Sri Mahavishnu Info: விஷ்ணு புராணம் – பகுதி 74 | Vishnu Purana Ep 74 விஷ்ணு புராணம் – பகுதி 74 | Vishnu Purana Ep 74
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

விஷ்ணு புராணம் – பகுதி 74 | Vishnu Purana Ep 74

Sri Mahavishnu Info
விஷ்ணு புராணம் – பகுதி 74 | Vishnu Purana Ep 74

04_18. சர்மிஷ்டைக்குப் பிறந்த யயாதியின் நான்காம் புத்ரன் அனுவிற்கு ஸபாநலன், சக்ஷு, பரமேஷு என்ற மூன்று பிள்ளைகள். ஸபாநலன், காலாநலன், ஸ்ருஞ்ஜயன், புரஞ்ஜயன், ஜனமேஜயன், மஹாசாலன், மஹாமனஸ் என இவன் வம்சம் வளர்ந்தது. மஹாமனஸுக்கு உசீநரன், திதிக்ஷு என்ற இருவரும், இதில் உசீநரனுக்கு சிபி, ந்ருகன், நவன், க்ருமி, வர்மன் என்ற ஐவரும், சிபிக்கு ப்ருஷதர்பன், ஸுவீரன், கேகயன், மத்ரகன் நால்வரும் பிறந்தனர். திதிக்ஷுவுக்கு உசத்ரதனும், அவனுக்கு ஹேமனும், அவனுக்கு ஸுதபஸ்ஸும், அவனுக்குப் பலியும் பிறந்தனர். இவன் மனைவியினிடமே தீர்க்கதமஸ் என்ற மஹரிஷி அங்கன், வங்கன், களிங்கன், ஸுஹ்மன், பௌண்ட்ரன் என்ற ஐவரை உண்டாக்கினார். இவர்கள் தங்கள் பெயரிலேயே ராஜ்யங்களை ஆண்டனர்.


அங்கன், அணபானன், திவிரதன், தர்மரதன், சித்ரரதன்(ரோமபாதன்), சதுரங்கன், ப்ருதுலாக்ஷன், சம்பன், ஹர்யங்கன், பத்ரரதன், ப்ருஹத்ரதன், ப்ருஹத்கர்மா, ப்ருஹத்பானு, ப்ருஹன்மனஸ், ஜயத்ரதன், விஜயன், த்ருதி, த்ருதவ்ரதன், ஸத்யகர்மா, அதிரதன், கர்ணன், வஸுஷேணன் என அங்க வம்சம் வளர்ந்தது. இதில் ஒருவனான ரோமபாதனுக்கு(சித்ரரதன்) அஜனின் புத்ரனான தசரதன் நண்பன். எனவே குழந்தைப்பேறு இல்லாமல் வெகுகாலம் ரோமபாதன் இருந்த போது தசரதன் தன் பெண்ணான சாந்தாவை இவனுக்குப் பெண்ணாகத் தந்தான். அதேபோல் சம்பன் என்பவன் சம்பா என்ற நகரை நிர்மாணித்தவன்.


இந்த வம்சத்தில் ஒருவனான ஜயத்ரதன் ப்ராஹ்மணப் பெண்ணுக்கும், க்ஷத்ரியனுக்கும் பிறந்த ஒரு பெண்ணையே மணந்தான். ஒரு பெண் தன்னை விட மேல் வர்ணத்தைச் சேர்ந்தவனை மணந்தால் அவர்கள் வம்சம் அனுலோம ஜாதி என்றும், ஒரு பெண் தன்னை விட கீழ் வர்ணத்தைச் சேர்ந்தவனை மணந்தால் அவர்கள் வம்சம் ப்ரதிலோம ஜாதி என்றும் அழைக்கப்படும். இந்த விதத்தில் ஜயத்ரதன் மணந்த பெண் ப்ரதிலோம ஜாதியின் பிரிவான ஸூத (தேரோட்டி) ஜாதியைச் சேர்ந்தவள். இதனால் ஜயத்ரதன் வரை க்ஷத்ரிய ஜாதியாக இருந்த இந்த வம்சம், விஜயன் முதல் ஸூத ஜாதியானது. இந்த ஸூத ஜாதியைச் சேர்ந்த அதிரதன் தான் கன்னிகையாக இருந்த குந்திக்கு ஸூர்யனின் அனுக்ரஹத்தாலும், துர்வாஸரிடம் பெற்ற மந்த்ரஸித்தியாலும் பிறந்து, அவளால் கைவிடப்பட்ட கர்ணனைக் கங்கைக் கரையில் ஓர் கூடையில் கண்டெடுத்து தன் பிள்ளையாக வளர்த்தவன்.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚