Sri Mahavishnu Info: கல்லோடு ஆயினும் சொல்லி அழு கல்லோடு ஆயினும் சொல்லி அழு
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

கல்லோடு ஆயினும் சொல்லி அழு

Sri Mahavishnu Info
ஒரு சிலர் பக்தி, கோயில், பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறார்கள்...

ஆனால் இன்னும் சிலர், "சாமியாவது, பூதமாவது, நடக்குறது தான் நடக்கும் என்கிறார்கள்."

எது சரி..????

ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரர், ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்த போது, அவரைக் கண்ட விவசாயி ஒருவன் இதே கேள்வியைக் கேட்டான்.

ஆதிசங்கரர் அவனிடம், "மகனே, இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்து போக உதவி செய். நான் உனக்கு பதில் அளிக்கிறேன்!" என்றார்...!!!!!

அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனை மரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான்.

சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தார். 

அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தார்.

அதற்கு அவன், "எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லணும்?" என்றான்.

" ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?" என கேட்டார்...

"மரப் பாலத்தை கடக்கிற போது, திடீர்னு வழுக்கி விழுந்தால், பிடிச்சுக்கத்தான் சுவாமி!"

"உன் கேள்விக்கும் அது தான்பா விடை! அவனவன் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால் தான், பத்திரமான இடத்தை அடைய முடியும்.
ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால், அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, கடவுளின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றார் ஆதிசங்கரர்...!!!

நாம் வழி படவும், வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள்; நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும் அவர் வேண்டும்.

எனவே தான் "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" என்பது முன்னோர்கள் வாக்கு..!!

ஒரு கையில் கடவுள்!
மறு கையில் கடமை! 

இப்படி இருப்பவர்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை...!!!
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்