Sri Mahavishnu Info: ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 27 ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 27
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 27

Sri Mahavishnu Info
ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 27
ராமரிடம் வந்த நீலன் தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டான். பிரஹஸ்தனை கொன்ற நீலனை ராமர் பாராட்டி வாழ்த்தினார். யுத்த களத்தில் சிதறி ஓடிய பிரஹஸ்தனின் படை வீரர்கள் ராவணனிடம் நடந்ததை தெரிவித்தார்கள். தேவலோகத்தில் உள்ள இந்திரனையும் அவனது படைகளையும் பிரஹஸ்தன் வெற்றி பெற்றிருக்கிறான். அனைத்து தேவர்களும் கந்தர்வர்களும் ஒன்றாக சேர்ந்து வந்தால் கூட தனியாக நின்று வெற்றி பெறக்கூடிய வலிமையான வீரன் பிரஹஸ்தன். அவன் வானரங்களால் கொல்லப்பட்டானா என்று ராவணன் கவலையின் ஆழ்ந்தான். சபையில் இருப்பவர்கள் அனைவரும் தரையை பார்த்தவாறு அமைதியுடன் இருந்தார்கள். சிறிது நேரத்தில் ராவணன் கோபத்தில் கர்ஜித்தான். இனி பொறுமையாக இருக்க முடியாது. அனைவரும் யுத்தத்திற்கு தயாராகுங்கள். யுத்தத்தில் அனைத்து படைகளுக்கும் நானே தலைமையேற்று வருகிறேன். சில கனங்களில் அந்த ராம லட்சுமணர்களையும் வானர வீரர்களையும் அழித்து விடுகிறேன் என்று ராவணன் யுத்த களத்திற்கு கிளம்பினான். யுத்த களத்திற்கு அனைத்து சேனாதிபதிகளுடன் வந்த ராவணன் ராட்சச படை வீரர்களிடம் சில படை தளபதிகள் இந்த யுத்தத்தில் இறந்து விட்டார்கள். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வானர கூட்டம் நமது நகரத்திற்குள் நுழைந்து விடுவார்கள். எனவே பயம் இல்லாதவர்கள் மட்டும் யுத்தத்திற்கு வாருங்கள். பயம் இருப்பவர்கள் நமது கோட்டை மதில் சுவர் மேல் நின்று கோட்டைக்கு பாதுகாப்பாக இருந்து வானரங்கள் யாரும் உள்ளே நுழையாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டான்.

ராமருக்கு இது வரை இல்லாத அளவு சங்கு பேரிகை நாதமும் ராட்சசர்களின் ஆரவாரமும் கேட்டது. ராட்சசர்களின் படை இது வரை காணாத கூட்டத்துடன் பெரிய தலைமையுடன் வருவதை அறிந்த ராமர் வந்து கொண்டிருப்பது யார் என்று விபீஷணனிடம் கேட்டார். அதற்கு விபீஷணன் ராவணன் தனது அனைத்து படை தளபதிகள் வீரர்களுடன் வந்து கொண்டிருக்கிறான். நடுவில் இருக்கும் தங்க ரதத்தில் பெரிய மலை போல் சூரிய பிரகாசமாக வந்து கொண்டிருப்பவன் ராவணன். அவனை சுற்றி வந்து கொண்டிருப்பவர்கள் அவனது முதன்மை தளபதிகளான அதிகாயன் பிசாசன் கும்பன் மற்றும் அவனது மகன்களான நாராந்தகன் இந்திரஜித் ஆகியோர் என்றான். அதற்கு ராமர் ராவணனைப் போல் பிரகாசமாக தேஜசாக தேவலோகத்திலும் யாரையும் காண முடியாது. சீதையை பிரிந்திருந்த எனது துக்கத்தையும் இத்தனை நாளாக சேர்த்து வைத்திருந்த எனது கோபத்தையும் மொத்தமாக சேர்த்து மகாபாவியான இவன் மேல் இப்போது காண்பிக்க போகிறேன் என்ற ராமர் தனது வில்லையும் அம்பையும் எடுத்து யுத்தத்திற்கு தாயாரானர்.

ராமர் தனது அம்புகளை ராட்சச படைகள் மீது விட்டு அவர்களை கொன்று குவித்துக் கொண்டு ராவணனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். ராவணன் தனது வில் அம்பை எடுத்தான். தனது கோட்டைக்குள் நுழைந்து தனது கீரிடத்தை தள்ளிவிட்ட சுக்ரீவன் மீது அம்பை எய்தான் ராவணன். சுக்ரீவனின் உடலை ராவணனின் அம்பு துளைத்துச் சென்றது. சுக்ரீவன் தனது உணர்வை இழந்து தரையில் விழுந்தான். இதனை கண்ட ராட்சச வீரர்கள் ஆரவாரம் செய்தார்கள். சுக்ரீவனின் தளபதிகளான வலிமையுள்ள வானரங்கள் ஒன்று சேர்ந்து பெரிய மலைகளையும் மரங்களையும் ராவணன் மீது தூக்கி எறிந்தார்கள். அனைத்தையும் ராவணன் தனது அம்பினால் துளாக்கி தனது அருகில் வரவிடாமல் பார்த்துக் கொண்டான். இந்நேரத்தில் சுக்ரீவனை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற வானரங்கள் அவருக்கு தேவையான உதவியை செய்தார்கள். ராவணன் வானர வீரர்களை கொன்று குவிக்கத் தொடங்கினான். அதனால் யுத்த களத்தில் பின் வாங்கிய வானர படைகள் ராமரிடம் வந்து செய்தியை கூறினார்கள். ராமர் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்வதற்காக அவனை நோக்கி முன்னேறிச் செல்ல முற்பட்டார். அப்போது லட்சுமணன் ராமரின் முன் வந்து ராவணனை எதிர்த்து யுத்தம் செய்ய தாங்கள் செல்ல வேண்டாம். நான் செல்கிறேன். எனக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.

🧹 தேங்காய் குச்சி தூய்மை துடைப்பம் (4 Pack)

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் தரமான தேங்காய் குச்சி துடைப்பம். வீட்டில், தோட்டத்தில், வெளிப்புறம் எல்லாமே எளிதாக சுத்தம் செய்யலாம்.

  • 🌿 இயற்கை தேங்காய் குச்சி
  • 💪 பலமாகவும் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்
  • 🧹 தூசி, குப்பை எளிதாக அகற்றும்
  • 🏡 வீடு & வெளிப்புறம் பயன்படுத்தலாம்
  • 📦 4 துடைப்பம் ஒரு செட்
🛒 இப்போது வாங்க

🙏 நம் ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ மூலம் பக்தர்களுக்காக அன்புடன் வழங்கப்படும் ஒரு சிறந்த தயாரிப்பு இது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டரும், நம் சேவைக்கு ஒரு பெரிய ஆதரவாகும் 🙌

🌾 கிராமங்களில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முயற்சி செய்யப்படுகிறது. உங்கள் ஒரு சிறிய ஆதரவு, அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ✨

📦 தற்போது இந்த தயாரிப்பு தமிழ்நாடு முழுவதும் Meesho மூலம் மட்டுமே அனுப்பப்படுகிறது.

📲 தயாரிப்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்கள் WhatsApp எண்ணிற்கு message அனுப்பலாம்.

💬 WhatsAppல் தொடர்பு கொள்ள
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚