Sri Mahavishnu Info: எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 22 எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 22
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 22

Sri Mahavishnu Info
(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)

அனுப்பியவர்:வனிதாசக்திவேல், புதுக்கோட்டை மாவட்டம்.

எத்தனயோ பக்தர்களுக்கு அருள் வழங்கும் பெருமாள் என் வாழ்க்கையில் இப்போது வரை துணை வந்து கொண்டிருக்கிறார். அதில் ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்கிறேன்.

அத்தி வரதர் தரிசனம். என் கணவரிடம் அத்தி வரதரை குடும்ப சகிதமாக தரிசித்து வர வினவினேன். அவரோ வயதான என் தாய், தந்தை, பிள்ளைகளை விட்டு விட்டு நாம் மட்டும் செல்லலாம் என்றார். நானோ நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அவரை கண்டிப்பாக தரிசனம் செய்ய அனைவரும் செல்லத் தான் வேண்டும் என்று பெருமாள் மீது பாரத்தை போட்டு கிளம்ப தயாராகினோம். கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்னதாக கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பக்தர்கள் என செய்திகள் வரவே என் கணவர் மிகவும் பயந்தார். அவரிடம் நம்பியவர்களை ஒரு பொழுதும் நாராயணன் கைவிட மாட்டார் என்று கூறி பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் கிளம்பினோம். என் கணவரோ கூட்டம் அதிகமாக இருந்தால் வாசலை தொட்டு வணங்கி வந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வந்தார். என் பெருமாள் நிச்சயம் தரிசனம் தந்து அனுப்புவார் என்ற நம்பிக்கையில் சென்றேன். கோவிலை நெருங்கும் வரை மனமெங்கும் நாராயணன் நாமம் தான். என்ன அதிசயம் கோவில் வாசலில் கூட்டம் குறைவு. என் கணவர் வயதான தாய், தந்தையுடன் ஒரு வரிசையிலும், நானும் குழந்தைகளும் என் தோழியுடன் ஒரு வரிசையில் சென்றோம்.கூட்ட வரிசையில் இடையில் பிரிந்தாலும் பெருமாளை காணும் முன் வரிசைகளை ஒன்றாக்கி என் பெருமாள் எங்களை குடும்பத்துடன் தரிசனம் செய்ய வைத்தார் ‌. வெறும் இரண்டு மணிநேர வரிசையில் கிடைத்த தரிசனத்தை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அதோடு அவரை வணங்கிய பிறகு தங்க இடம் இல்லாமல் இருந்த எங்களுக்கு (அனைத்து ஹோட்டல்களும் HOUSE FULL) ஒரு பெருமாள் பக்தரது வீட்டில் தங்கும் பாக்கியமும் கிட்டியது. அவரை நம்பி வந்த எங்களுக்கு நல்ல தரிசனம் தந்து ,உண்ண உணவு ,தங்க இடம் தந்து பயணத்தை சிறப்பித்த என் பெருமாளின் கருணையை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

என் பெருமாளை நம்பினோர் கெடுவதில்லை. 

நம்பியவரை ஒருபொழுதும் அவர் கைவிடுவதுமில்லை.

நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம்.
  • ➤ உங்கள் பக்தி அனுபவம் பகிர
  • SOPL-OLIVEWARE Teso Pro Lunch Box

    SOPL-OLIVEWARE Teso Pro Lunch Box 🍱

    3 மைக்ரோவேவ் பாதுகாப்பான கன்டெய்னர்கள் + பிக்கிள் பாக்ஸ் + ஸ்டீல் வாட்டர் பாட்டில் 🚰
    தினசரி பயன்பாட்டிற்கு சிறந்தது ✅

    🔗 Amazon-ல் வாங்க
    💜

    பக்தர்கள் சொல்கிறார்கள்

    இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
    🌸 ரமேஷ், மதுரை

    இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
    🌼 சிந்து, தஞ்சாவூர்

    இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
    🌺 கிருஷ்ணன், கோவை

    என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
    🌹 சுகந்தி, சென்னை

    நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
    💠 லலிதா, ஈரோடு

    இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
    🌿 அருண், திருநெல்வேலி

    🛕
    108 ஆலயம்
    📜
    பிரபந்தம்
    🎧
    ஸ்லோகம்
    📚
    குறிப்புகள்