Sri Mahavishnu Info: மகாபாரதம் | 10 சௌப்தீக பருவம் | பகுதி -2 மகாபாரதம் | 10 சௌப்தீக பருவம் | பகுதி -2
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

மகாபாரதம் | 10 சௌப்தீக பருவம் | பகுதி -2

Sri Mahavishnu Info

மகாபாரதம் | 10 சௌப்தீக பருவம் | பகுதி -2
பாஞ்சால நாட்டு இளவரசன் திருஷ்டத்யும்னனும் திரௌபதியின் செல்வர்கள் ஐவரும் பாண்டவர்களின் படைகளும் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி யுதிஷ்டிரனிடன் எடுத்துச் செல்லப்பட்டது அதை கேட்டு அவன் ஸ்தப்பித்துப்போனான். பாண்டவ சகோதரர்களும் திகைத்துப் போயினர். இந்த மகாபாரதப் போரின் விளைவாக தோல்வியுற்றவர்களும் வெற்றி அடைந்தவர்களும் ஏறத்தாழ ஒரே பரிதாபகரமான நிலையில் இருந்தார்கள். இந்த விபத்து நடந்த இடத்திற்கு திரௌபதி அதிவிரைவில் அழைத்து வரப்பட்டாள். தன் செல்வர்கள் மடிந்த கிடந்ததை பார்த்த அவள் மயங்கி கீழே விழுந்து கதறி அழுதாள். அதே வேகத்துடன் அவள் பேச ஆரம்பித்தாள். அஸ்வத்தாமனை கொல்ல முடியாது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவனை வெட்டி தள்ள வேண்டும். இல்லையெனில் அவன் சிரசில் அணிந்திருக்கும் மணியை பிருங்கி அவனை அவமானப்படுத்த வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நிகழும் வரை நான் பட்டினி கிடப்பேன் என்றாள் அவனைத் தேடிப் பிடிக்க பீமன் உடனே கிளம்பினான்.

வல்லமை பெற்ற அஸ்வத்தாமனை எளிதில் பிடிக்க பீமனால் இயலாது என்பதை அறிந்த கிருஷ்ணரும் அர்ஜூனனும் பீமனோடு கிளம்பினார்கள். கங்கை கரையில் முனிவர்களோடு முனிவராக வியாசருடன் இருந்த அஸ்வத்தாமனை கண்டார்கள். பீமன் அவன் மீது பல அம்புகளை செலுத்தினான். அஸ்வத்தாமன் பாண்டவர்களின் வம்சம் அழிந்து போக வேண்டும் என்று எண்ணி பிரமாஸ்திரத்தை செலுத்தினான். பதிலுக்கு அர்ஜூனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான். இரண்டும் மோதுமாயின் உலகம் அழியும் என அறிந்த வியாசரும் நாரதரும் உலகை காக்க நினைத்தனர். அர்ஜூனனிடம் பிரம்மாஸ்திரத்தை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு கட்டளை இட்டனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ஜூனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான். அஸ்வத்தாமனுக்கு பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்து கொள்ளும் ஆற்றல் இல்லை.

பிரமாஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும். அஸ்வத்தாமன் பாண்டவர் வம்சத்தையே பூண்டோடு ஒழிக்க எண்ணி பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும் என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான். ஆனால் கிருஷ்ணரின் அருளால் உத்திரையின் கரு காப்பாற்றப்பட்டது. சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கிருஷ்ணர் பழித்தார். தலையில் இருந்த மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான். அறிவிலியே நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டு காட்டில் தன்னந்தனியாய் பல ஆயிரம் ஆண்டுகள் விலங்காகவும் மானுடாகவும் தவிப்பாயாக என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர். உத்தரையின் கருவில் உள்ள குழந்தை நல்லபடியே பிறந்து பரீட்சித் என்னும் பெயருடன் இந்நில உலகை ஆளுவான் என்று வியாசர் ஆசி கூறினார். சாபப்படி அஸ்வத்தாமன் காட்டிற்கு சென்றான்.

கிருஷ்ணர் அர்ஜுனன் பீமன் மூவரும் பாசறைக்கு திரும்பிச்சென்று தாங்கள் கைப்பற்றி வந்த அஸ்வத்தாமனின் மணியை திரௌபதியிடம் ஒப்படைத்தார்கள். துரியோதனன் அழிந்து விட்டான். உன்னுடைய சபதம் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது என்று தெரியப்படுத்தினார்கள் திரௌபதி ஒருவாறு மன அமைதி அடைந்தாள்.  

சௌப்தீக பருவம் முடிந்தது அடுத்து ஸ்திரி பருவம்.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚