவனுக்குத் தனகனும், அவனுக்கு க்ருதவீர்யன், க்ருதாக்னி, க்ருததர்மன், க்ருதௌஜஸ் என்ற நால்வரும் பிறந்தனர்.


இந்த க்ருதவீர்யனுக்குப் பிறந்த அர்ஜுனன் ஆயிரம் கைகளுடன், ஏழு த்வீபங்களுக்கும் அதிபதியாக விளங்கினான். அத்ரி மஹரிஷியின் குலத்துதித்த தத்தாத்ரேயரைத் துதித்து ஆயிரம் கைகள், அதர்மத்தில் இஷ்டமில்லாமை, ஸ்வதர்மப் பற்று, யுத்த வெற்றி, தர்ம ஆட்சி, அனைத்துலகங்களிலும் புகழ் பெற்றவனிடமிருந்து மரணம் எனப் பல வரங்களைப் பெற்றிருந்தான். பத்தாயிரம் யாகங்களைச் செய்து, தானம், தவம், பணிவு, கேள்வி, அறிவு என்று எதிலும் எவரும் தனக்கு ஈடின்றி அனைத்துலகிலும் நல்லாட்சி புரிந்தான். ராஜா என்ற சொல் அப்போது வேறெவரையும் குறிக்காது இவனுக்கு உரித்ததாக இருந்தது. எவரும் தன் பொருளை இழந்ததில்லை இவன் காலத்தில். ஆரோக்யம், செல்வம், யோகம், பலம், வீர்யங்களுடன் எண்பத்தையாயிர வருஷ காலம் இவன் அரசாண்டான்.


ஒரு ஸமயம் மாஹீஷ்மதியில் நர்மதையில் மனைவிகளோடும், மதுவோடும் களித்திருந்த போது தேவ, தைத்ய, கந்தர்வர்களை வென்றிருந்த ராவணன் திக் விஜயமாக அங்கு வந்து இவனோடு யுத்தம் புரிந்தான். அவனை விளையாட்டாகச் சிறையிலிட்டான் இந்த கார்த்தவீர்யார்ஜுனன். இவன் விடுவிக்கும் வரை சிறையிலேயே வருந்தினான் ராவணேச்வரன். இறுதியில் பரசுராமரால் கொல்லப்பட்ட இவனுக்கு சூரன், சூரஸேனன், வ்ருஷஸேனன், மது, ஜயத்வஜன் என்பவர் முதலாக நூறு புத்ரர்கள். ஜயத்வஜனுக்குத் தாளஜங்கன் என்பவனும், அவனுக்கு வீதிஹோத்ரன், பரதன் முதலான தாளஜங்கர் என்ற நூறு பிள்ளைகளும் பிறந்தனர். பரதனுக்கு வ்ருஷனும், அவனுக்கு மதுவும், அவனுக்கு வ்ருஷ்ணியும் பிறந்தனர். இவனாலேயே இந்தக் குலத்தவர்க்கு வ்ருஷ்ணிகள் என்ற பெயர் வந்தது. மதுவின் வம்சம் என்பதால் மதுக்கள் என்றும், யதுவின் வம்சத்தவர் என்பதால் யாதவர் என்ற பெயரும் வந்தது.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚