Sri Mahavishnu Info: எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்? எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்?
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்?

Sri Mahavishnu Info
ஒரு ஞானியிடம் இரண்டு பேர்  வந்தனர்.. 

ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்..
"நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன்.. 
என் மனம் அதையே நினைத்துத் துடிக்கிறது.. 
நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?.."

அடுத்தவன்  ஞானியிடம் சொன்னான்.. 
"நான் இவ்வளவு பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை!...

...சின்னச் சின்னப் பொய்கள்..
...சிறு ஏமாற்றுகள்..
...இப்படி நிறைய செய்துள்ளேன்... 
தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?..."

ஞானி சிரித்தார்.

முதல் ஆளிடம்,

"நீ போய் பெரிய பாறை ஒன்றை தூக்கி வா!.." என்றார்..

இரண்டாமவனிடம், 

"நீ போய் இந்த கோணிப்பை நிறைய சிறுசிறு கற்களை பொறுக்கிக்கொண்டு வா!.." என்றார்...

இருவரும் அவ்வாறே செய்தனர்...

முதலாமவன்  பெரிய பாறையைத் தூக்கி வந்தான்.. 

இரண்டாமவன் கோணிப்பை முழுவதும் சிறுசிறு  கற்களை பொறுக்கிக்கொண்டு வந்தான்.. 

இப்போது ஞானி அவர்களைப் பார்த்துச் சொன்னார்..

"நல்லது... 
இருவரும், கொண்டு வந்தவற்றை எந்த இடத்திலிருந்து எடுத்தீர்களோ... 
அங்கேயே திரும்பவும்  வைத்துவிட்டு வாருங்கள்!.." 

முதல் ஆள் பாறையை எங்கிருந்து எடுத்தானோ அங்கேயே வைத்து விட்டு வந்தான்.... 

இரண்டாமவன் கிளம்பிய வேகத்திலேயே, குழப்பத்துடன் திரும்பி வந்து, தயக்கத்துடன்... 

"...இவ்வளவு கற்களை நான்  எப்படிச் சரியாக அவை இருந்த இடத்தில் வைக்க முடியும்?.."  என ஞானியிடம்  கேட்டான்..

ஞானி பதிலளித்தார்..

"அவன் பெரிய தவறு செய்தான்... 
அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு,  
மாற்றுப் பரிகாரம் செய்ய முற்படுகிறான்..

அவன் செய்த பெரிய பாவத்திலிருந்து ஒருவேளை, அவன் மீண்டு விடலாம்.. 

...ஆனால் நீ... 
சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும், அவை பாவம் என்று கூட உணராதவன்.. 

யாரெல்லாம் உன்னால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுகூட உனக்கு நினைவிருக்காது...

சிறுதுளி பெருவெள்ளம்... 

பாபங்களில் சிறிதோ பெரியதோ, 
அவற்றுக்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்!..

ஆனால், செய்த பாபத்திற்காக மனதார வருந்தி, மன்னிப்பு கேட்கும்போது,

...கிடைக்கவிருக்கும் தண்டனையின் வீரியத்தை, தாங்கும் சக்தியை இறைவன் உனக்கு வழங்கிவிடுவான்..

மகனே!..அதனால் யோசித்துச் செயல்படு..."
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏 DONATE Support Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚